மிகைப் பாடல்கள் பகுதி 2
பிரமன் முதலான தேவர்கள் திருமாலின் திருவடிகளை விரும்பி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அவன் வேதங்களை ஓதினர். 8-1
பாற்கடல் மூர்த்தியே! எங்களைக் காப்பாற்றுங்கள் என்றனர். 8-2
அரக்கர் செய்யும் தீமையால் நொந்துகொண்டிருக்கிறோம். நொடிப்பொழுதில் வந்து காத்து அருள் பிரிய வேண்டும் என்றனர். 8-3
தேவர் அழைப்பை அறிதுயில் கொண்டிருக்கும் திருமால் உணர்ந்துகொண்டான். 9-1
சிவன் திருமாலை நோக்கிச் சொல்லத் தொடங்கினான். 15-1
ஆயவர் அயன் முதல் அமரர், ஈறு இலா
நாயகன் இரு பதம் நயந்து, சிந்தைமீது
ஓய்வு இலாது, அவன் அரு மறைகள் ஓதியே,
நேயமோடு இருந்து, இவை நிகழ்த்தல் மேயினார். 8-1
'காத்தி நீ எமை; காக்கிலர்தம்மை யாம்
ஏத்தியே இளைத்தோம்; இறைவா! இடர்ப்
பார்த்தியோ?-திருப் பாற்கடற் பள்ளியின்
மூர்த்தியே! முதல்வா! முகில் மேனியாய்! 8-2
'அந்தகாரத்து அரக்கர் செய் தீமையால்,
நொந்துளோம்; இறைவா! நொடிப் போதினில்
வந்து மாற்றிடும் வண்ணம் எமக்கு அருள்-
எந்தையே! கருணாகரனே!' எனா. 8-3
அறி துயில் எழுந்தனன், அமரர் கூப்பிடும்
மறை மொழித் துதி ஒலி வந்து இசைக்கவே;
நிறை குணத்து அமரர்கள் நினைத்து அழைப்பதை,
இறைவனும், திரு உளத்து அறிந்து, அங்கு எய்தவே. 9-1
வானவர் அம் முறை வழங்க, மா மதித்
தேன் உறும் இதழி அம் தெரியல் வேணியான்
ஆனவர் தமைக் கரம் அமைத்து அங்கு, ஐயனைத்
தான் முகம் நோக்கியே சாற்றல் மேயினான். 15-1
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
பிரமன் முதலான தேவர்கள் திருமாலின் திருவடிகளை விரும்பி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அவன் வேதங்களை ஓதினர். 8-1
பாற்கடல் மூர்த்தியே! எங்களைக் காப்பாற்றுங்கள் என்றனர். 8-2
அரக்கர் செய்யும் தீமையால் நொந்துகொண்டிருக்கிறோம். நொடிப்பொழுதில் வந்து காத்து அருள் பிரிய வேண்டும் என்றனர். 8-3
தேவர் அழைப்பை அறிதுயில் கொண்டிருக்கும் திருமால் உணர்ந்துகொண்டான். 9-1
சிவன் திருமாலை நோக்கிச் சொல்லத் தொடங்கினான். 15-1
ஆயவர் அயன் முதல் அமரர், ஈறு இலா
நாயகன் இரு பதம் நயந்து, சிந்தைமீது
ஓய்வு இலாது, அவன் அரு மறைகள் ஓதியே,
நேயமோடு இருந்து, இவை நிகழ்த்தல் மேயினார். 8-1
'காத்தி நீ எமை; காக்கிலர்தம்மை யாம்
ஏத்தியே இளைத்தோம்; இறைவா! இடர்ப்
பார்த்தியோ?-திருப் பாற்கடற் பள்ளியின்
மூர்த்தியே! முதல்வா! முகில் மேனியாய்! 8-2
'அந்தகாரத்து அரக்கர் செய் தீமையால்,
நொந்துளோம்; இறைவா! நொடிப் போதினில்
வந்து மாற்றிடும் வண்ணம் எமக்கு அருள்-
எந்தையே! கருணாகரனே!' எனா. 8-3
அறி துயில் எழுந்தனன், அமரர் கூப்பிடும்
மறை மொழித் துதி ஒலி வந்து இசைக்கவே;
நிறை குணத்து அமரர்கள் நினைத்து அழைப்பதை,
இறைவனும், திரு உளத்து அறிந்து, அங்கு எய்தவே. 9-1
வானவர் அம் முறை வழங்க, மா மதித்
தேன் உறும் இதழி அம் தெரியல் வேணியான்
ஆனவர் தமைக் கரம் அமைத்து அங்கு, ஐயனைத்
தான் முகம் நோக்கியே சாற்றல் மேயினான். 15-1
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment