மிதிலை நாட்டு வளம்
உழத்தியர் கண் நிழலை நீரில் பார்த்த நாரை கயல்மீன் என்று எண்ணி கவ்விப் பார்த்து நாணும் வயல்கள் நிறைந்த மிதிலை நாட்டை மூவரும் அடைந்தனர். (இராமன், இலக்குவன், விசுவாமித்திரன்) 6
மதகில் பாயும் நீர் முழவின் ஒலியை எழுப்பிற்று. அசோகம்-பூக்கள் விளக்கு எரிவது போல் பூத்தன. பூக்களில் தேன் உண்டு பாடும் வண்டுகள் யாழிசை கூட்டின. மயில்கள் ஆடின. 7
காவிமலர் போன்ற கண் கொண்ட உழத்தியர் பார்வைத் தூதால் உழவர் மயங்கினர். 8
நடையைக் கண்ட அன்னம் உழத்தியரைத் தன் இனம் என எண்ணிக்கொண்டது. உழத்தியர் உரையைக் கேட்ட குயில்களும் அவ்வாறே தம் இனம் என்று எண்ணிக்கொண்டன. உழத்தியர் வயலில் ஓயாமல் நடப்பதால், வயலிலுள்ள பூக்கள் உறங்கினாலும் பறவைகள் உறங்குவதில்லை. 9
எருமை முலையில் சொரிந்த பால், உதிர்ந்த மாம்பழம் அழுகிய சாறு, கரும்பில் கட்டிய தேன் ஒழுகும் நறை – இவையே நீரில் கலந்திருந்தன. 10
பள்ளி நீங்கிய, பங்கயப் பழன நல் நாரை,
வெள்ள வான் களை களைவுறும் கடைசியர் மிளிர்ந்த
கள்ள வாள் நெடுங் கண் நிழல், கயல் எனக் கருதா,
அள்ளி, நாணுறும், அகன் பணை மிதிலை நாடு அணைந்தார். 6
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க,
அரும்பு நாள்மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப,
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின்,
சுரும்பு, பாண் செய, தோகை நின்று ஆடுவ-சோலை. 7
பட்ட வாள் நுதல் மடந்தையர், பார்ப்பு எனும் தூதால்,
எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப,
வட்ட நாள் மரை மலரின் மேல், வயலிடை மள்ளர்
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ-கழனி. 8
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர,
கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்வாய்,
ஓவு இல் குங்குமச் சுவடு உற, ஒன்றோடு ஒன்று ஊடி,
பூ உறங்கினும், புன் உறங்காதன - பொய்கை. 9
முறையினின் முது மேதியின் முலை வழி பாலும்,
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும்,
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும், அழி தேம்
நறையும் அல்லது, நளிர் புனல் பெருகலா-நதிகள். 10
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
உழத்தியர் கண் நிழலை நீரில் பார்த்த நாரை கயல்மீன் என்று எண்ணி கவ்விப் பார்த்து நாணும் வயல்கள் நிறைந்த மிதிலை நாட்டை மூவரும் அடைந்தனர். (இராமன், இலக்குவன், விசுவாமித்திரன்) 6
மதகில் பாயும் நீர் முழவின் ஒலியை எழுப்பிற்று. அசோகம்-பூக்கள் விளக்கு எரிவது போல் பூத்தன. பூக்களில் தேன் உண்டு பாடும் வண்டுகள் யாழிசை கூட்டின. மயில்கள் ஆடின. 7
காவிமலர் போன்ற கண் கொண்ட உழத்தியர் பார்வைத் தூதால் உழவர் மயங்கினர். 8
நடையைக் கண்ட அன்னம் உழத்தியரைத் தன் இனம் என எண்ணிக்கொண்டது. உழத்தியர் உரையைக் கேட்ட குயில்களும் அவ்வாறே தம் இனம் என்று எண்ணிக்கொண்டன. உழத்தியர் வயலில் ஓயாமல் நடப்பதால், வயலிலுள்ள பூக்கள் உறங்கினாலும் பறவைகள் உறங்குவதில்லை. 9
எருமை முலையில் சொரிந்த பால், உதிர்ந்த மாம்பழம் அழுகிய சாறு, கரும்பில் கட்டிய தேன் ஒழுகும் நறை – இவையே நீரில் கலந்திருந்தன. 10
பள்ளி நீங்கிய, பங்கயப் பழன நல் நாரை,
வெள்ள வான் களை களைவுறும் கடைசியர் மிளிர்ந்த
கள்ள வாள் நெடுங் கண் நிழல், கயல் எனக் கருதா,
அள்ளி, நாணுறும், அகன் பணை மிதிலை நாடு அணைந்தார். 6
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க,
அரும்பு நாள்மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப,
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின்,
சுரும்பு, பாண் செய, தோகை நின்று ஆடுவ-சோலை. 7
பட்ட வாள் நுதல் மடந்தையர், பார்ப்பு எனும் தூதால்,
எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப,
வட்ட நாள் மரை மலரின் மேல், வயலிடை மள்ளர்
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ-கழனி. 8
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர,
கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்வாய்,
ஓவு இல் குங்குமச் சுவடு உற, ஒன்றோடு ஒன்று ஊடி,
பூ உறங்கினும், புன் உறங்காதன - பொய்கை. 9
முறையினின் முது மேதியின் முலை வழி பாலும்,
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும்,
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும், அழி தேம்
நறையும் அல்லது, நளிர் புனல் பெருகலா-நதிகள். 10
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment