Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 101

மாவலி

கணவன் போல் தெய்வம் வேறு இல்லை என்று கருதும் பெண் போல இந்த ஆறு தூய்மையானது. இங்குள்ள சோலை திருமால் அமர்ந்து தவம் செய்த இடம் – என்று விசுவாமித்திரன் இரானுக்குக் கூறினான். 6
இங்கு இருந்துகொண்டு திருமால் நூறு ஊழி ஆண்டுகள் யோகம் செய்தார். 7
அக்காலத்தில் மாவலி என்னும் மன்னன் வானகத்தையும் மண்ணகத்தையும் தனதாக்கிக்கொண்டான். 8
வானவர் வேள்வி செய்ய முடியாமல் மாவலி தடுத்தான். 9
வானவர் திருமாலை வணங்கி மாவலியின் கொடுமைக்குத் தீர்வு காணுமாறு வேண்டினர். திருமால் அதனைச் செய்ய ஒப்புக்கொண்டான். 10

'தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை' என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றும் கேளாய்:
எங்கள் நான்மறைக்கும், தேவர் அறிவிற்கும், பிறர்க்கும், எட்டாச்
செங் கண் மால் இருந்து, மேல்நாள் செய் தவம் செய்தது அன்றே           6

'"பாரின்பால், விசும்பின்பாலும், பற்று அறப் படிப்பது அன்னான்
பேர்" என்ப; "அவன் செய் மாயப் பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார்
ஆர்?" என்பான்; அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம்;
ஈர்-ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து, இப்பால்.                7

'ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்,
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்;               8

'செய்தபின், வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்;
ஐயம் இல் சிந்தையர் அந்தணர் தம்பால்,
வையமும் யாவும் வழங்க, வலித்தான்;         9

'ஆயது அறிந்தனர் வானவர், அந் நாள்;
மாயனை வந்து வணங்கி இரந்தார்;
"தீயவன் வெந் தொழில் தீர்" என நின்றார்;
நாயகனும், அது செய்ய நயந்தான்.        10

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...