மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர்
“மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத்தில் கட்டப்பட்டிருந்த கொடிகள் அசைந்தன. 1
சீதையை மணக்க இராமன் வருகின்றான் என்று அரம்பையர் விசும்பில் ஆடுவது போலக் கொடிகள் அசைந்தாடின. 2
மிதிலை மாடத்தில் வானளாவப் பறந்த வெண்ணிறக் கொடிகள் மேகத் துளிகளால் நனைந்துகொண்டும், அகில் புகைகளால் காய்ந்துகொண்டும் அசைந்தாடின. 3
மன்மதன் அமுத மையில் தோய்த்துச் சீதையை எழுதினான். முடியவில்லை. இத்தகைய சீதை திருமகளை ஏந்திக்கொண்டிருக்கும் தாமரை மலர் போல் விளங்கிய மிதிலை மூவரும் கண்டனர். 4
அகத்தியன் உண்ட கடல் போல் அகன்ற தெரு. வானத்து மீன்கள் போல அதில் மாடி வீடுகள். மைந்தரும், மகளிரும் வேண்டாம் என்று களைந்த அணிகலன்கள் கிடக்கும் மாடிவீடுகள். இவை இருக்கும் தெருவில் மூவரும் சென்றனர். 5
'மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள்' என்று, செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று அழைப்பது போன்றது அம்மா! 1
நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணிக் கொடிகள் எல்லாம்,
'தரம் பிறர் இன்மை உன்னி, தருமமே தூது செல்ல,
வரம்பு இல் பேர் அழகினாளை, மணம் செய்வான் வருகின்றான்' என்று,
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின், ஆடக் கண்டார். 2
பகல் கதிர் மறைய, வானம் பாற்கடல் கடுப்ப, நீண்ட
துகில் கொடி, மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற,
முகில்-குலம் தடவும் தோறும் நனைவன, முகிலின் சூழ்ந்த
அகில்-புகை கதுவும் தோறும் புலர்வன, ஆடக் கண்டார். 3
ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து, 'அவயவம் அமைக்கும் தன்மை
யாது?' எனத் திகைக்கும் அல்லால், மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே, திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும், பொன் மதில், மிதிலை புக்கார் 4
சொற்கலை முனிவன் உண்ட சுடர் மணிக் கடலும், துன்னி
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல,
வில் கலை நுதலினாரும், மைந்தரும், வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட நெடுந் தெருஅதனில் போனார். 5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 10. மிதிலைக் காட்சிப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
“மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத்தில் கட்டப்பட்டிருந்த கொடிகள் அசைந்தன. 1
சீதையை மணக்க இராமன் வருகின்றான் என்று அரம்பையர் விசும்பில் ஆடுவது போலக் கொடிகள் அசைந்தாடின. 2
மிதிலை மாடத்தில் வானளாவப் பறந்த வெண்ணிறக் கொடிகள் மேகத் துளிகளால் நனைந்துகொண்டும், அகில் புகைகளால் காய்ந்துகொண்டும் அசைந்தாடின. 3
மன்மதன் அமுத மையில் தோய்த்துச் சீதையை எழுதினான். முடியவில்லை. இத்தகைய சீதை திருமகளை ஏந்திக்கொண்டிருக்கும் தாமரை மலர் போல் விளங்கிய மிதிலை மூவரும் கண்டனர். 4
அகத்தியன் உண்ட கடல் போல் அகன்ற தெரு. வானத்து மீன்கள் போல அதில் மாடி வீடுகள். மைந்தரும், மகளிரும் வேண்டாம் என்று களைந்த அணிகலன்கள் கிடக்கும் மாடிவீடுகள். இவை இருக்கும் தெருவில் மூவரும் சென்றனர். 5
'மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள்' என்று, செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று அழைப்பது போன்றது அம்மா! 1
நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணிக் கொடிகள் எல்லாம்,
'தரம் பிறர் இன்மை உன்னி, தருமமே தூது செல்ல,
வரம்பு இல் பேர் அழகினாளை, மணம் செய்வான் வருகின்றான்' என்று,
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின், ஆடக் கண்டார். 2
பகல் கதிர் மறைய, வானம் பாற்கடல் கடுப்ப, நீண்ட
துகில் கொடி, மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற,
முகில்-குலம் தடவும் தோறும் நனைவன, முகிலின் சூழ்ந்த
அகில்-புகை கதுவும் தோறும் புலர்வன, ஆடக் கண்டார். 3
ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து, 'அவயவம் அமைக்கும் தன்மை
யாது?' எனத் திகைக்கும் அல்லால், மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே, திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும், பொன் மதில், மிதிலை புக்கார் 4
சொற்கலை முனிவன் உண்ட சுடர் மணிக் கடலும், துன்னி
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல,
வில் கலை நுதலினாரும், மைந்தரும், வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட நெடுந் தெருஅதனில் போனார். 5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 10. மிதிலைக் காட்சிப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment