தனியன்
பிறர் பாடியவை
26
அரக்கர் படையை அழித்த இராமன் வலிமையைச் சொல்லுபவருக்கு எண்ணிய பெருள் கைகூடும். ஞானமும் புகழும் உண்டாகும். திருமகள் உடனிருப்பாள்.
27
கம்பன் கூற்றாக அமைந்துள்ள பாடல் – வான் வளம் சுரக்கட்டும். மனுநீதி வளரட்டும். நல்லவர்கள் சுற்றம் தழைக்கட்டும். தெசரத-இராமன் செய்கை பற்றிச் சொன்ன என் பாடல் ஒளி பெறட்டும்.
9-1 அவையடக்கப் பாடல்
உலகில் உள்ள தமிழ்ப்புலவர்கள் நகைக்குமாறு நான் சொல்கிறேன். இராமன் கதை இருப்பதால் இது அவர்களுக்கு அமிழ்தமாக இருக்கும்.
நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்;
வீடு இயல் வழிஅது ஆக்கும்; வேரி அம் கமலை நோக்கும்;-
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே. 26
வான் வளம் சுரக்க! நீதி மனு நெறி முறை எந் நாளும்
தான் வளர்ந்திடுக! நல்லோர்தம் கிளை தழைத்து வாழ்க!
தேன் வளர்ந்து அறாத மாலைத் தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறிந்த பாடல் இடையறாது ஒளிர்க, எங்கும்! 27
பாயிரம் (மிகைப்பாடல்)
எறிகடல் உலகம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியதாக மொழிந்தெனன்; மொழிந்த என் சொல்
சிறுமையும், சிலை இராமன் கதைவழிச் செறிதல் தன்னால்,
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம், அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே. 9-1
கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
பிறர் பாடியவை
26
அரக்கர் படையை அழித்த இராமன் வலிமையைச் சொல்லுபவருக்கு எண்ணிய பெருள் கைகூடும். ஞானமும் புகழும் உண்டாகும். திருமகள் உடனிருப்பாள்.
27
கம்பன் கூற்றாக அமைந்துள்ள பாடல் – வான் வளம் சுரக்கட்டும். மனுநீதி வளரட்டும். நல்லவர்கள் சுற்றம் தழைக்கட்டும். தெசரத-இராமன் செய்கை பற்றிச் சொன்ன என் பாடல் ஒளி பெறட்டும்.
9-1 அவையடக்கப் பாடல்
உலகில் உள்ள தமிழ்ப்புலவர்கள் நகைக்குமாறு நான் சொல்கிறேன். இராமன் கதை இருப்பதால் இது அவர்களுக்கு அமிழ்தமாக இருக்கும்.
நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்;
வீடு இயல் வழிஅது ஆக்கும்; வேரி அம் கமலை நோக்கும்;-
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே. 26
வான் வளம் சுரக்க! நீதி மனு நெறி முறை எந் நாளும்
தான் வளர்ந்திடுக! நல்லோர்தம் கிளை தழைத்து வாழ்க!
தேன் வளர்ந்து அறாத மாலைத் தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறிந்த பாடல் இடையறாது ஒளிர்க, எங்கும்! 27
பாயிரம் (மிகைப்பாடல்)
எறிகடல் உலகம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியதாக மொழிந்தெனன்; மொழிந்த என் சொல்
சிறுமையும், சிலை இராமன் கதைவழிச் செறிதல் தன்னால்,
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம், அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே. 9-1
கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment