Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - திரு அவதாரப் படலம் Kamba Ramayanam 72

வசிட்டன் கல்வி புகட்டல்

மழலை மொழி பேசி, தளர்நடை போட்டு, சூரியன் வளர்வது போலவும், பயில்வோரிடம் நான்கு வேதங்கள் வளர்வது போலவும் நால்வரும் வளர்ந்தனர். 121
தலைச்சவரம் செய்து, பூணூல் அணிவித்து, எல்லாக் கலைகளையும் வசிட்டன் நால்வருக்கும் கற்பித்தான். 122
யானை, தேர், குதிரை ஏறுதல், வில் எய்தல் ஆகிய கலைகளையும் கற்பித்தான். 123
முனிவர் தேவர் மக்கள் அனைவரும் இவர்களோடு இருப்பதை மிகவும் விரும்பினர். 124
ஆறு, சோலை, குளம் முதலான எல்லா இடங்களிலும் தலைமுடியில் பூசியிருக்கும் எண்ணெய் போல இணைந்து விளையாடித் திரிந்தனர். 125
பரதனும், சத்துருகனும் ஒருபுறமும், இராமனும் இலக்குவனும் ஒருபுறமும் தேர், குதிரை ஏற்றத்தின்போதும், வேதம் கற்கும்போதும் இணையாக இருந்தனர். 126

அமிர்து உகு குதலையொடு அணி நடை பயிலா,
திமிரம் அது அற வரு தினகரன் எனவும்,
தமரமதுடன் வளர் சதுமறை எனவும்,
குமரர்கள் நிலமகள் குறைவு அற வளர் நாள்-             121

சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்று,
'இ(வ்)அளவது' என ஒரு கரை பிறிது இலவா,
உவள் அரு மறையினொடு ஒழிவு அறு கலையும்,
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே.     122

யானையும், இரதமும், இவுளியும், முதலா
ஏனைய பிறவும், அவ் இயல்பினில் அடையுற்று,
ஊன் உறு படை பல சிலையொடு பயிலா,
வானவர் தனிமுதல், கிளையொடு வளர,      123

அரு மறை முனிவரும், அமரரும், அவனித்
திருவும், அந் நகர் உறை செனமும், 'நம் இடரோடு
இரு வினை துணிதரும், இவர்களின்; இவண் நின்று
ஒரு பொழுது அகல்கிலம், உறை' என உறுவார்.      124

ஐயனும் இளவலும், அணி நிலமகள்தன்
செய்தவம் உடைமைகள் தெரிதர, நதியும்,
மை தவழ் பொழில்களும், வாவியும், மருவி,
'நெய் குழல் உறும் இழை' என நிலைதிரிவார்.           125

பரதனும் இளவலும், ஒருநொடி பகிராது,
இரதமும் இவுளியும் இவரினும், மறைநூல்
உரைதரு பொழுதினும், ஒழிகிலர்; எனை ஆள்
வரதனும் இளவலும் என மருவினரே.              126

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...