மிகைப் பாடல்கள் பகுதி 1
குழந்தை இல்லாத செல்வம் எப்படிப்பட்டது என்று தசரதன் வசிட்ட முனிவனிடம் சொன்னான். பொறுமை இல்லாத அறிவு, புணர்ச்சி-போகம் இல்லாத இளமை, குளிக்க வழியில்லாத குளம், பற்றுக்கோடு இல்லாதவர் போலியாக நடிக்கும் தூய்மை, மணம் இல்லாத மலர், கல்விநலம் இல்லாதவர் புலமை, பாதுகாக்கும் அகழி இல்லாத நகரம் ஆகியவற்றைப் போன்றது என்றான். 4-1
அழிக்கும் செயலை அரக்கர் செய்வதால், நான் எனது அழிக்கும் தொழிலை விட்டுவிட்டேன் என்று சொல்லிக்கொண்டு பரமன் தேவர்களோடு சேர்ந்துகொண்டு திருமாலிடம் முறையிட வந்தார். 5-1
சிவன் தேவர்களோடு தன்னிடம் வரக் கண்ட பிரமன் தானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு வந்தார். 5-2
பிரமனைத் தொழுது அரக்கர் கொடுமை பற்றிச் சொன்னார். 5-3
அரக்கர்களை அழித்துக் காப்பாற்றுவாயேல், உலகைப் படைக்கும் என் தொழிலையும் நீயே செய்யலாம் என்றான் பிரமன். 5-4
'பொறை இலா அறிவு, போகப் புணர்ப்பு இலா இளமை, மேவத்
துறை இலா வனச வாவி, தூசு இலார் போலித் தூய்மை,
நறை இலா மலரும், கல்வி நலம் இலாப் புலமை, நன்னீர்ச்
சிறை இலா நகரும், போலும், சேய் இலாச் செல்வம்' என்றான் 4-1
சுடு தொழில் அரக்கரால் தொலைந்து, வான் உளோர்,
சுடு அமர் களன் அடி கலந்து கூறலும்,
படு பொருள் உணர்ந்த அப் பரமன், 'யான் இனி
அடுகிலென்' என மறுத்து, அவரொடு ஏகினான். 5-1
கறை மிடற்று அண்ணலும் கடவுளோர்களும்
மறை முதற் கிழவனை வந்து நண்ணலும்,
முறைமையின் கடன் முறை முற்றி, முண்டகத்து
இறைவனும், அவரொடும் இனிதின் ஏகினான். 5-2
வடவரைக் குடுமியின் நடுவண், மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி, நான்முகக்
கடவுளை அடி தொழுது, அமர கண்டகர்
இடி நிகர் வினையம் அது இயம்பினான் அரோ. 5-3
என்று இனையன பல இயம்பி, 'எங்கணும்,
கன்றி, அவ் அரக்கரை அழித்துக் காத்தியேல்,
ஒன்றிய உயிர்களும் உலகு யாவையும்
இன்று நீ படைத்தி' என்று இசைத்து, பின்னரும். 5-4
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
குழந்தை இல்லாத செல்வம் எப்படிப்பட்டது என்று தசரதன் வசிட்ட முனிவனிடம் சொன்னான். பொறுமை இல்லாத அறிவு, புணர்ச்சி-போகம் இல்லாத இளமை, குளிக்க வழியில்லாத குளம், பற்றுக்கோடு இல்லாதவர் போலியாக நடிக்கும் தூய்மை, மணம் இல்லாத மலர், கல்விநலம் இல்லாதவர் புலமை, பாதுகாக்கும் அகழி இல்லாத நகரம் ஆகியவற்றைப் போன்றது என்றான். 4-1
அழிக்கும் செயலை அரக்கர் செய்வதால், நான் எனது அழிக்கும் தொழிலை விட்டுவிட்டேன் என்று சொல்லிக்கொண்டு பரமன் தேவர்களோடு சேர்ந்துகொண்டு திருமாலிடம் முறையிட வந்தார். 5-1
சிவன் தேவர்களோடு தன்னிடம் வரக் கண்ட பிரமன் தானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு வந்தார். 5-2
பிரமனைத் தொழுது அரக்கர் கொடுமை பற்றிச் சொன்னார். 5-3
அரக்கர்களை அழித்துக் காப்பாற்றுவாயேல், உலகைப் படைக்கும் என் தொழிலையும் நீயே செய்யலாம் என்றான் பிரமன். 5-4
'பொறை இலா அறிவு, போகப் புணர்ப்பு இலா இளமை, மேவத்
துறை இலா வனச வாவி, தூசு இலார் போலித் தூய்மை,
நறை இலா மலரும், கல்வி நலம் இலாப் புலமை, நன்னீர்ச்
சிறை இலா நகரும், போலும், சேய் இலாச் செல்வம்' என்றான் 4-1
சுடு தொழில் அரக்கரால் தொலைந்து, வான் உளோர்,
சுடு அமர் களன் அடி கலந்து கூறலும்,
படு பொருள் உணர்ந்த அப் பரமன், 'யான் இனி
அடுகிலென்' என மறுத்து, அவரொடு ஏகினான். 5-1
கறை மிடற்று அண்ணலும் கடவுளோர்களும்
மறை முதற் கிழவனை வந்து நண்ணலும்,
முறைமையின் கடன் முறை முற்றி, முண்டகத்து
இறைவனும், அவரொடும் இனிதின் ஏகினான். 5-2
வடவரைக் குடுமியின் நடுவண், மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி, நான்முகக்
கடவுளை அடி தொழுது, அமர கண்டகர்
இடி நிகர் வினையம் அது இயம்பினான் அரோ. 5-3
என்று இனையன பல இயம்பி, 'எங்கணும்,
கன்றி, அவ் அரக்கரை அழித்துக் காத்தியேல்,
ஒன்றிய உயிர்களும் உலகு யாவையும்
இன்று நீ படைத்தி' என்று இசைத்து, பின்னரும். 5-4
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment