தயரதன் கொடைகள்
மகன்கள் பிறந்த செய்தியைத் தோழிமார் தயரதனுக்குத் தெரிவித்தனர். கணியர் பிறந்த நேரம் நல்ல நேரம் என்றனர். 106
தயரதன் நீராடினான். விதைகளைப் பொருளோடு பலருக்கும் வழங்கினான். வசிட்ட முனிவரோடு சென்று மகன்களைக் கண்டான். 107
ஏழு ஆண்டுகளுக்கு வரி இல்லை. கருவூலத்தில் உள்ள பொருள்களை ஏழைகள் அள்ளிக்கொள்ளவாம் என்று பறை அறையும்படிச் செய்தான். 108
படையெடுப்பு இல்லை. அரசர்கள் தம் ஊர் செல்லலாம். அந்தணர் குறையில்லாமல் சடங்குகளைச் செய்யலாம். ஊரில் விழாக்கள் நடைபெறட்டும் – என்றெல்லாம் கூறினான். 109
ஆலயங்களைப் புதிதாக்குங்கள். அந்தணர் வாழுமிடம், மன்றச்சதுக்கம் ஆகியவற்றைப் புதிதாக உருவாக்குங்கள். கடவுள் பூசை மூன்று வேளையும் சிறப்பாக நடைபெறட்டும் – என்றெல்லாம் ஆணையிட்டான். 110
ஓடினர் அரசன்மாட்டு, உவகை கூறி நின்று
ஆடினர், சிலதியர்; அந்தணாளர்கள்
கூடினர்; நாளொடு கோளும் நின்றமை
நாடினர்; 'உலகு இனி நவை இன்று' என்றனர். 106
மா முனிதன்னொடு, மன்னர் மன்னவன்,
ஏமுறப் புனல் படீஇ, வித்தொடு இன் பொருள்
தாம் உற வழங்கி, வெண் சங்கம் ஆர்ப்புற,
கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான். 107
'"இறை தவிர்ந்திடுக பார், யாண்டு ஒர் ஏழ்; நிதி
நிறை தரு சாலை தாள் நீக்கி, யாவையும்,
முறை கெட, வறியவர் முகந்து கொள்க" எனா,
அறை பறை' என்றனன் - அரசர் கோமகன். 108
'படை ஒழிந்திடுக; தம்பதிகளே, இனி,
விடை பெறுகுக, முடி வேந்தர்; வேதியர்,
நடையுறு நியமமும் நவை இன்று ஆகுக;
புடை கெழு விழாவொடு பொலிக, எங்கணும். 109
'ஆலையம் புதுக்குக; அந்தணாளர்தம்
சாலையும், சதுக்கமும், சமைக்க, சந்தியும்;
காலையும் மாலையும், கடவுளர்க்கு, அணி
மாலையும் தீபமும், வழங்குக' என்றனன். 110
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
மகன்கள் பிறந்த செய்தியைத் தோழிமார் தயரதனுக்குத் தெரிவித்தனர். கணியர் பிறந்த நேரம் நல்ல நேரம் என்றனர். 106
தயரதன் நீராடினான். விதைகளைப் பொருளோடு பலருக்கும் வழங்கினான். வசிட்ட முனிவரோடு சென்று மகன்களைக் கண்டான். 107
ஏழு ஆண்டுகளுக்கு வரி இல்லை. கருவூலத்தில் உள்ள பொருள்களை ஏழைகள் அள்ளிக்கொள்ளவாம் என்று பறை அறையும்படிச் செய்தான். 108
படையெடுப்பு இல்லை. அரசர்கள் தம் ஊர் செல்லலாம். அந்தணர் குறையில்லாமல் சடங்குகளைச் செய்யலாம். ஊரில் விழாக்கள் நடைபெறட்டும் – என்றெல்லாம் கூறினான். 109
ஆலயங்களைப் புதிதாக்குங்கள். அந்தணர் வாழுமிடம், மன்றச்சதுக்கம் ஆகியவற்றைப் புதிதாக உருவாக்குங்கள். கடவுள் பூசை மூன்று வேளையும் சிறப்பாக நடைபெறட்டும் – என்றெல்லாம் ஆணையிட்டான். 110
ஓடினர் அரசன்மாட்டு, உவகை கூறி நின்று
ஆடினர், சிலதியர்; அந்தணாளர்கள்
கூடினர்; நாளொடு கோளும் நின்றமை
நாடினர்; 'உலகு இனி நவை இன்று' என்றனர். 106
மா முனிதன்னொடு, மன்னர் மன்னவன்,
ஏமுறப் புனல் படீஇ, வித்தொடு இன் பொருள்
தாம் உற வழங்கி, வெண் சங்கம் ஆர்ப்புற,
கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான். 107
'"இறை தவிர்ந்திடுக பார், யாண்டு ஒர் ஏழ்; நிதி
நிறை தரு சாலை தாள் நீக்கி, யாவையும்,
முறை கெட, வறியவர் முகந்து கொள்க" எனா,
அறை பறை' என்றனன் - அரசர் கோமகன். 108
'படை ஒழிந்திடுக; தம்பதிகளே, இனி,
விடை பெறுகுக, முடி வேந்தர்; வேதியர்,
நடையுறு நியமமும் நவை இன்று ஆகுக;
புடை கெழு விழாவொடு பொலிக, எங்கணும். 109
'ஆலையம் புதுக்குக; அந்தணாளர்தம்
சாலையும், சதுக்கமும், சமைக்க, சந்தியும்;
காலையும் மாலையும், கடவுளர்க்கு, அணி
மாலையும் தீபமும், வழங்குக' என்றனன். 110
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment