மிகைப் பாடல்கள் – பகுதி 1 – நூறு மகளிர்
மானச மடுவில் தோன்றி ஓடிவருவருவதால் ‘சரயு’ என்று இந்த ஆற்றை அமரர்கள் போற்றுகிறனர். இந்த அற்றில் கோமதி என்னும் ஆறு வந்து கலக்கும் ஓசைதான் இங்குக் கேட்கின்றது என்று விசுவாமித்திரர் இராமனுக்குக் கூறினார். 4-1
“தேவர் தொழும் ஆறு என்றது ஏன்?” என்று இராமன் வினவினான். முனிவர் விளக்குகிறார். குசன் மக்கள் நான்பேர். 4-2
கவுசாம்பி நாட்டில் வாழ்ந்த குசன், மகோதயம் நாட்டில் வாழ்ந்த குசநாபன், தன்மவனம் என்னும் பகுதியில் வாழ்ந்த ஆதூர்த்தன், வக்கிரி-விரசம் என்னும் பகுதியில் வாழ்ந்த வசு என்போர் அந்த நால்வர். 4-3
இவர்களில் குசநாபர்க்கு நூறு பெண்பிள்ளைகள். இவர்கள் தம் தோழிமாருடன் பூங்காவில் இருந்தபோது ‘வாயு’ அவர்களைக் கவர நினைத்தான். 4-4
அவர்களிடம் சென்று “காமன் அம்புகளால் நோகிறேன். என்னை அணைத்துக்கொள்ளுங்கள்” என்றான். “என் தந்தையிடம் சொல்லுங்கள்; அவன் எங்களை உனக்குத் தாரை வார்த்துத் தந்தால் அணைக்கிறோம்” என்றனர். இச்சொற்களைப் பொறுத்துக்கொள்ளாத வாயு பலமாக வீசி அவர்களின் முதுகை ஒடித்தான். அதனால் அந்த மகளிர் அனைவரும் மண்ணில் வீழ்ந்தனர். 4-5
'மானச மடுவில் தோன்றி வருதலால், 'சரயு' என்றே
மேல் முறை அமரர் போற்றும் விழு நதி அதனினோடும்,
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது' என்ன, அப்பால்
போனபின், பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார். 4-1
சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது?' என்றே,
வரமுனிதன்னை, அண்ணல் வினவுற, மலருள் வைகும்
பிரமன் அன்று அளித்த வென்றிப் பெருந்தகைக் குசன் என்று ஓதும்
அரசர்கோன் அளித்த மைந்தர் அரு மறை அனைய நால்வர்; 4-2
'குசன், குசநாபன், கோது இல் குணத்தின் ஆதூர்த்தன், கொற்றத்து
இசை கெழு வசு, என்று ஓதும் இவர் பெயர்; இவர்கள் தம்முள்,
குசன் கவுசாம்பி, நாபன் குளிர் மகோதயம், ஆதூர்த்தன்
வசை இல் தன்மவனம், மற்றை வக் கிரிவிரசம், வாழ்ந்தார். 4-3
'அவர்களில் குசநாபற்கே ஐ-இருபதின்மர் அம்சொல்
துவர் இதழ்த் தெரிவை நல்லார் தோன்றினர் வளரும் நாளில்
இவர் பொழில்-தலைக்கண் ஆயத்து எய்துழி, வாயு எய்தி,
கவர் மனத்தினனாய், அந்தக் கன்னியர் தம்மை நோக்கி, 4-4
'கொடித்தனி மகரம் கொண்டான் குனி சிலைச் சரத்தால் நொந்தேன்;
வடித் தடங் கண்ணீர்! என்னை மணத்திர்' என்று உரைப்ப, "எந்தை
அடித்தலத்து உரைத்து, நீரோடு அளித்திடின், அணைதும்" என்ன,
ஒடித்தனன் வெரிநை; வீழ்ந்தார், ஒளி வளை மகளிர் எல்லாம். 4-5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
மானச மடுவில் தோன்றி ஓடிவருவருவதால் ‘சரயு’ என்று இந்த ஆற்றை அமரர்கள் போற்றுகிறனர். இந்த அற்றில் கோமதி என்னும் ஆறு வந்து கலக்கும் ஓசைதான் இங்குக் கேட்கின்றது என்று விசுவாமித்திரர் இராமனுக்குக் கூறினார். 4-1
“தேவர் தொழும் ஆறு என்றது ஏன்?” என்று இராமன் வினவினான். முனிவர் விளக்குகிறார். குசன் மக்கள் நான்பேர். 4-2
கவுசாம்பி நாட்டில் வாழ்ந்த குசன், மகோதயம் நாட்டில் வாழ்ந்த குசநாபன், தன்மவனம் என்னும் பகுதியில் வாழ்ந்த ஆதூர்த்தன், வக்கிரி-விரசம் என்னும் பகுதியில் வாழ்ந்த வசு என்போர் அந்த நால்வர். 4-3
இவர்களில் குசநாபர்க்கு நூறு பெண்பிள்ளைகள். இவர்கள் தம் தோழிமாருடன் பூங்காவில் இருந்தபோது ‘வாயு’ அவர்களைக் கவர நினைத்தான். 4-4
அவர்களிடம் சென்று “காமன் அம்புகளால் நோகிறேன். என்னை அணைத்துக்கொள்ளுங்கள்” என்றான். “என் தந்தையிடம் சொல்லுங்கள்; அவன் எங்களை உனக்குத் தாரை வார்த்துத் தந்தால் அணைக்கிறோம்” என்றனர். இச்சொற்களைப் பொறுத்துக்கொள்ளாத வாயு பலமாக வீசி அவர்களின் முதுகை ஒடித்தான். அதனால் அந்த மகளிர் அனைவரும் மண்ணில் வீழ்ந்தனர். 4-5
'மானச மடுவில் தோன்றி வருதலால், 'சரயு' என்றே
மேல் முறை அமரர் போற்றும் விழு நதி அதனினோடும்,
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது' என்ன, அப்பால்
போனபின், பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார். 4-1
சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது?' என்றே,
வரமுனிதன்னை, அண்ணல் வினவுற, மலருள் வைகும்
பிரமன் அன்று அளித்த வென்றிப் பெருந்தகைக் குசன் என்று ஓதும்
அரசர்கோன் அளித்த மைந்தர் அரு மறை அனைய நால்வர்; 4-2
'குசன், குசநாபன், கோது இல் குணத்தின் ஆதூர்த்தன், கொற்றத்து
இசை கெழு வசு, என்று ஓதும் இவர் பெயர்; இவர்கள் தம்முள்,
குசன் கவுசாம்பி, நாபன் குளிர் மகோதயம், ஆதூர்த்தன்
வசை இல் தன்மவனம், மற்றை வக் கிரிவிரசம், வாழ்ந்தார். 4-3
'அவர்களில் குசநாபற்கே ஐ-இருபதின்மர் அம்சொல்
துவர் இதழ்த் தெரிவை நல்லார் தோன்றினர் வளரும் நாளில்
இவர் பொழில்-தலைக்கண் ஆயத்து எய்துழி, வாயு எய்தி,
கவர் மனத்தினனாய், அந்தக் கன்னியர் தம்மை நோக்கி, 4-4
'கொடித்தனி மகரம் கொண்டான் குனி சிலைச் சரத்தால் நொந்தேன்;
வடித் தடங் கண்ணீர்! என்னை மணத்திர்' என்று உரைப்ப, "எந்தை
அடித்தலத்து உரைத்து, நீரோடு அளித்திடின், அணைதும்" என்ன,
ஒடித்தனன் வெரிநை; வீழ்ந்தார், ஒளி வளை மகளிர் எல்லாம். 4-5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment