மிகைப் பாடல்கள் பகுதி 3
வருவதற்கு ஒப்புக்கொண்ட கலைக்கோட்டு முனிவனை வணக்கித் தயரதன் கூறலானான். 78-1
குழந்தை பிறந்ததைத் தயரதனுக்குச் சொன்ன நேரம் 106-1
ஒவ்வொரு குழந்தையும் பிறந்த நேரம் குறித்து கணியர் கணக்கிட்டுப் பலனைப் பொன் தகட்டில் எழுதினர். 106-2
வசிட்டனைத் தயரதன் வணங்கி, குழந்தை பிறந்தது என் பாக்கியம் என்று கூறினான். 107-1
மகளிர் சுண்ணப்பொடிகளைச் சந்தனத்தில் கலந்து எங்கும் தெளித்தனர். அது மண்ணில் கிடக்கும் வானவில் போலக் காணப்பட்டது. 115-1
தயரதன் விழாக்கொண்டாடி இம்மைக்கும் மறுமைக்கும் உதவும் தானம் பல செய்தான். 120-1
எனக் கலை மா முகச் சிருங்கன் இவ் உரை-
தனைச் சொல, தரணிபர்க்கு அரசன் தான் மகிழ்ந்து,
அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய, தம்
மனத் துயர் அகன்றிட, வணங்கிக் கூறுவான். 78-1
மேடம் ஆம் மதி; திதி நவமி; மீன் கழை;
நீடு உறு மாலை கற்கடகம்; நீதி சேர்
ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள்
நாடின், ஏகாதசர் நால்வர் உச்சரே. 106-1
என்றனர் சாதகம் ஈசற்கு; ஏனையர்
தம் தமக்கும் தகும் முறையில், தாம் தெரிந்து,
ஒன்றிய தமனியத்து எழுதி ஓதினார்-
வன் திறல் சுரர் குரு வாழ்த்து எடுப்பவே. 106-2
நோக்கினன் களிப்பு எழ; நுணங்கு கேள்வி நூல்
ஆக்கிய முனிவனை வணங்கி, 'ஐய! என்
பாக்கியம் பலித்தது, இப் பாலர்' என்று, பார்
காக்குறும் அரசனும், கழறல் மேயினான். 107-1
சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும்
சந்தனம் நீரொடு கலந்து, தையலார்
பந்தியில், சிவறியால் சிதற, பார் மிசை
இந்திரவில் எனக் கிடந்தது எங்குமே. 115-1
அரு மறை நெறி வழி, அரசனும், அன்னப்
பிரசனம் மதலையர் பெறு வழி உதவி,
கரை அறு திரு நகர் விழவொடு களியர்,
இருமையும் உதவுறு தானமும் ஈந்தான். 120-1
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
வருவதற்கு ஒப்புக்கொண்ட கலைக்கோட்டு முனிவனை வணக்கித் தயரதன் கூறலானான். 78-1
குழந்தை பிறந்ததைத் தயரதனுக்குச் சொன்ன நேரம் 106-1
ஒவ்வொரு குழந்தையும் பிறந்த நேரம் குறித்து கணியர் கணக்கிட்டுப் பலனைப் பொன் தகட்டில் எழுதினர். 106-2
வசிட்டனைத் தயரதன் வணங்கி, குழந்தை பிறந்தது என் பாக்கியம் என்று கூறினான். 107-1
மகளிர் சுண்ணப்பொடிகளைச் சந்தனத்தில் கலந்து எங்கும் தெளித்தனர். அது மண்ணில் கிடக்கும் வானவில் போலக் காணப்பட்டது. 115-1
தயரதன் விழாக்கொண்டாடி இம்மைக்கும் மறுமைக்கும் உதவும் தானம் பல செய்தான். 120-1
எனக் கலை மா முகச் சிருங்கன் இவ் உரை-
தனைச் சொல, தரணிபர்க்கு அரசன் தான் மகிழ்ந்து,
அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய, தம்
மனத் துயர் அகன்றிட, வணங்கிக் கூறுவான். 78-1
மேடம் ஆம் மதி; திதி நவமி; மீன் கழை;
நீடு உறு மாலை கற்கடகம்; நீதி சேர்
ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள்
நாடின், ஏகாதசர் நால்வர் உச்சரே. 106-1
என்றனர் சாதகம் ஈசற்கு; ஏனையர்
தம் தமக்கும் தகும் முறையில், தாம் தெரிந்து,
ஒன்றிய தமனியத்து எழுதி ஓதினார்-
வன் திறல் சுரர் குரு வாழ்த்து எடுப்பவே. 106-2
நோக்கினன் களிப்பு எழ; நுணங்கு கேள்வி நூல்
ஆக்கிய முனிவனை வணங்கி, 'ஐய! என்
பாக்கியம் பலித்தது, இப் பாலர்' என்று, பார்
காக்குறும் அரசனும், கழறல் மேயினான். 107-1
சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும்
சந்தனம் நீரொடு கலந்து, தையலார்
பந்தியில், சிவறியால் சிதற, பார் மிசை
இந்திரவில் எனக் கிடந்தது எங்குமே. 115-1
அரு மறை நெறி வழி, அரசனும், அன்னப்
பிரசனம் மதலையர் பெறு வழி உதவி,
கரை அறு திரு நகர் விழவொடு களியர்,
இருமையும் உதவுறு தானமும் ஈந்தான். 120-1
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment