தனியன்
பிறர் பாடியவை
21
வடமொழி, தென்மொழி, தெருங்கு, கன்னடம் எந்த பொழியிலாயினும் சூரிய குலத்து இராமன் கதையைக் கேட்டவர் தேவர் ஆவார்.
22
இராமன் பிறந்த கதையை அன்போடு கேட்டவர் குழந்தைப் பேறும் புண்ணியமும் பெறுவர்.
23
“அரி ஓம் நம” என்று நாராயணன் கதையைக் கேட்டவர் நீதி இனுபோகம், நீடித்த ஆயுள், அரசாளும் செல்வப் பேறு, சோதி வடிவம், முத்தி ஆகியவற்றைப் பெறுவர்.
24
இராகவன் கதையில் ஒரு பாடலைக் கேட்டவர் அழிவில்லாத அவன் அடிகளை பெறுவர்.
25
கதை முழுவதையும் எழுதியவர், ஓதியவர், கற்றோர் இவ்வுலகில் அரசர்க்கு அரசராய் வாழ்ந்து தேவர் பதம் பெறுவர்.
வட கலை, தென் கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே. 21
இத் தலத்தின் இராமாவதாரமே
பத்திசெய்து, பரிவுடன் கேட்பரேல்,
புத்திரர்த் தரும்; புண்ணியமும் தரும்;
அத் தலத்தில் அவன் பதம் எய்துமே. 22
'ஆதி "அரி ஓம் நம" நராயணர் திருக்கதை அறிந்து, அனுதினம் பரவுவோர்,
நீதி அனுபோக நெறி நின்று, நெடுநாள் அதின் இறந்து, சகதண்டம் முழுதுக்கு
ஆதிபர்களாய்அரசுசெய்து,உளம்நினைத்தது கிடைத்து,அருள்பொறுத்து,முடிவில்
சோதி வடிவு ஆய், அழிவு இல் முத்தி பெறுவார்' என உரைத்த, கருதித் தொகைகளே. 23
இராகவன் கதையில், ஒரு கவிதன்னில் ஏக பாதத்தினை உரைப்போர்,
பராவ அரும் மலரோன் உலகினில், அவனும் பல் முறை வழுத்த, வீற்றிருந்து,
புராதன மறையும் அண்டர் பொன் பதமும் பொன்றும் நாள்அதனினும், பொன்றா
அரா அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே. 24
இனைய நல் காதை முழுதும் எழுதினோர், ஓதினோர், கற்றோர்,
அனையதுதன்னைச் சொல்வோர்க்கு அரும்பொருள் கொடுத்துக் கேட்டோர்,
கனை கடல் புடவி மீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து,
வினையம் அது அறுத்து, மேல் ஆம் விண்ணவன் பதத்தில் சேர்வார். 25
கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
பிறர் பாடியவை
21
வடமொழி, தென்மொழி, தெருங்கு, கன்னடம் எந்த பொழியிலாயினும் சூரிய குலத்து இராமன் கதையைக் கேட்டவர் தேவர் ஆவார்.
22
இராமன் பிறந்த கதையை அன்போடு கேட்டவர் குழந்தைப் பேறும் புண்ணியமும் பெறுவர்.
23
“அரி ஓம் நம” என்று நாராயணன் கதையைக் கேட்டவர் நீதி இனுபோகம், நீடித்த ஆயுள், அரசாளும் செல்வப் பேறு, சோதி வடிவம், முத்தி ஆகியவற்றைப் பெறுவர்.
24
இராகவன் கதையில் ஒரு பாடலைக் கேட்டவர் அழிவில்லாத அவன் அடிகளை பெறுவர்.
25
கதை முழுவதையும் எழுதியவர், ஓதியவர், கற்றோர் இவ்வுலகில் அரசர்க்கு அரசராய் வாழ்ந்து தேவர் பதம் பெறுவர்.
வட கலை, தென் கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே. 21
இத் தலத்தின் இராமாவதாரமே
பத்திசெய்து, பரிவுடன் கேட்பரேல்,
புத்திரர்த் தரும்; புண்ணியமும் தரும்;
அத் தலத்தில் அவன் பதம் எய்துமே. 22
'ஆதி "அரி ஓம் நம" நராயணர் திருக்கதை அறிந்து, அனுதினம் பரவுவோர்,
நீதி அனுபோக நெறி நின்று, நெடுநாள் அதின் இறந்து, சகதண்டம் முழுதுக்கு
ஆதிபர்களாய்அரசுசெய்து,உளம்நினைத்தது கிடைத்து,அருள்பொறுத்து,முடிவில்
சோதி வடிவு ஆய், அழிவு இல் முத்தி பெறுவார்' என உரைத்த, கருதித் தொகைகளே. 23
இராகவன் கதையில், ஒரு கவிதன்னில் ஏக பாதத்தினை உரைப்போர்,
பராவ அரும் மலரோன் உலகினில், அவனும் பல் முறை வழுத்த, வீற்றிருந்து,
புராதன மறையும் அண்டர் பொன் பதமும் பொன்றும் நாள்அதனினும், பொன்றா
அரா அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே. 24
இனைய நல் காதை முழுதும் எழுதினோர், ஓதினோர், கற்றோர்,
அனையதுதன்னைச் சொல்வோர்க்கு அரும்பொருள் கொடுத்துக் கேட்டோர்,
கனை கடல் புடவி மீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து,
வினையம் அது அறுத்து, மேல் ஆம் விண்ணவன் பதத்தில் சேர்வார். 25
கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment