பாயிரம் அவையடக்கம்
பூசை(பூனை) - அசுணமா
4
ஓசையுடன் முழங்கும் பாற்கடலிலுள்ள பால் முழுவதையும் பருக விரும்பும் பூனை அதனை நக்குவது போல ஆசை என்னும் நாக்கால் நக்கும் நிலையில் இராமன் கதையைச் சொல்லத் தொடங்கியுள்ளேன். இராமன் குற்றமற்ற ஆளுமைத் திறம் கொண்டவன்.
5
மென்மையினும் மென்மை மிக்க சொற்களைக் கல்லாக்கிக் கொண்டு நூல்களைக் கற்றவன் நான். வைது அமைவில்லாத மராமரம் ஏழையும் தொளையிட்டவனுக்கு இந்தப் பெருங்கதையைச் செய்தவன் நான். அவன் புகழால் என் சொல் தேயத்தில் நிலைபெறும்.
6
இராமன் புகழை இவன் சொல்கிறானே என்று தெய்வம் என்னை இகழ்கிறது. இதனால் என் மேல் படியும் மாசு என்ன? பொய்மை இல்லாத கேள்விப் புலமை மிக்கவர் விரும்பும் தெய்வ மாக்கதை ஆயிற்றே. இது இதன் ஒளி தெரிக்க வேண்டுமே.
7
யாழ் இசையில் மயங்கிக் கேட்டுக்கொண்டிருக்கும் அசுணமா என்னும் பறவை காதில் விழும்படிப் பேரொலி கேட்கும் பறையை முழக்கி அதனைக் கொல்வர். அது போன்றது என் பாடல்கள் என்பர்.
8
முத்தமிழ் மொழியில் துறைபோன மேலான கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்த விரும்புகிறேன். என்னைப் போன்ற பித்தர், பேதையர், பத்தர் சொன்னதைப் பெரிதுபடுத்த வேண்டா.
9
அறையிலும் ஆடும் அரங்கத்திலும், அறியாப் பிள்ளைகள் தறிக்காமல் ஏதோ கீறினால் அவற்றைச் உருவாக்கிக் கொண்டிருக்கும் தச்சர் அவர்கள் மேல் சினம் கொள்வார்களா? சற்றும் ஞானம் இல்லாத என் அற்பக் கவியை முறையாக நூல்களைப் பயின்றவர்கள் சினம் கொள்வார்களோ?
4
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4
5
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் - எனை!-
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே. 5
6
வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
எய்தவும், இது இயம்புவது யாது எனின்,-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே. 6
7
துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ. 7
8
முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்:-
'பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?' 8
9.
அறையும் ஆடு அரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ? 9
கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
பூசை(பூனை) - அசுணமா
4
ஓசையுடன் முழங்கும் பாற்கடலிலுள்ள பால் முழுவதையும் பருக விரும்பும் பூனை அதனை நக்குவது போல ஆசை என்னும் நாக்கால் நக்கும் நிலையில் இராமன் கதையைச் சொல்லத் தொடங்கியுள்ளேன். இராமன் குற்றமற்ற ஆளுமைத் திறம் கொண்டவன்.
5
மென்மையினும் மென்மை மிக்க சொற்களைக் கல்லாக்கிக் கொண்டு நூல்களைக் கற்றவன் நான். வைது அமைவில்லாத மராமரம் ஏழையும் தொளையிட்டவனுக்கு இந்தப் பெருங்கதையைச் செய்தவன் நான். அவன் புகழால் என் சொல் தேயத்தில் நிலைபெறும்.
6
இராமன் புகழை இவன் சொல்கிறானே என்று தெய்வம் என்னை இகழ்கிறது. இதனால் என் மேல் படியும் மாசு என்ன? பொய்மை இல்லாத கேள்விப் புலமை மிக்கவர் விரும்பும் தெய்வ மாக்கதை ஆயிற்றே. இது இதன் ஒளி தெரிக்க வேண்டுமே.
7
யாழ் இசையில் மயங்கிக் கேட்டுக்கொண்டிருக்கும் அசுணமா என்னும் பறவை காதில் விழும்படிப் பேரொலி கேட்கும் பறையை முழக்கி அதனைக் கொல்வர். அது போன்றது என் பாடல்கள் என்பர்.
8
முத்தமிழ் மொழியில் துறைபோன மேலான கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்த விரும்புகிறேன். என்னைப் போன்ற பித்தர், பேதையர், பத்தர் சொன்னதைப் பெரிதுபடுத்த வேண்டா.
9
அறையிலும் ஆடும் அரங்கத்திலும், அறியாப் பிள்ளைகள் தறிக்காமல் ஏதோ கீறினால் அவற்றைச் உருவாக்கிக் கொண்டிருக்கும் தச்சர் அவர்கள் மேல் சினம் கொள்வார்களா? சற்றும் ஞானம் இல்லாத என் அற்பக் கவியை முறையாக நூல்களைப் பயின்றவர்கள் சினம் கொள்வார்களோ?
4
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4
5
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் - எனை!-
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே. 5
6
வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
எய்தவும், இது இயம்புவது யாது எனின்,-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே. 6
7
துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ. 7
8
முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்:-
'பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?' 8
9.
அறையும் ஆடு அரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ? 9
கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment