Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 120

இந்திரன்

தேவர் உலகில் இந்திரன் ஐராவதம் என்னும் களிற்றின் மேல் தெருவில் உலா வந்துகொண்டிருந்தான். 3-6
அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி ஆகியோர் பாடி ஆடிக்கொண்டிருந்தனர். காமன் தன் அம்பை எய்துகொண்டிருந்தான். 3-7
நிலா அசைவது போல இரு மருங்கும் வெண்சாமரை அவனுக்கு வீசிக்கொண்டிருந்தது. நிலா போன்ற வெண்கொற்றக் குடையின்கீழ் அவன் வீற்றிருந்தான். 3-8
பேரிகை, குறடு, பாண்டில், சங்கு ஆகியவை நான்மறை முழக்கம் போல ஒலிக்கும் விழாக் கோலத்தில் இந்திரனை முனிவன் கண்டான். 3-9
முனிவன் திருமகள் மாலையை இந்திரனுக்கு வழங்கினான். இந்திரன் அந்த மாலையைத் தன் கையிலிருந்த தோட்டியால் (யானையைச் செலுத்தும் அங்குசம்) வாங்கி, தன் யானையின் கழுத்தில் வைத்தான். அந்த யானை அந்த மாலையைத் தன் துதிக்கையால் எடுத்துத் தன் காலடியில் போட்டு மிதித்தது. 3-10

'பெய்யும் மா முகில் வெள்ளிஅம் பிறங்கல் மீப் பிறழும்
செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து, செங் கதிரின்
மொய்ய சோதியை மிலைச்சிய முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு, அயிராவதக் களிற்றின் மேல் விலங்க,   3-6

'அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி, அனங்கன்
சரம் பெய் தூணியின் தளிர் அடி நூபுரம் தழைப்ப,
கரும்பையும் சுவை கைப்பித்த குதலையர், விளரி
நிரம்பு பாடலோடு ஆடினர், வீதிகள் நெருங்க,            3-7

'நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலாக் கற்றை
போலவே, இரு புடையினும், சாமரை புரள,
கோல மா மதி குறைவு அற நிறைந்து, ஒளி குலாவி,
மேல் உயர்ந்தென வெள்ளி அம் தனிக் குடை விளங்க,     3-8

'தழங்கு பேரியும், குறட்டொடு பாண்டிலும், சங்கும்,
வழங்கு கம்பலை மங்கல கீதத்தை மறைப்ப,
முழங்கு நான்மறை, மூரிநீர் முழக்கு என, உலகை
விழுங்க, மால் வரும் விழா அணி கண்டு உளம் வியந்தான்.       3-9

'தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால், வாசவன் தன் கை
வனையும் மாலையும் நீட்டலும், தோட்டியால் வாங்கி,
துனை வலத்து அயிராவதத்து எருத்திடைத் தொடுத்தான்;
பனை செய் கையினால் பறித்து அடிப்படுத்தது, அப் பகடு.              3-10

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...