Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 104

அளக்க உயர்ந்த கால் வானுலகையும் மண்ணுலகையும் இரண்டு தப்படிகளால் அளந்தது
விசுவரூபம்

மாவலி கூறுகிறான். தானம் கேட்டு வருபவர் பழி உண்டாக்குபவர் அல்லர். கொடுப்பவரைத் தடுப்பவரே பகைவர். 21
கையில் உள்ளபோதே கொடுத்தல் அறம். தடுப்பது உலோபம். 22
இவ்வாறெல்லாம், அமைச்சன் கூற்றைத் தடுத்துக் கூறிய மாவலி, “உன் காலடிகளால் மூன்று அடி அளந்துகொள்க” என்று கூறிக்கொண்டு வாமணன் கையிலிருந்த கண்டிகை நீரை வாங்கித் தாரை வார்ந்தான். 23
மாவலி தாரை வார்த்த நீர் கையில் பட்டதும் வாமணன் வியப்பும் அச்சமும் கொள்ளுமாறு வானளாவ உயர்ந்தான். உயர்ந்தவர்க்குச் செய்த உதவி பெரிதாவது போல உயர்ந்தான். 24
அளக்க உயர்ந்த கால் வானுலகம் மண்ணுலகம் அனைத்தையும் இரண்டு தப்படிகளால் அளந்துவிட்டது. 25

'"அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்;
கொடுப்பவர் முன்பு, 'கொடேல்' என நின்று,
தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை" என்றான்.   21

'"கட்டுரையின், தம கைத்து உள போழ்தே
இட்டு, இசைகொண்டு, அறன் எய்த முயன்றோர்
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்;
'விட்டிடல்' என்று விலக்கினர் தாமே."              22

'முடிய இம் மொழி எலாம் மொழிந்து, மந்திரி,
"கொடியன்" என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன்;
"அடி ஒரு மூன்றும், நீ, அளந்து கொள்க" என,
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான்.          23

'கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்,
பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கினான் -
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.       24

'நின்ற கால் மண் எலாம் நிரப்பி, அப்புறம்
சென்று பாவிற்றிலை, சிறிது பார் எனா;
ஒன்ற, வானகம் எலாம் ஒடுக்கி, உம்பரை
வென்ற கால் மீண்டது, வெளி பெறாமையே.              25

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...