ஆற்றுப்படலம் பாயிரம் கடவுள் வாழ்த்து
1
உலகம் அனைத்தையும் தாமே
உளவாகச் செய்பவர். அவற்றை நிலைபெறச் செய்பவர்.
அவற்றை நீக்குபவர். அளவற்ற இந்த விளையாட்டுகளிலிருந்து
நீங்காதவர். அவர் தலைவர். அத்தகையவருக்கே
எங்கள் வணக்கம்
2
அவர் சித்த குணம்
படைத்தவர். தெரிந்துகொள்ள முடியாத நல்ல நிலையினை
உடையவர். அவர் எண்ணியிருக்கும் ஆக்கல்
அளித்தல் அழித்தல் ஆகிய மூன்று குணங்களை
உணர்த்துதல் எனக்கு அரிது. முதலாக
உள்ள அவரின் நல்ல குணங்களாகிய
கடலில் குளித்தல் நல்லது.
3
ஆதி அந்தம் இரண்டையும்
அரிந்துகொண்டிருப்பவர். எல்லாவற்றையும் நமக்கு ஓதியவர். அளவில்லாமல்
உள்ளனவற்றையும் இல்லாதனவற்றறையும் அறிந்தவர்.
வேதம் என்பன நெய்ந்நறி. அந்த
மெய்ந்நெறியின் நன்மையாக விளங்குபவர். அந்த நன்மையாக விளங்குபவர்
பாதத்தைப் பற்றில்லா மக்கள் பற்ற மாட்டார்கள்.
உலகம் யாவையும் தாம்
உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு
உடையார் - அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண்
நாங்களே. 1
சிற்குணத்தர் தெரிவு அரு நல்
நிலை
எற்கு உணர்த்த அரிது;
எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர்;
அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2
ஆதி, அந்தம், அரி
என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன - மெய்ந்
நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார்.
3
கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம்
கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில்
கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment