விசுவாமித்திரன் வரல்
முரசு முழக்கத்துடனும், முனிவர்கள் போற்றும்படியும் நாடாண்ட தயரதன் கரை தெரியாத களிப்புக் கடலில் வாழ்ந்துகொண்டிருக்கையில் ஒருநாள். 1
மதி மயங்கிய நிலையில் தயரதன் ஒரு மணிமண்டபத்துக்குச் சென்றான். 2
அங்கு வானில் திரியும் சாரணன் ஒருவன் (விசுவாமித்திரன்) இவன் இந்திரனோ என எண்ணினான். ஆயிரம் கண் இவனுக்கு இல்லையாதலால் இந்திரன் அன்று எனத் தெளிவு பெற்றான். 3
சிங்கம் போன்ற வலிமை உடையவனும், “உயிரினங்கள் அனைத்தையும் கொண்டதும், தேவர் வாழ்வதுமான ஓர் உலகினைப் படைப்பதோடு பிரமனையும் படைப்பேன்” என்று முனைந்த முனிவன் விசுவாமித்திரன் தோன்றினான். 4
கடவுள் வரக்கண்ட இந்திரன் போல, தயரதன் எழுந்து சென்று முனிவரை வணங்கினான். 5
அரசர்தம் பெருமகன், அகிலம் யாவையும்
விரசுறு தனிக் குடை விளங்க, வென்றி சேர்
முரசு ஒலி கறங்கிட, முனிவர் ஏத்துற,
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள், 1
நனை வரு கற்பக நாட்டு நல் நகர்
வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால்
நினையவும் அரியது, விசும்பின் நீண்டது, ஓர்
புனை மணி மண்டபம் பொலிய எய்தினான். 2
தூய மெல் அரியணைப் பொலிந்து தோன்றினான்;
சேய் இரு விசும்பிடைத் திரியும் சாரணர்,
'நாயகன் இவன்கொல்?' என்று அயிர்த்து, நாட்டம் ஓர்
ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார். 3
மடங்கல்போல் மொய்ம்பினான் முன்னர், 'மன்னுயிர்
அடங்கலும் உலகும் வேறு அமைத்து, தேவரோடு
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு' எனாத்
தொடங்கிய, துனி உறு, முனிவன் தோன்றினான். 4
வந்து முனி எய்துதலும், மார்பில் அணி ஆரம்,
அந்தரதலத்து இரவி அஞ்ச, ஒளி விஞ்ச,
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும்
இந்திரன் என, கடிது எழுந்து அடி பணிந்தான். 5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 6. கையடைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
முரசு முழக்கத்துடனும், முனிவர்கள் போற்றும்படியும் நாடாண்ட தயரதன் கரை தெரியாத களிப்புக் கடலில் வாழ்ந்துகொண்டிருக்கையில் ஒருநாள். 1
மதி மயங்கிய நிலையில் தயரதன் ஒரு மணிமண்டபத்துக்குச் சென்றான். 2
அங்கு வானில் திரியும் சாரணன் ஒருவன் (விசுவாமித்திரன்) இவன் இந்திரனோ என எண்ணினான். ஆயிரம் கண் இவனுக்கு இல்லையாதலால் இந்திரன் அன்று எனத் தெளிவு பெற்றான். 3
சிங்கம் போன்ற வலிமை உடையவனும், “உயிரினங்கள் அனைத்தையும் கொண்டதும், தேவர் வாழ்வதுமான ஓர் உலகினைப் படைப்பதோடு பிரமனையும் படைப்பேன்” என்று முனைந்த முனிவன் விசுவாமித்திரன் தோன்றினான். 4
கடவுள் வரக்கண்ட இந்திரன் போல, தயரதன் எழுந்து சென்று முனிவரை வணங்கினான். 5
அரசர்தம் பெருமகன், அகிலம் யாவையும்
விரசுறு தனிக் குடை விளங்க, வென்றி சேர்
முரசு ஒலி கறங்கிட, முனிவர் ஏத்துற,
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள், 1
நனை வரு கற்பக நாட்டு நல் நகர்
வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால்
நினையவும் அரியது, விசும்பின் நீண்டது, ஓர்
புனை மணி மண்டபம் பொலிய எய்தினான். 2
தூய மெல் அரியணைப் பொலிந்து தோன்றினான்;
சேய் இரு விசும்பிடைத் திரியும் சாரணர்,
'நாயகன் இவன்கொல்?' என்று அயிர்த்து, நாட்டம் ஓர்
ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார். 3
மடங்கல்போல் மொய்ம்பினான் முன்னர், 'மன்னுயிர்
அடங்கலும் உலகும் வேறு அமைத்து, தேவரோடு
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு' எனாத்
தொடங்கிய, துனி உறு, முனிவன் தோன்றினான். 4
வந்து முனி எய்துதலும், மார்பில் அணி ஆரம்,
அந்தரதலத்து இரவி அஞ்ச, ஒளி விஞ்ச,
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும்
இந்திரன் என, கடிது எழுந்து அடி பணிந்தான். 5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 6. கையடைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment