தனியன்
பிறர் பாடியது
6
இராமகாதை முத்தி தருதல் உறுதி. வானில் உலாவும் சூரியனின் மகன் கம்பன் அடிகளைப் போற்றுவோம்.
7
சூரியன் மகன் கம்பன் முத்தி அளிக்கவல்லவன். மழைக்கு ஒப்பான அவன் அடிகளை வணங்குவோம்.
8
பசுக்களைக் கொடையாக வழங்கிய சகரர் 1100 பேரை வென்றவன் திருவழுந்தூர் நாட்டுக் குணாதித்தன் மகன் இராமன் கதையைப் பாடினான்.
9
சகாத்தம் 807, பங்குனி மாதம், அத்த நாளில் (அஸ்த நட்சத்திரம்) இராமன் கதையை அரங்கர் முன் (திருவரங்கம்) அரங்கேற்றினான்.
10
நாள் ஒன்றுக்கு 700 பாடல் என்று பாடினான்.
இம்பரும் உம்பர் தாமும் ஏத்திய இராம காதை
தம்பமா முத்தி சேர்தல் சத்தியம் சத்தியம்மே;
அம்பரம்தன்னில் மேவும் ஆதித்தன் புதல்வன் ஞானக்
கம்பன் செங் கமல பாதம் கருத்துற இருத்துவாமே. 6
ஆதவன் புதல்வன் முத்தி அறிவினை அளிக்கும் ஐயன்,
போதவன் இராம காதை புகன்றருள் புனிதன், மண்மேல்
கோது அவம் சற்றும் இல்லான், கொண்டல் மால்தன்னை ஒப்பான்,
மா தவன் கம்பன் செம் பொன் மலர் அடி தொழுது வாழ்வாம். 7
ஆவின் கொடைச் சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து,
தேவன் திருவழுந்தூர் நல் நாட்டு, மூவலூர்ச்
சீர் ஆர் குணாதித்தன் சேய் அமையப் பாடினான் -
கார் ஆர் காகுத்தன் கதை. 8
எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல், சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்பநாடன்
பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில்,
கண்ணிய அரங்கர் முன்னே, கவி அரங்கேற்றினானே. 9
கழுந்தராய் உன கழல் பணியாதவர் கதிர் மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ! அபிநவ கவிநாதன்
விழுந்த நாயிறுஅது எழுவதன்முன், மறை வேதியருடன் ஆராய்ந்து,
எழுந்த நாயிறு விழுவதன்முன் கவி பாடியது எழுநூறே. 10
கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
பிறர் பாடியது
6
இராமகாதை முத்தி தருதல் உறுதி. வானில் உலாவும் சூரியனின் மகன் கம்பன் அடிகளைப் போற்றுவோம்.
7
சூரியன் மகன் கம்பன் முத்தி அளிக்கவல்லவன். மழைக்கு ஒப்பான அவன் அடிகளை வணங்குவோம்.
8
பசுக்களைக் கொடையாக வழங்கிய சகரர் 1100 பேரை வென்றவன் திருவழுந்தூர் நாட்டுக் குணாதித்தன் மகன் இராமன் கதையைப் பாடினான்.
9
சகாத்தம் 807, பங்குனி மாதம், அத்த நாளில் (அஸ்த நட்சத்திரம்) இராமன் கதையை அரங்கர் முன் (திருவரங்கம்) அரங்கேற்றினான்.
10
நாள் ஒன்றுக்கு 700 பாடல் என்று பாடினான்.
இம்பரும் உம்பர் தாமும் ஏத்திய இராம காதை
தம்பமா முத்தி சேர்தல் சத்தியம் சத்தியம்மே;
அம்பரம்தன்னில் மேவும் ஆதித்தன் புதல்வன் ஞானக்
கம்பன் செங் கமல பாதம் கருத்துற இருத்துவாமே. 6
ஆதவன் புதல்வன் முத்தி அறிவினை அளிக்கும் ஐயன்,
போதவன் இராம காதை புகன்றருள் புனிதன், மண்மேல்
கோது அவம் சற்றும் இல்லான், கொண்டல் மால்தன்னை ஒப்பான்,
மா தவன் கம்பன் செம் பொன் மலர் அடி தொழுது வாழ்வாம். 7
ஆவின் கொடைச் சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து,
தேவன் திருவழுந்தூர் நல் நாட்டு, மூவலூர்ச்
சீர் ஆர் குணாதித்தன் சேய் அமையப் பாடினான் -
கார் ஆர் காகுத்தன் கதை. 8
எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல், சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்பநாடன்
பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில்,
கண்ணிய அரங்கர் முன்னே, கவி அரங்கேற்றினானே. 9
கழுந்தராய் உன கழல் பணியாதவர் கதிர் மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ! அபிநவ கவிநாதன்
விழுந்த நாயிறுஅது எழுவதன்முன், மறை வேதியருடன் ஆராய்ந்து,
எழுந்த நாயிறு விழுவதன்முன் கவி பாடியது எழுநூறே. 10
கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment