சகரர்
இராமன், இலக்குவன், விசுவாமித்திரன் மூவரும்கங்கை ஆற்றை அடைந்தனர்.
இந்தப் பெரு நதியின் தகைமைகளைக் கூறுமாறு இராகவன் முனிவனை வேண்டினான். முனிவர் கூறலானார். அயோத்தியை உன் மரபில் முன்பு இருந்த சகரன் என்பவன் ஆண்டுவந்தான். 5-1
இந்த சகரனுக்கு இரண்டு பிள்ளைகள். இவர்களில் ஒருத்தி விதர்பை. இவள் கணவன் அசமன். அசமனுக்கு விதர்பை பெற்ற மகன் அஞ்சுமன். இவன் பறவை வேந்தன் சடாயு என்பவனுக்கு இளையவளாகிய சுமதி என்பவளை மணந்தான். அஞ்சுமன், சுமதி ஆகியோருக்குப் பிறந்த குழந்தைகள் அறுபதினாயிரம் (60,000) பேர். 5-2
இவர்களைப் பற்றிச் சகரன் இந்திரனிடம் சொன்னான். இவர்களின் வலிமையைக் கண்ட இந்திரன் அவர்களை கபிலன் என்னும் முனிவனின் குதிரைத் தொடையில் மறைத்து வைத்துவிட்டான். 5-3
இந்திரன் செய்தது அறியாமல் அஞ்சுமன் தன் மக்களைத் தேடி வருந்துகையில் சகரன் வாயிலாக உண்மையை அறிந்தான். 5-4
இதனைக் கேட்ட வேந்தன் அஞ்சுமன் சகரர் என்பாரைக் கொண்டு கபிலன் குதிரையைத் தேடச்செய்தான். சகரர்கள் நிலத்தைப் பாதாளம் வரைத் தோண்டினர். 5-5
'இந்த மா நதிக்கு உற்று உள தகைமை யாவும்,
எந்தை! கூறுக' என்று இராகவன் வினவுற, 'எனை ஆள்
மைந்த! நின் திரு மரபு உளான், அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன், சகரன், இம் மேதினி புரந்தான். 5-1
'விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில், விதர்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார். 5-2
'திண் திறல் புனை சகரனும், தனையர் சேவகங்கள்
கண்டு, முற்றிய அய மகம் புரிதலும், கனன்று,
வண்டு துற்று தார் வாசவற்கு உணர்த்தினர், வானோர்;
ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான். 5-3
'வாவு வாசிபின் சென்றனன் அஞ்சுமான் மறுகி,
பூவில் ஒர் இடம் இன்றியே நாடினன் புகுந்து,
தேவர் கோமகன் கரந்தமை அறிந்திலன், திகைத்து,
மேவு தாதைதன் தாதைபால் உரைத்தனன், மீண்டு. 5-4
'கேட்ட வேந்தனும், மதலையர்க்கு அம்மொழி கிளத்த,
வாட்டம் மீக் கொள, சகரர்கள் வடவையின் மறுகி,
நாட்டம் வெங் கனல் பொழிதர, நானிலம் துருவி,
தோட்டு நுங்கினர் புவியினை, பாதலம் தோன்ற. 5-5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
இராமன், இலக்குவன், விசுவாமித்திரன் மூவரும்கங்கை ஆற்றை அடைந்தனர்.
இந்தப் பெரு நதியின் தகைமைகளைக் கூறுமாறு இராகவன் முனிவனை வேண்டினான். முனிவர் கூறலானார். அயோத்தியை உன் மரபில் முன்பு இருந்த சகரன் என்பவன் ஆண்டுவந்தான். 5-1
இந்த சகரனுக்கு இரண்டு பிள்ளைகள். இவர்களில் ஒருத்தி விதர்பை. இவள் கணவன் அசமன். அசமனுக்கு விதர்பை பெற்ற மகன் அஞ்சுமன். இவன் பறவை வேந்தன் சடாயு என்பவனுக்கு இளையவளாகிய சுமதி என்பவளை மணந்தான். அஞ்சுமன், சுமதி ஆகியோருக்குப் பிறந்த குழந்தைகள் அறுபதினாயிரம் (60,000) பேர். 5-2
இவர்களைப் பற்றிச் சகரன் இந்திரனிடம் சொன்னான். இவர்களின் வலிமையைக் கண்ட இந்திரன் அவர்களை கபிலன் என்னும் முனிவனின் குதிரைத் தொடையில் மறைத்து வைத்துவிட்டான். 5-3
இந்திரன் செய்தது அறியாமல் அஞ்சுமன் தன் மக்களைத் தேடி வருந்துகையில் சகரன் வாயிலாக உண்மையை அறிந்தான். 5-4
இதனைக் கேட்ட வேந்தன் அஞ்சுமன் சகரர் என்பாரைக் கொண்டு கபிலன் குதிரையைத் தேடச்செய்தான். சகரர்கள் நிலத்தைப் பாதாளம் வரைத் தோண்டினர். 5-5
'இந்த மா நதிக்கு உற்று உள தகைமை யாவும்,
எந்தை! கூறுக' என்று இராகவன் வினவுற, 'எனை ஆள்
மைந்த! நின் திரு மரபு உளான், அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன், சகரன், இம் மேதினி புரந்தான். 5-1
'விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில், விதர்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார். 5-2
'திண் திறல் புனை சகரனும், தனையர் சேவகங்கள்
கண்டு, முற்றிய அய மகம் புரிதலும், கனன்று,
வண்டு துற்று தார் வாசவற்கு உணர்த்தினர், வானோர்;
ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான். 5-3
'வாவு வாசிபின் சென்றனன் அஞ்சுமான் மறுகி,
பூவில் ஒர் இடம் இன்றியே நாடினன் புகுந்து,
தேவர் கோமகன் கரந்தமை அறிந்திலன், திகைத்து,
மேவு தாதைதன் தாதைபால் உரைத்தனன், மீண்டு. 5-4
'கேட்ட வேந்தனும், மதலையர்க்கு அம்மொழி கிளத்த,
வாட்டம் மீக் கொள, சகரர்கள் வடவையின் மறுகி,
நாட்டம் வெங் கனல் பொழிதர, நானிலம் துருவி,
தோட்டு நுங்கினர் புவியினை, பாதலம் தோன்ற. 5-5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment