அகழியை அடுத்துச் சோலை
16
வங்கக் கடலில் குளிக்கும் யானை மீளமுடியாமல் மூழ்குவது போல முதலைகள் அகழியில் இருந்தன.
17
அரக்கர் படை சீறி வருவது போல முதலைகள் அந்த அகழியில் சீறும்.
18
யானை, குதிரை, வாள்-வேல் மறவர் படை போரிடுவது போல அகழியில் மீன்கள் உலவின. இந்த மீன்கள் வானத்து மீன்கள் போலவும், அகழியில் மேயும் அன்னம் வானத்து நிலா போலவும் விளங்கின.
19
மதிலும் அகழியும் கல்லை அடுத்திருக்கும் நீர்த்தேக்கம் போலக் காணப்பட்டது.
20
மதில் உடுத்தியிருக்கும் நீலநிற ஆடை போல அகழியை அடுத்துச் சோலை இருந்தது.
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கிடைக் கிடந்து பொங்கு இடங்கர் மா,-
தாழ்ந்த வங்க வாரியில், தடுப்ப ஒணா மதத்தினால்,
ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே 16
ஈரும் வாளின் வால் விதிர்த்து, எயிற்று இளம் பிறைக் குலம்
பேர மின்னி வாய் விரித்து, எரிந்த கண் பிறங்கு தீச்
சோர, ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கர் மா,-
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே. 17
ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் கராக்
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ,
தாள் உலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா,
வாளும், வேலும், மீனம் ஆக, -மன்னர் சேனை மானுமே. 18
விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி, உள்ளுறப்
பளிங்கு பொன்-தலத்து அகட்டு அடுத்துறப் படுத்தலின்,
'தளிந்த கல்-தலத்தொடு, அச் சலத்தினை, தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்' என்றல் தேவராலும் ஆவதே? 19
அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
துன்னி, வேறு சூழ்கிடந்த தூங்கு, வீங்கு, இருட் பிழம்பு
என்னலாம், இறும்பு சூழ்கிடந்த சோலை; எண்ணில், அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே. 20
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
16
வங்கக் கடலில் குளிக்கும் யானை மீளமுடியாமல் மூழ்குவது போல முதலைகள் அகழியில் இருந்தன.
17
அரக்கர் படை சீறி வருவது போல முதலைகள் அந்த அகழியில் சீறும்.
18
யானை, குதிரை, வாள்-வேல் மறவர் படை போரிடுவது போல அகழியில் மீன்கள் உலவின. இந்த மீன்கள் வானத்து மீன்கள் போலவும், அகழியில் மேயும் அன்னம் வானத்து நிலா போலவும் விளங்கின.
19
மதிலும் அகழியும் கல்லை அடுத்திருக்கும் நீர்த்தேக்கம் போலக் காணப்பட்டது.
20
மதில் உடுத்தியிருக்கும் நீலநிற ஆடை போல அகழியை அடுத்துச் சோலை இருந்தது.
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கிடைக் கிடந்து பொங்கு இடங்கர் மா,-
தாழ்ந்த வங்க வாரியில், தடுப்ப ஒணா மதத்தினால்,
ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே 16
ஈரும் வாளின் வால் விதிர்த்து, எயிற்று இளம் பிறைக் குலம்
பேர மின்னி வாய் விரித்து, எரிந்த கண் பிறங்கு தீச்
சோர, ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கர் மா,-
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே. 17
ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் கராக்
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ,
தாள் உலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா,
வாளும், வேலும், மீனம் ஆக, -மன்னர் சேனை மானுமே. 18
விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி, உள்ளுறப்
பளிங்கு பொன்-தலத்து அகட்டு அடுத்துறப் படுத்தலின்,
'தளிந்த கல்-தலத்தொடு, அச் சலத்தினை, தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்' என்றல் தேவராலும் ஆவதே? 19
அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
துன்னி, வேறு சூழ்கிடந்த தூங்கு, வீங்கு, இருட் பிழம்பு
என்னலாம், இறும்பு சூழ்கிடந்த சோலை; எண்ணில், அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே. 20
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 3. நகரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment