திருமகள் மாலை
இராமன், இலக்குவன், விசுவாமித்திரன் மூவரும்ஒரு சோலையை அடைந்தனர். அந்தச் சோலையைப் பற்றி இராமன் முனிவனை வினவினான். முனிவன் சொல்கிறான். இது காசிபன் மனைவி தவம் செய்த இடம். 3-1
திருமகள் அவள்முன் தோன்றி ஒரு மலர்மாலை கொடுத்தாள் 3-2
அந்த மாலையை வாங்கிய காசிபன் மனைவி அதனை யார் ஒன்றில் கட்டி எடுத்துக்கொண்டு சென்றாள். 3-3
அப்போது முனிவன் ஒருவன் வந்தான். மாலையை முனிவனுக்குக் கொடுத்து இது திருமகள் தந்த மாலை என்று அதன் சிறப்பினைத் தெரிவித்தாள். 3-4
முனிவன் அதனை ஏற்றுத் தன் தலையில் சூடிக்கொண்டு தேவர் உலகம் சென்றான். 3-5
'இனைய சோலை மற்று யாது?' என இராகவன் வினவ,
வினை எலாம் அற நோற்றவன் விளம்புவான்; 'மேல்நாள்,
தனையவர் ஆனவர்க்கு இரங்கியே, காசிபன் தனது
மனையுளாள் தவம் புரிந்தனள், இவண்' என வலித்தான். 3-1
'அண்ட கோளகைக்கு அப்புறத்து, என்னை ஆளுடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி, ஓர் விஞ்சையர் கோதை,
புண்டரீக மென் பதத்தியைப் புகழ்ந்தனள்; புகழ,
வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து. 3-2
'அன்ன மாலையை யாழிடைப் பிணித்து, அயன் உலகம்,
கன்னி மீடலும், கசட்டுறு முனி எதிர் காணா,
"என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள்" என்று,
அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும், அனையாள். 3-3
'"உலகம் யாவையும் படைத்து, அளித்து, உண்டு, உமிழ், ஒருவன்
இலகு மார்பகத்து இருந்து, உயிர் யாவையும் ஈன்ற
திலக வாணுதல் சென்னியில் சூடிய தெரியல்,
அலகு இல் மா முனி பெறுக" என் அளித்தனள் அளியால், 3-4
'"தெய்வ நாயகி சென்னியின் சூடிய தெரியல்,
ஐய! யான் பெறப் புரிந்தது எத் தவம்?" என ஆடி,
வெய்ய மா முனி சென்னியில் சூடியே, வினை போய்
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து, உம்பர் நாடு அடைந்தான் 3-5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
இராமன், இலக்குவன், விசுவாமித்திரன் மூவரும்ஒரு சோலையை அடைந்தனர். அந்தச் சோலையைப் பற்றி இராமன் முனிவனை வினவினான். முனிவன் சொல்கிறான். இது காசிபன் மனைவி தவம் செய்த இடம். 3-1
திருமகள் அவள்முன் தோன்றி ஒரு மலர்மாலை கொடுத்தாள் 3-2
அந்த மாலையை வாங்கிய காசிபன் மனைவி அதனை யார் ஒன்றில் கட்டி எடுத்துக்கொண்டு சென்றாள். 3-3
அப்போது முனிவன் ஒருவன் வந்தான். மாலையை முனிவனுக்குக் கொடுத்து இது திருமகள் தந்த மாலை என்று அதன் சிறப்பினைத் தெரிவித்தாள். 3-4
முனிவன் அதனை ஏற்றுத் தன் தலையில் சூடிக்கொண்டு தேவர் உலகம் சென்றான். 3-5
'இனைய சோலை மற்று யாது?' என இராகவன் வினவ,
வினை எலாம் அற நோற்றவன் விளம்புவான்; 'மேல்நாள்,
தனையவர் ஆனவர்க்கு இரங்கியே, காசிபன் தனது
மனையுளாள் தவம் புரிந்தனள், இவண்' என வலித்தான். 3-1
'அண்ட கோளகைக்கு அப்புறத்து, என்னை ஆளுடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி, ஓர் விஞ்சையர் கோதை,
புண்டரீக மென் பதத்தியைப் புகழ்ந்தனள்; புகழ,
வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து. 3-2
'அன்ன மாலையை யாழிடைப் பிணித்து, அயன் உலகம்,
கன்னி மீடலும், கசட்டுறு முனி எதிர் காணா,
"என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள்" என்று,
அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும், அனையாள். 3-3
'"உலகம் யாவையும் படைத்து, அளித்து, உண்டு, உமிழ், ஒருவன்
இலகு மார்பகத்து இருந்து, உயிர் யாவையும் ஈன்ற
திலக வாணுதல் சென்னியில் சூடிய தெரியல்,
அலகு இல் மா முனி பெறுக" என் அளித்தனள் அளியால், 3-4
'"தெய்வ நாயகி சென்னியின் சூடிய தெரியல்,
ஐய! யான் பெறப் புரிந்தது எத் தவம்?" என ஆடி,
வெய்ய மா முனி சென்னியில் சூடியே, வினை போய்
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து, உம்பர் நாடு அடைந்தான் 3-5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment