Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - வேள்விப் படலம் Kamba Ramayanam 112

மிகைப் பாடல்கள் – பகுதி 3

வெள்ளி என்னும் சுக்கிரன் பெயர் கொண்ட அமைச்சன் மாவலி கொடுப்பதைத் தடுத்தான். அதனைக் கண்டித்து மாவலி கூறிகிறான். “வெள்ளியே! கொடுப்பதற்கு முன்னர் தடுக்கின்றாய். இது தகைமை ஆகுமா? நீ கொடியவன். உன் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கொடும். 21-1
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
அண்பதூஉம் இன்றிக் கெடும் – திருக்குறள்
தாரை வார்க்க மாவலி மன்னன் குண்டிகையில் நீர் ஊற்றும்போது சுக்கிரன் வண்டாக மாறிக் குண்டிகையில் நீர் வரும் வாயை அடைத்துக்கொண்டான். அதனை உணர்ந்த வாமணன் தன் தருப்பைப் புல்லை நுழைத்துக் குண்டிகை வாயிலிருந்த சுக்கிரன் கண்ணைக் குத்திக் குருடாக்கவிட்டான். சுக்கிரன் விலகிவிட்டான். 23-1
அடைத்திருந்த சுக்கிரனின் உடைந்த கண்ணிலிருந்து நீர் ஒழுக, வாமணன் கையை ஏந்தித் தாரை வார்த்த நீரை வாங்கிக்கொண்டான். 23-2

'எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்,
தடுப்பது நினக்கு அழகிதோ, தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கும் கொடியோய்! உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!.  21-1

குறியவன் கையில் நீர் விழாமல், குண்டிகை
மறிபட, வாமனன் மலர்க் கைத் தர்ப்பையால்,
செறிவது நீக்கிட, சிதைந்து கண் உடைந்து
உறு துயர் வெள்ளியும் ஒதுங்கிப் போயினான்.         23-1

நீட்டிய வேலையில் நீரை மாற்றினான்;
நாட்டம் அது அகத்துளான், சிலம்பின் நாமத்தான்,
ஓட்டினன் தருப்பையை; உடை கண் நீர் விழ,
வாட்டம் இல் அந்தணன் மலர்க் கை நீட்டினான்.     23-2   

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 8. வேள்விப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...