மாவலி
கணவன் போல் தெய்வம் வேறு இல்லை என்று கருதும் பெண் போல இந்த ஆறு தூய்மையானது. இங்குள்ள சோலை திருமால் அமர்ந்து தவம் செய்த இடம் – என்று விசுவாமித்திரன் இரானுக்குக் கூறினான். 6
இங்கு இருந்துகொண்டு திருமால் நூறு ஊழி ஆண்டுகள் யோகம் செய்தார். 7
அக்காலத்தில் மாவலி என்னும் மன்னன் வானகத்தையும் மண்ணகத்தையும் தனதாக்கிக்கொண்டான். 8
வானவர் வேள்வி செய்ய முடியாமல் மாவலி தடுத்தான். 9
வானவர் திருமாலை வணங்கி மாவலியின் கொடுமைக்குத் தீர்வு காணுமாறு வேண்டினர். திருமால் அதனைச் செய்ய ஒப்புக்கொண்டான். 10
'தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை' என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றும் கேளாய்:
எங்கள் நான்மறைக்கும், தேவர் அறிவிற்கும், பிறர்க்கும், எட்டாச்
செங் கண் மால் இருந்து, மேல்நாள் செய் தவம் செய்தது அன்றே 6
'"பாரின்பால், விசும்பின்பாலும், பற்று அறப் படிப்பது அன்னான்
பேர்" என்ப; "அவன் செய் மாயப் பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார்
ஆர்?" என்பான்; அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம்;
ஈர்-ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து, இப்பால். 7
'ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்,
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்; 8
'செய்தபின், வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்;
ஐயம் இல் சிந்தையர் அந்தணர் தம்பால்,
வையமும் யாவும் வழங்க, வலித்தான்; 9
'ஆயது அறிந்தனர் வானவர், அந் நாள்;
மாயனை வந்து வணங்கி இரந்தார்;
"தீயவன் வெந் தொழில் தீர்" என நின்றார்;
நாயகனும், அது செய்ய நயந்தான். 10
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
கணவன் போல் தெய்வம் வேறு இல்லை என்று கருதும் பெண் போல இந்த ஆறு தூய்மையானது. இங்குள்ள சோலை திருமால் அமர்ந்து தவம் செய்த இடம் – என்று விசுவாமித்திரன் இரானுக்குக் கூறினான். 6
இங்கு இருந்துகொண்டு திருமால் நூறு ஊழி ஆண்டுகள் யோகம் செய்தார். 7
அக்காலத்தில் மாவலி என்னும் மன்னன் வானகத்தையும் மண்ணகத்தையும் தனதாக்கிக்கொண்டான். 8
வானவர் வேள்வி செய்ய முடியாமல் மாவலி தடுத்தான். 9
வானவர் திருமாலை வணங்கி மாவலியின் கொடுமைக்குத் தீர்வு காணுமாறு வேண்டினர். திருமால் அதனைச் செய்ய ஒப்புக்கொண்டான். 10
'தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை' என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றும் கேளாய்:
எங்கள் நான்மறைக்கும், தேவர் அறிவிற்கும், பிறர்க்கும், எட்டாச்
செங் கண் மால் இருந்து, மேல்நாள் செய் தவம் செய்தது அன்றே 6
'"பாரின்பால், விசும்பின்பாலும், பற்று அறப் படிப்பது அன்னான்
பேர்" என்ப; "அவன் செய் மாயப் பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார்
ஆர்?" என்பான்; அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம்;
ஈர்-ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து, இப்பால். 7
'ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்,
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்; 8
'செய்தபின், வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்;
ஐயம் இல் சிந்தையர் அந்தணர் தம்பால்,
வையமும் யாவும் வழங்க, வலித்தான்; 9
'ஆயது அறிந்தனர் வானவர், அந் நாள்;
மாயனை வந்து வணங்கி இரந்தார்;
"தீயவன் வெந் தொழில் தீர்" என நின்றார்;
நாயகனும், அது செய்ய நயந்தான். 10
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment