அகலிகையைக் கோதமனிடம் ஒப்படைத்தல்
அகலிகையோடு மூவரும் கோதமன் இருப்பிடம் சென்றனர். 26
“மை நிறம் கொண்ட இராமன் காலடிப் புழுதி மேனியில் பட்டதும் அகலிகை பெண் உருவம் பெற்றாள். இவள் நெஞ்சத்தில் பிழை இல்லாதவள். இவளை அழைத்துக்கொள்க” என்று விசுவாமித்திரன் கோதமனுக்குக் கூறினான். பிரமன் போன்ற கோதமனும் அதனை நெஞ்சில் ஏற்றுக்கொண்டான். 27
கோதமனை வணங்கி, அகலிகையை அவனிடம் ஒப்படைத்துவிட்டு, மூவரும் மிதிலை மதிலின் கிடங்கை அடைந்தனர். 28
அருந்தவன் உறையுள்தன்னை அனையவர் அணுகலோடும்,
விருந்தினர்தம்மைக் காணா, மெய்ம் முனி, வியந்த நெஞ்சன்,
பரிந்து எதிர் கொண்டு புக்கு, கடன் முறை பழுதுறாமல்
புரிந்தபின், காதி செம்மல் புனித மா தவனை நோக்கி, 26
'அஞ்சன வண்ணத்தாந்தன் அடித் துகள் கதுவாமுன்னம்,
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!' என்ன,
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும், கருத்துள் கொண்டான் 27
குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத் தாள்கள்
வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அருந் தவனோடும், வாச
மணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை கண்டார். 28
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
அகலிகையோடு மூவரும் கோதமன் இருப்பிடம் சென்றனர். 26
“மை நிறம் கொண்ட இராமன் காலடிப் புழுதி மேனியில் பட்டதும் அகலிகை பெண் உருவம் பெற்றாள். இவள் நெஞ்சத்தில் பிழை இல்லாதவள். இவளை அழைத்துக்கொள்க” என்று விசுவாமித்திரன் கோதமனுக்குக் கூறினான். பிரமன் போன்ற கோதமனும் அதனை நெஞ்சில் ஏற்றுக்கொண்டான். 27
கோதமனை வணங்கி, அகலிகையை அவனிடம் ஒப்படைத்துவிட்டு, மூவரும் மிதிலை மதிலின் கிடங்கை அடைந்தனர். 28
அருந்தவன் உறையுள்தன்னை அனையவர் அணுகலோடும்,
விருந்தினர்தம்மைக் காணா, மெய்ம் முனி, வியந்த நெஞ்சன்,
பரிந்து எதிர் கொண்டு புக்கு, கடன் முறை பழுதுறாமல்
புரிந்தபின், காதி செம்மல் புனித மா தவனை நோக்கி, 26
'அஞ்சன வண்ணத்தாந்தன் அடித் துகள் கதுவாமுன்னம்,
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!' என்ன,
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும், கருத்துள் கொண்டான் 27
குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத் தாள்கள்
வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அருந் தவனோடும், வாச
மணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை கண்டார். 28
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment