Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம் - பாயிரம் Kamba Ramayanam 3

பாயிரம் நூல் வரலாறு

10
தேவ மொழி எனச் சொல்லப்படுக்கின்ற வடமொழியில் இந்தக் கதையைச் சொன்னவர் வான்மீகி,  வசிட்டர்,  போதாயனர் என்னும் மூவருள் முதலில் சொன்ன வால்மீகி உரைத்தபடி, தமிழ்ப் பாவால் நான் இதனைச் சொல்கிறேன்.
11
நடத்தையில் உயர்ந்து நிற்கும் இராமனாகப் பிறந்த இராமாவதாரக் கதையை, திருவெண்ணெய் நல்லூர் சடையன் என்பவனிடம் ஒப்படைக்கிறேன்.

10.
தேவ பாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம் உளும் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு. அரோ.  10

காவியம் பிறந்த களம்

11.
நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராம அவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே.  11

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...