Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 122

பாற்கடலைக் கடைதல்
அமிழ்தம் கடைக

முனிவரின் சாபத்தால் விண்ணகமும், மண்ணகமும் வறுமையுற்றது. அதனால் தேவர்களும், சிவனும், பிரமாவும் சேர்ந்து திருமாலிடம் சரண் அடைந்தனர். 3-17
திருமால் “அஞ்சவேண்டாம்” என்று கையமர்த்தினார். 3-18
திருமால் அவர்களிடம் கூறினார். மந்தரம் என்னும் மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை தயிர் கடையும் கயிறாகவும், நிலா தூணாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் வெவ்வேறு பக்கம் நின்று பாற்கடலை அமிழ்தம் தோன்றும்வரையில் கடையுங்கள் என்றார். 3-19
நானும் அங்கே வருவேன் என்றார். தேவர்கள் மகிழ்ந்து சென்றனர். 3-20

'வெய்ய மா முனி வெகுளியால் விண்ணகம் முதலாம்
வையம் யாவையும் வறுமை நோய் நலிய, வானோரும்,
தையல் பாகனும், சதுமுகக் கடவுளும், கூடி,
செய்ய தாமரைத் திரு மறு மார்பனைச் சேர்ந்தார். 3-17

'வெஞ் சொல் மா முனி வெகுளியால் விளைந்தமை விளம்பி,
கஞ்ச நாள் மலர்க் கிழவனும், கடவுளர் பிறரும்,
"தஞ்சம் இல்லை; நின் சரணமே சரண்" எனச் செப்ப,
"அஞ்சல், அஞ்சல்!" என்று உரைத்தனன், உலகு எலாம் அளந்தோன்  3-18

'"மத்து மந்தரம்; வாசுகி கடை கயிறு; அடை தூண்
மெத்து சந்திரன்; சுராசுரர் வேறு வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர்; ஓடதி கொடுத்து,
கத்து வாரிதி மறுகுற, அமிழ்து எழக் கடைமின்;      3-19

'"யாமும் அவ் வயின் வருதும்; நீர் கதுமென எழுந்து
போமின்" என்று அருள்புரிதலும், இறைஞ்சினர் புகழ்ந்து,
"நாமம் இன்று" எனக் குனித்தனர், நல்குரவு ஒழிந்தது.
ஆம் எனும் பெருங் களி துளக்குறுதலால், அமரர்.  3-20

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...