மிகைப் பாடல்கள் – பகுதி 2 – கவுசிகை ஆற்றுப் பாடல் ஒலி
வாயு சென்ற பின்னர் 100 மகளிரும் தவழ்ந்து சென்று தந்தையிடம் கூறினர். தந்தை மகளிரைத் தேற்றி, பிரமதத்தன் என்பவனுக்கு மணம் செய்து கொடுத்தான். 4-6
பிரமதத்தன் அவர்களை நீவியதும் அனைவரும் கூன் நிமிர்ந்தனர். இவன் குழந்தை இல்லாமையால் வேள்வி ஒன்று செய்தான். அதன் பயனாக் காதி என்பவன் மகனாகப் பிறந்தான். 4-7
இந்தக் காதிக்குப் பிரமதத்தன் ஆட்சியைக் கொடுத்தான். அந்தக் காதிக்கு நானும் (விசுவாமித்திரன்) கவுசிகை என்னும் பெண்ணும் பிறந்தோம். 4-8
பிருகு முனிவனின் மகன் இரிசிகன். இந்த இரிசிகனுக்கு என் தந்தை கவுசிகையை மணம் செய்து கொடுத்தார். 4-9
காதலன் இரிசிகன் நெடுந்தொலைவு சென்றுவிட்டான். அதனால் கவுசிகை ஆறாக மாறி ஓடிப் பாடலானாள். இதுதான் கவுசிகை ஆற்று ஓசை என்று விசுவாமித்திரன் இராமனுக்குக் கூறினான். 4-10
'சமிரணன் அகன்றதன் பின், தையலார், தவழ்ந்து சென்றே,
அமிர்து உகு குதலை மாழ்கி, அரசன் மாட்டு உரைப்ப, அன்னான்,
நிமிர் குழல் மடவார்த்தேற்றி, நிறை தவன் சூளி நல்கும்
திமிர் அறு பிரமதத்திற்கு அளித்தனன், திரு அனாரை. 4-6
'அவன் மலர்க் கைகள் நீவ, கூன் நிமிர்ந்து, அழகு வாய்த்தார்;
புவனம் முற்றுடைய கோவும், புதல்வர் இல்லாமை, வேள்வி
தவர்களின் புரிதலோடும், தகவு உற, தழலின் நாப்பண்,
கவனவேகத் துரங்கக் காதி வந்து உதயம்செய்தான். 4-7
'அன்னவன் தனக்கு, வேந்தன், அரசொடு, முடியும் ஈந்து,
பொன்னகர் அடைந்த பின்னர், புகழ் மகோதயத்தில் வாழும்
மன்னவன் காதிக்கு, யானும், கவுசிகை என்னும் மாதும்,
முன்னர் வந்து உதிப்ப, அந்த முடியுடை வேந்தர் வேந்தன். 4-8
'பிருகுவின் மதலை ஆய, பெருந் தகைப் பிதாவும் ஒவ்வா,
இரிசிகன் என்பவற்கு மெல்லியலாளை ஈந்தான்;
அரு மறையவனும் சில் நாள் அறம் பொருள் இன்பம் முற்றி,
விரி மலர்த் தவிசோன் தன்பால் விழுத் தவம் புரிந்து மீண்டான். 4-9
காதலன் சேணின் நீங்க, கவுசிகை தரிக்கலாற்றாள்,
மீது உறப் பாடலுற்றாள், விழு நதி வடிவம் ஆகி;
மா தவர்க்கு அரசு நோக்கி, "மா நிலத்து உறுகண் நீக்கப்
போதுக, நதியாய்" என்னா, பூமகன் உலகு புக்கான். 4-10
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
வாயு சென்ற பின்னர் 100 மகளிரும் தவழ்ந்து சென்று தந்தையிடம் கூறினர். தந்தை மகளிரைத் தேற்றி, பிரமதத்தன் என்பவனுக்கு மணம் செய்து கொடுத்தான். 4-6
பிரமதத்தன் அவர்களை நீவியதும் அனைவரும் கூன் நிமிர்ந்தனர். இவன் குழந்தை இல்லாமையால் வேள்வி ஒன்று செய்தான். அதன் பயனாக் காதி என்பவன் மகனாகப் பிறந்தான். 4-7
இந்தக் காதிக்குப் பிரமதத்தன் ஆட்சியைக் கொடுத்தான். அந்தக் காதிக்கு நானும் (விசுவாமித்திரன்) கவுசிகை என்னும் பெண்ணும் பிறந்தோம். 4-8
பிருகு முனிவனின் மகன் இரிசிகன். இந்த இரிசிகனுக்கு என் தந்தை கவுசிகையை மணம் செய்து கொடுத்தார். 4-9
காதலன் இரிசிகன் நெடுந்தொலைவு சென்றுவிட்டான். அதனால் கவுசிகை ஆறாக மாறி ஓடிப் பாடலானாள். இதுதான் கவுசிகை ஆற்று ஓசை என்று விசுவாமித்திரன் இராமனுக்குக் கூறினான். 4-10
'சமிரணன் அகன்றதன் பின், தையலார், தவழ்ந்து சென்றே,
அமிர்து உகு குதலை மாழ்கி, அரசன் மாட்டு உரைப்ப, அன்னான்,
நிமிர் குழல் மடவார்த்தேற்றி, நிறை தவன் சூளி நல்கும்
திமிர் அறு பிரமதத்திற்கு அளித்தனன், திரு அனாரை. 4-6
'அவன் மலர்க் கைகள் நீவ, கூன் நிமிர்ந்து, அழகு வாய்த்தார்;
புவனம் முற்றுடைய கோவும், புதல்வர் இல்லாமை, வேள்வி
தவர்களின் புரிதலோடும், தகவு உற, தழலின் நாப்பண்,
கவனவேகத் துரங்கக் காதி வந்து உதயம்செய்தான். 4-7
'அன்னவன் தனக்கு, வேந்தன், அரசொடு, முடியும் ஈந்து,
பொன்னகர் அடைந்த பின்னர், புகழ் மகோதயத்தில் வாழும்
மன்னவன் காதிக்கு, யானும், கவுசிகை என்னும் மாதும்,
முன்னர் வந்து உதிப்ப, அந்த முடியுடை வேந்தர் வேந்தன். 4-8
'பிருகுவின் மதலை ஆய, பெருந் தகைப் பிதாவும் ஒவ்வா,
இரிசிகன் என்பவற்கு மெல்லியலாளை ஈந்தான்;
அரு மறையவனும் சில் நாள் அறம் பொருள் இன்பம் முற்றி,
விரி மலர்த் தவிசோன் தன்பால் விழுத் தவம் புரிந்து மீண்டான். 4-9
காதலன் சேணின் நீங்க, கவுசிகை தரிக்கலாற்றாள்,
மீது உறப் பாடலுற்றாள், விழு நதி வடிவம் ஆகி;
மா தவர்க்கு அரசு நோக்கி, "மா நிலத்து உறுகண் நீக்கப்
போதுக, நதியாய்" என்னா, பூமகன் உலகு புக்கான். 4-10
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment