![]() |
1000 கண் பெற்ற இந்திரன் |
மிதிலை நாட்டு வளம்
முத்து, வயிரம், மணி, பவளம் அணிந்த கழுத்தும், பூ மிகுந்த கூந்தலும், பூக மரங்களும் கொண்டதாக மிதிலை நாடு விளங்கியது. 7-1
இந்திரன் பெற்ற சாபம்
மேனி முழுவதும் 1000 பெண்குறித் துளைகளுடன் காணப்பட்ட இந்திரனைக் கண்ட தேவர்களும், பிரமனும் சாபம் இட்ட கோதம முனிவனிடம் சென்று வேண்ட, முனிவன் சினம் தணிந்து ஆயிரம் யோனிகளை ஆயிரம் கண்களாக மாற்றினார். ஆனால் அகலிகை மட்டும் கல்லாய்க் கிடந்தாள். 23-1
அகலிகைக்கும், வானவர்க்கும் ஆகாதவன் ஆகிவிட்டேன், என் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும் என்று இந்திரன் முனிவனை வேண்ட, ஆயிரம் கண்கள் ஆகுமாறு சாபத்தை முனிவர் மாற்றினார். 23-2
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி (திருக்குறள்)
மது மலைந்த வெண் தரளமும், (வயிரமும்), மணியும்,
கதிர் வளம் செயும் பவளமும், கழுத்திடைக் காட்டி,
எதிர் மலைந்த பைங் கூந்தலை இன வண்டு (நணுக),
புது மணம் செயும் மடந்தையர் போன்றன-பூகம். 7-1
அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள், பிரமன் முன்னா
வந்து, கோதமனை வேண்ட, மற்று அவை தவிர்த்து, மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து, சிறந்த ஆயிரம் கண் ஆக்க,
தம் தமது உலகு புக்கார்; தையலும் கிடந்தாள், கல் ஆய். 23-1
'வண்ண வார் குழலினாட்கும் வானவர் தமக்கும் ஆகேன்;
எண்ணி நான் செய்த குற்றம், முனிவ! நீ பொறுத்தி' என்ன,
'பண்ணிய உறுப்பில் கோடல் பத்து நூறு அவையும் போக,
அண்ணிய விண்ணில் ஆளிக்கு ஆயிர நயனம்' என்றான். 23-2
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment