படைக்கலன் அருளியது
மக்களின் வறுமை நோயைப் போக்கும் சடையப்ப வள்ளலின் சொல் போல் பயன் தரும் படைக்கருவிகளை விசுவாமித்திரன் இராமனுக்கு வழங்கினான். 1
ஆறிய அறிவினை உடைய முனிவன் அளித்தவுடன் தேவர்களின் படைக்கருவிகள் எல்லாம் இராமனுக்கு வந்து சேர்ந்தன. செய்த நல்வினைப் பயன் மறுபிறவியில் வந்து சேர்வது போல வந்து சேர்ந்தன. 2
இராமன் ஏவியதைச் செய்து நிற்கும் இலக்குவன் போல தேவர் படை இராமனுக்குப் பணியாற்றியது. 3
இரண்டு காவத தூரம் அவர்கள் சென்றனர். அங்கு ஓர் இரைச்சல் கேட்டது. இந்த இரைச்சல் யாது என இராமன் முனிவனை வினவினான். 4
என் முன்னாள் மனைவி இங்கு ஆறாக மாறி ஒலிக்கிறாள் என்றார் முனிவர். பின்னர் அங்கு இருந்த சோலையை “இது யாது” என்று இராமன் வினவினான். 5
விண்ணவர் போய பின்றை, விரிந்த பூமழையினாலே
தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந் தவத்தின் மிக்கோன்,
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே. 1
ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல்தன்பால்,
ஊறிய உவகையோடும், உம்பர்தம் படைகள் எல்லாம்,
தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவபோல், வந்த அன்றே. 2
'மேவினம்; பிரிதல் ஆற்றேம்; வீர! நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும், இளையவன் போல' என்று
தேவர்தம் படைகள் செப்ப, 'செவ்விது' என்று அவனும் நேர,
பூவைபோல் நிறத்தினாற்குப் புறத்தொழில் புரிந்த அன்றே. 3
இனையன நிகழ்ந்த பின்னர், காவதம் இரண்டு சென்றார்;
அனையவர் கேட்க, ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகித் தோன்ற,
'முனைவ! ஈது யாவது?' என்று, முன்னவன் வினவ, பின்னர்,
வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான்: 4
'எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள்' என்று,
அம் முனி புகல, கேளா, அதிசயம் மிகவும் தோன்ற,
செம்மலும் இளைய கோவும், சிறிது இடம் தீர்ந்த பின்னர்,
'மைம் மலி பொழில் யாது?' என்ன, மா தவன் கூறலுற்றான்: 5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
மக்களின் வறுமை நோயைப் போக்கும் சடையப்ப வள்ளலின் சொல் போல் பயன் தரும் படைக்கருவிகளை விசுவாமித்திரன் இராமனுக்கு வழங்கினான். 1
ஆறிய அறிவினை உடைய முனிவன் அளித்தவுடன் தேவர்களின் படைக்கருவிகள் எல்லாம் இராமனுக்கு வந்து சேர்ந்தன. செய்த நல்வினைப் பயன் மறுபிறவியில் வந்து சேர்வது போல வந்து சேர்ந்தன. 2
இராமன் ஏவியதைச் செய்து நிற்கும் இலக்குவன் போல தேவர் படை இராமனுக்குப் பணியாற்றியது. 3
இரண்டு காவத தூரம் அவர்கள் சென்றனர். அங்கு ஓர் இரைச்சல் கேட்டது. இந்த இரைச்சல் யாது என இராமன் முனிவனை வினவினான். 4
என் முன்னாள் மனைவி இங்கு ஆறாக மாறி ஒலிக்கிறாள் என்றார் முனிவர். பின்னர் அங்கு இருந்த சோலையை “இது யாது” என்று இராமன் வினவினான். 5
விண்ணவர் போய பின்றை, விரிந்த பூமழையினாலே
தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந் தவத்தின் மிக்கோன்,
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே. 1
ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல்தன்பால்,
ஊறிய உவகையோடும், உம்பர்தம் படைகள் எல்லாம்,
தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவபோல், வந்த அன்றே. 2
'மேவினம்; பிரிதல் ஆற்றேம்; வீர! நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும், இளையவன் போல' என்று
தேவர்தம் படைகள் செப்ப, 'செவ்விது' என்று அவனும் நேர,
பூவைபோல் நிறத்தினாற்குப் புறத்தொழில் புரிந்த அன்றே. 3
இனையன நிகழ்ந்த பின்னர், காவதம் இரண்டு சென்றார்;
அனையவர் கேட்க, ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகித் தோன்ற,
'முனைவ! ஈது யாவது?' என்று, முன்னவன் வினவ, பின்னர்,
வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான்: 4
'எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள்' என்று,
அம் முனி புகல, கேளா, அதிசயம் மிகவும் தோன்ற,
செம்மலும் இளைய கோவும், சிறிது இடம் தீர்ந்த பின்னர்,
'மைம் மலி பொழில் யாது?' என்ன, மா தவன் கூறலுற்றான்: 5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment