Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - திரு அவதாரப் படலம் Kamba Ramayanam 73

மரமும் நிழலும் போல நால்வரும் ஒன்றி இருந்தனர்

நால்வரும் காலையில் முனிவரிடம் சென்று கல்வி பயின்று மாலையில் இல்லம் திரும்பினர். 127
அவர்களைக் கண்ட மகளிர் கவுசலையும் தயரதனும் போல இவர்களுடன் இருக்கமாட்டோமா என்று ஏங்கினர். 128
அண்ணன் தம்பியர் கடலும்-மேகமும் போலவும், தாமரையும்-சூரியனும் போலவும் அவாவி நால்வரும் பயின்றனர். 129
இராமன் எதிரில் வருவோரையெல்லாம் நலம் வினாவுவான். “என்ன செய்கிறாய், துன்பம் ஏதும் இல்லையே, உன் இல்லத்தில் உள்ளவர்கள் அனைவரும் நலமா, உன் பிள்ளைகள் வலிமை உள்ளவர்களாக இருக்கிறார்களா” என்றெல்லாம் வினவுவான். 130
“ஐய! என் அரசன் நீ இருக்கிறாய், என் உயிர் நீ” என்றல்லாம் அவர்கள் அவனிடம் கூறுவர். 131
இப்படியாக மரமும் நிழலும் போல நால்வரும் வாழ்ந்தனர். 132

வீரனும், இளைஞரும், வெறி பொழில்களின்வாய்,
ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய்,
சோர் பொழுது, அணிநகர் துறுகுவர்; எதிர்வார்,
கார் வர அலர் பயிர் பொருவுவர், களியால்.   127

ஏழையர் அனைவரும், இவர் தட முலை, தோய்
கேழ் கிளர் மதுகையர், கிளைகளும், 'இளையார்
வாழிய!' என, அவர் மனன் உறு கடவுள்-
தாழ்குவர்-கவுசலை தயரதன் எனவே.              128

'கடல் தரு முகில், ஒளிர் கமலம் அது அலரா,
வட வரையுடன் வரு செயல் என, மறையும்
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும்,
புடை வரும் இளவலும்' என, நிகர் புகல்வார்.              129

எதிர் வரும் அவர்களை, எமையுடை இறைவன்,
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா,
'எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?' எனவே,  130

அஃது, 'ஐய! நினை எமது அரசு என உடையேம்;
இஃது ஒரு பொருள் அல; எமது உயிருடன் ஏழ்
மகிதலம் முழுதையும் உறுகுவை, மலரோன்
உகு பகல் அளவு' என, உரை நனி புகல்வார். 131

இப் பரிசு, அணி நகர் உறையும் யாவரும்,
மெய்ப் புகழ் புனைதர, இளைய வீரர்கள்
தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற,
முப் பரம் பொருளினும் முதல்வன் வைகுறும்.        132

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...