Sunday, February 25, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - அகலிகைப் படலம் Kamba Ramayanam 124

சரவணம்

திதி “மகன் ஒருவனை எனக்குத் தா” என்று காசிபனை வேண்டினாள். “பிள்ளை வரம் தந்தேன்” என்று காசிபன் கூறினான். “ஆயிரம் பருவ காலம் தவம் செய்து பெறுவாயாக” என்றும் கூறினார். 2-26
திதி என்பவளும் அவ்வாறே தவம் செய்தாள். இந்திரன் அவளுக்கு அடிமை செய்துவந்தான். திதி குழந்தை பெற்றதும் அதனை இந்திரன் கேட்டு வாங்கி ஏழு துண்டங்களாக வெட்டினான். திதி விம்மினாள். அந்தக் குழந்தைகளுக்கு “மருந்து” என்று பெயர் சூட்டிளாள். 3-27
இப்படி இந்திரன், திதி, மருந்து ஆகியோர் இருந்த சோலை இது என்று விசுவாமித்திரர் இராமனுக்குக் கூறினார். அந்த மைந்தன் உமை அளித்த மகன். அவன் வளர்ந்த இடம் சரவணம் என்னும் இந்தச் சோலை என்றும் முனிவர் கூறினார்.
தொடர்புடைய கதை


'என்று கூறலும், "மகவு உனக்கு அளித்தனம்; இனி, நீ,
சென்று பாரிடை, பருவம் ஓர் ஆயிரம் தீர,
நின்று, மா தவம் புரிதியேல், நினைவு முற்றுதி" என்று
அன்று கூறிட, புரிந்தனள் அருந்தவம் அனையாள்.              3-26

'கேட்ட வாசவன், அன்னவட்கு அடிமையில் கிடைத்து,
வாட்டம் மா தவத்து உணர்ந்து, அவள் வயிற்று உறு மகவை
வீட்டியே எழு கூறு செய்திடுதலும், விம்மி,
நாட்டம் நீர் தர, "மருந்து" எனும் நாமமும் நவின்றான்.      3-27

'ஆயது இவ் இடம்; அவ் இடம் அவிர் மதி அணிந்த
தூயவன் தனக்கு உமைவயின் தோன்றியே, தொல்லை
வாயுவும் புனல் கங்கையும் பொறுக்கலா வலத்த
சேய் வளர்ந்தருள் சரவணம் என்பதும் தெரிந்தான்.'             3-28

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...