தனியன்
பிறர் பாடியவை
16
இராம என்னும் ஒரு சொல்லைச் சொன்னால் அது ஆயிரம் மகம் தவம் புரிந்ததன் பயனைத் தரும். உலகில் உள்ள அனைத்துச் செல்வத்தையும் புகழையும் தரும். எல்லாப் பாவங்களையும் போக்கும்.
17
இலங்கையை அழித்தவன் வெற்றிப் பாடலில் ஒரு பாடல் கற்றவர், சொல்லக் கேட்டவர், நெஞ்சில் எண்ணுபவர், இந்த உலகில் அரசன் போல் வாழ்வார். வீடு பேற்றினை எய்துவார்.
18
இலங்கை வென்ற வீரக் கதையில் ஒன்றைப் படித்தவர், சொல்லக் கேட்டவர், “இது நன்று” என்று சொன்னவர் நரகம் அடையமாட்டார்.
19
சாகும்போது “இராம” என்றவர் தேவர் ஆவார். அவர் வைகுந்தம் சேர்வர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
20
இராமன் கதையை மறவாதவர் அன்னதானம், பிற தானம், பசு தானம், கன்னி தானம், முதலான தானம் தானம் செய்தவர் அடையும் பயனை எய்துவர்.
ஒராயிரம் மகம் புரி பயனை உய்க்குமே;
நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே,
விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே-
'இராம' என்று ஒரு மொழி இயம்பும் காலையே. 16
மற்று ஒரு தவமும் வேண்டா; மணி மதில் இலங்கை மூதூர்
செற்றவன் விசயப் பாடல் தெளிந்து, அதில் ஒன்று தன்னைக்
கற்றவர், கேட்போர், நெஞ்சில் கருதுவோர், இவர்கள் பார்மேல்
உற்று அரசு ஆள்வர்; பின்னும் உம்பராய் வீட்டில் சேர்வார். 17
வென்றி சேர் இலங்கையானை வென்ற மால் வீரம் ஓத
நின்ற ராமாயணத்தில் நிகழ்ந்திடு கதைகள் தம்மில்
ஒன்றினைப் படித்தோர் தாமும், உரைத்திடக் கேட்டோ ர் தாமும்,
'நன்று இது' என்றோர் தாமும், நரகம் அது எய்திடாரே. 18
இறு வரம்பில் 'இராம' என்றோர், உம்பர்
நிறுவர் என்பது நிச்சயம்; ஆதலால்,
மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம்
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ? 19
அன்ன தானம், அகில நல் தானங்கள்,
கன்னி தானம், கபிலையின் தானமே,
சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவார்-
மன் இராம கதை மறவார்க்கு அரோ. 20
கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
பிறர் பாடியவை
16
இராம என்னும் ஒரு சொல்லைச் சொன்னால் அது ஆயிரம் மகம் தவம் புரிந்ததன் பயனைத் தரும். உலகில் உள்ள அனைத்துச் செல்வத்தையும் புகழையும் தரும். எல்லாப் பாவங்களையும் போக்கும்.
17
இலங்கையை அழித்தவன் வெற்றிப் பாடலில் ஒரு பாடல் கற்றவர், சொல்லக் கேட்டவர், நெஞ்சில் எண்ணுபவர், இந்த உலகில் அரசன் போல் வாழ்வார். வீடு பேற்றினை எய்துவார்.
18
இலங்கை வென்ற வீரக் கதையில் ஒன்றைப் படித்தவர், சொல்லக் கேட்டவர், “இது நன்று” என்று சொன்னவர் நரகம் அடையமாட்டார்.
19
சாகும்போது “இராம” என்றவர் தேவர் ஆவார். அவர் வைகுந்தம் சேர்வர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
20
இராமன் கதையை மறவாதவர் அன்னதானம், பிற தானம், பசு தானம், கன்னி தானம், முதலான தானம் தானம் செய்தவர் அடையும் பயனை எய்துவர்.
ஒராயிரம் மகம் புரி பயனை உய்க்குமே;
நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே,
விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே-
'இராம' என்று ஒரு மொழி இயம்பும் காலையே. 16
மற்று ஒரு தவமும் வேண்டா; மணி மதில் இலங்கை மூதூர்
செற்றவன் விசயப் பாடல் தெளிந்து, அதில் ஒன்று தன்னைக்
கற்றவர், கேட்போர், நெஞ்சில் கருதுவோர், இவர்கள் பார்மேல்
உற்று அரசு ஆள்வர்; பின்னும் உம்பராய் வீட்டில் சேர்வார். 17
வென்றி சேர் இலங்கையானை வென்ற மால் வீரம் ஓத
நின்ற ராமாயணத்தில் நிகழ்ந்திடு கதைகள் தம்மில்
ஒன்றினைப் படித்தோர் தாமும், உரைத்திடக் கேட்டோ ர் தாமும்,
'நன்று இது' என்றோர் தாமும், நரகம் அது எய்திடாரே. 18
இறு வரம்பில் 'இராம' என்றோர், உம்பர்
நிறுவர் என்பது நிச்சயம்; ஆதலால்,
மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம்
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ? 19
அன்ன தானம், அகில நல் தானங்கள்,
கன்னி தானம், கபிலையின் தானமே,
சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவார்-
மன் இராம கதை மறவார்க்கு அரோ. 20
கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment