தனியன்
பிறர் பாடியது
1
நாரணன் விளையாட்டுகளை எல்லாம் நாரதன் கூறினான். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த வான்மீகி கவிதையாகப் பாடினான். சோழநாட்டுத் திருவழுந்தூரில் வாழும் கம்பன் அதனைத் தமிழில் கவிதை ஆக்கினான்.
2
தண்ணீரில் மலையை வைத்து அன்று அமரர்க்கு அமுதம் ஊட்டிய தம்பிரான் போல கம்பநாட்டு வள்ளல், கவிச்சக்கரவர்த்தி கம்பன், நம்பும் நரர்களுக்கு கம்பராமாயணம் என்னும் பாமாலையை அமுதமாகத் தந்தான்.
3
திருவெண்ணைநல்லூர் சடையன் வாழ்த்தினைப் பெறவும், தாழ்வார் உயரவும், புலவர்களின் உள்ளத்து இருள் நீங்கவும், இராமாயணம் செய்த தெய்வப் புலமை கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளைச் சிந்திப்பவர்களுக்கு அரியது என்று ஒன்று உளதோ?
4
சிவன், பிரமன், தேவர், முனிவர், யோகிகள், இவ்வுலகத்தவர் என்று யாராலும் கட்டிப்போட முடியாத இராமன் என்னும் யானையைக் கட்டிப்போட்ட கம்பன் என்னும் புலவரைக் கருத்தில் நிலைநிறுத்திக்கொள்வோம்.
5
சிவன் தன் உமை காதில் சொன்ன சீதை கணவன் இராமன் பெயரைத் தழைக்கச் செய்த கம்பநாடனைத் தலைமேல் கொள்வோம்.
நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற,
ஆரணக் கவிதை செய்தான், அறிந்த வான்மீகி என்பான்;
சீர் அணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்,
கார் அணி கொடையான், கம்பன், தமிழினால் கவிதை செய்தான். 1
அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்ன, தானும் தமிழிலே தாளை நாட்டி,
கம்ப நாடு உடைய வள்ளல், கவிச் சக்ரவர்த்தி, பார்மேல்
நம்பு பாமாலையாலே நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான். 2
வாழ்வு ஆர்திரு வெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன் வாழ்த்துப் பெற,
தாழ்வார் உயர, புலவோர் அக இருள் தான் அகல,
போழ் வார் கதிரின் உதித்த தெய்வப் புலமைக் கம்ப நாட்டு
ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே. 3
அம்பு அரா அணி சடை அரன் அயன் முதல்
உம்பரால், முனிவரால், யோகரால், உயர்
இம்பரால், பிணிக்க அரும் இராம வேழம் சேர்
கம்பர் ஆம் புலவரைக் கருத்து இருத்துவாம். 4
சம்பு, அ(ந்)நாள், தன் உமை செவி சாற்று பூங்
கொம்பு அனாள்தன் கொழுநன் இராமப் பேர்
பம்ப நாள் தழைக்கும் கதை பாச் செய்த
கம்பநாடன் கழல் தலையில் கொள்வாம். 5
கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
பிறர் பாடியது
1
நாரணன் விளையாட்டுகளை எல்லாம் நாரதன் கூறினான். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த வான்மீகி கவிதையாகப் பாடினான். சோழநாட்டுத் திருவழுந்தூரில் வாழும் கம்பன் அதனைத் தமிழில் கவிதை ஆக்கினான்.
2
தண்ணீரில் மலையை வைத்து அன்று அமரர்க்கு அமுதம் ஊட்டிய தம்பிரான் போல கம்பநாட்டு வள்ளல், கவிச்சக்கரவர்த்தி கம்பன், நம்பும் நரர்களுக்கு கம்பராமாயணம் என்னும் பாமாலையை அமுதமாகத் தந்தான்.
3
திருவெண்ணைநல்லூர் சடையன் வாழ்த்தினைப் பெறவும், தாழ்வார் உயரவும், புலவர்களின் உள்ளத்து இருள் நீங்கவும், இராமாயணம் செய்த தெய்வப் புலமை கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளைச் சிந்திப்பவர்களுக்கு அரியது என்று ஒன்று உளதோ?
4
சிவன், பிரமன், தேவர், முனிவர், யோகிகள், இவ்வுலகத்தவர் என்று யாராலும் கட்டிப்போட முடியாத இராமன் என்னும் யானையைக் கட்டிப்போட்ட கம்பன் என்னும் புலவரைக் கருத்தில் நிலைநிறுத்திக்கொள்வோம்.
5
சிவன் தன் உமை காதில் சொன்ன சீதை கணவன் இராமன் பெயரைத் தழைக்கச் செய்த கம்பநாடனைத் தலைமேல் கொள்வோம்.
நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற,
ஆரணக் கவிதை செய்தான், அறிந்த வான்மீகி என்பான்;
சீர் அணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்,
கார் அணி கொடையான், கம்பன், தமிழினால் கவிதை செய்தான். 1
அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்ன, தானும் தமிழிலே தாளை நாட்டி,
கம்ப நாடு உடைய வள்ளல், கவிச் சக்ரவர்த்தி, பார்மேல்
நம்பு பாமாலையாலே நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான். 2
வாழ்வு ஆர்திரு வெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன் வாழ்த்துப் பெற,
தாழ்வார் உயர, புலவோர் அக இருள் தான் அகல,
போழ் வார் கதிரின் உதித்த தெய்வப் புலமைக் கம்ப நாட்டு
ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே. 3
அம்பு அரா அணி சடை அரன் அயன் முதல்
உம்பரால், முனிவரால், யோகரால், உயர்
இம்பரால், பிணிக்க அரும் இராம வேழம் சேர்
கம்பர் ஆம் புலவரைக் கருத்து இருத்துவாம். 4
சம்பு, அ(ந்)நாள், தன் உமை செவி சாற்று பூங்
கொம்பு அனாள்தன் கொழுநன் இராமப் பேர்
பம்ப நாள் தழைக்கும் கதை பாச் செய்த
கம்பநாடன் கழல் தலையில் கொள்வாம். 5
கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment