Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம் - காப்பு Kamba Ramayanam 12

காப்பு
பிறர் பாடல்

11
இராமன் கதை சொல்லுமிடங்களிலெல்லாம் பாற்கடல் தெய்வத்தை நெஞ்சில் நிறுத்திக்கொள்வோம்.
12
பொத்தகச் சுவடி, படிகக்கல் மாலை, குண்டிகை ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் வெண்ணிற மேனி கொண்ட அமலை கலைமகளை வணங்குவோம்.
13
பார்வதி மகன் ஆனைமுகப் பிள்ளையாரை வணங்குவோம்.
14
சிவன் மகனான மூத்தவனை வணங்குவோம்.

எவ் இடத்தும், இராமன் சரிதை ஆம்
அவ் இடத்திலும், அஞ்சலி அத்தனாய்,
பவ்வ மிக்க புகழ்த் திருப் பாற்கடல்
தெய்வ தாசனைச் சிந்தை செய்வாம் அரோ.                11

பொத்தகம், படிகமாலை, குண்டிகை, பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செங் கை விமலையை, அமலைதன்னை,
மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலைத் தவள மேனி
மைத் தகு கருங் கண் செவ் வாய் அணங்கினை, வணங்கல் செய்வாம்.            12

தழை செவி, சிறு கண், தாழ் கைத் தந்த சிந்துரமும், தாரை
மழை மதத் தறு கண் சித்ர வாரண முகத்து வாழ்வை,
இழை இடைக் கலசக் கொங்கை இமகிரி மடந்தை ஈன்ற
குழவியைத் தொழுவன், அன்பால்-'குறைவு அற நிறைக' என்றே.         13

எக் கணக்கும் இறந்த பெருமையன்,
பொக்கணத்தன், புலி அதள் ஆடையன்,
முக்கண் அத்தன், வரம் பெற்ற மூப்பனை,
அக் கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம்.           14

கம்பராமாயணம் – பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...