பெயர் சூட்டுதல்
நெல்லிக்கனியின் சுவை போன்றவனைப் பரதன் என்றான். 116
தேவர், நிலம் என்னும் கொடிமகள் ஆகியோர் துயர் நீங்கி விளங்கச் செய்பவன் என்று இலக்குவன் என்றான். 117
தாமரையில் நீர்முத்து இருப்பது போன்ற எழில் உடையவனைச் சத்துருக்கன் என்றான். 118
வசிட்டன் இவ்வாறு பெயர்களை இடும்போதெல்லாம் மறையோர் கடலில் தயரதனின் நிதி ஆறு பாய்ந்தது. 119
இரவில் மலரும் காவி மலரும், பகலில் மலரும் கமலமும் போல விளங்கும் மக்களைத் தயரதன் தன் உடலையும், உயிரையும் போலக் கருதினான். 120
சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன், உதித்திடு மற்றைய ஒளியை,
'பரதன்' எனப் பெயர் பன்னினன் அன்றே. 116
உலக்குநர் வஞ்சகர்; உம்பரும் உய்ந்தார்;
நிலக் கொடியும் துயர் நீத்தனள்; இந்த,
விலக்க அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்,
'இலக்குவன்' என்ன, இசைத்தனன் அன்றே, 117
'முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழிலுடைய இவ் ஒளியால்,
எத் திருக்கும் கெடும்' என்பதை எண்ணா,
'சத்துருக்கன்' எனச் சாற்றினன் நாமம். 118
பொய் வழி இல் முனி, புகல்தரு மறையால்,
இவ் வழி, பெயர்கள் இசைத்துழி, இறைவன்
கை வழி, நிதி எனும் நதி கலைமறையோர்
மெய் வழி உவரி நிறைந்தன மேன்மேல். 119
'காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே,
ஓவிய எழிலுடை ஒருவனை அலது, ஓர்
ஆவியும் உடலமும் இலது' என, அருளின்
மேவினன் - உலகுடை வேந்தர்தம் வேந்தன். 120
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
நெல்லிக்கனியின் சுவை போன்றவனைப் பரதன் என்றான். 116
தேவர், நிலம் என்னும் கொடிமகள் ஆகியோர் துயர் நீங்கி விளங்கச் செய்பவன் என்று இலக்குவன் என்றான். 117
தாமரையில் நீர்முத்து இருப்பது போன்ற எழில் உடையவனைச் சத்துருக்கன் என்றான். 118
வசிட்டன் இவ்வாறு பெயர்களை இடும்போதெல்லாம் மறையோர் கடலில் தயரதனின் நிதி ஆறு பாய்ந்தது. 119
இரவில் மலரும் காவி மலரும், பகலில் மலரும் கமலமும் போல விளங்கும் மக்களைத் தயரதன் தன் உடலையும், உயிரையும் போலக் கருதினான். 120
சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன், உதித்திடு மற்றைய ஒளியை,
'பரதன்' எனப் பெயர் பன்னினன் அன்றே. 116
உலக்குநர் வஞ்சகர்; உம்பரும் உய்ந்தார்;
நிலக் கொடியும் துயர் நீத்தனள்; இந்த,
விலக்க அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்,
'இலக்குவன்' என்ன, இசைத்தனன் அன்றே, 117
'முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழிலுடைய இவ் ஒளியால்,
எத் திருக்கும் கெடும்' என்பதை எண்ணா,
'சத்துருக்கன்' எனச் சாற்றினன் நாமம். 118
பொய் வழி இல் முனி, புகல்தரு மறையால்,
இவ் வழி, பெயர்கள் இசைத்துழி, இறைவன்
கை வழி, நிதி எனும் நதி கலைமறையோர்
மெய் வழி உவரி நிறைந்தன மேன்மேல். 119
'காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே,
ஓவிய எழிலுடை ஒருவனை அலது, ஓர்
ஆவியும் உடலமும் இலது' என, அருளின்
மேவினன் - உலகுடை வேந்தர்தம் வேந்தன். 120
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment