கபிலன் குதிரை
வடகிழக்குத் திசையில் சகரர் நூறு யோசனை நீள-அகலம், ஆழம் மண்ணைத் தோண்டினர். கபிலனுக்குப் பின்னால் இருந்த குதிரையைக் கண்டனர். குதிரையை வைதனர். 5-6
இதனைக் கண்ட முனிவன் சினந்தான். சபித்தான். அனைவரும் சாம்பல் ஆயினர். ஒற்றாளிகள் வேள்வி வேந்தனிடம் சென்று செய்தியைக் கூறினர். 5-7
“என் வேள்வி வீணாவதோ” என்று சொல்லிக்கொண்டு வேந்தன் கபிலன் வாழும் பாதாளம் சென்றான். 5-8
கபில முனிவரைத் தொழுதான். முனிவர் “குதிரையைக் கொண்டுசெல்” என்றார். 5-9
குதிரையைக் கொண்டுவந்த வேந்தன் அதனை வேள்வியில் இட்டுத் தேவர்களுக்கு அவிப்பாகம் ஆக்கானான். 5-10
'நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்
கூறு செய்தனர், என்பரால், வட குணதிசையில்;
ஏறு மா தவக் கபிலன்பின் இவுளி கண்டு, எரியின்
சீறி, வைதனர்; செருக்கினர், நெருக்கினர்; செறுத்தார். 5-6
'மூளும் வெஞ் சினத்து அருந்தவன் முனிந்து, எரி விழிப்ப,
பூளைசூடிதன் நகையினில் எயில் பொடிந்தனபோல்,
ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பர் ஆய் அவிந்தார்;
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர், வேயர். 5-7
'உழைத்த வெந் துயர்க்கு ஈறு காண்கிலன்; உணர்வு ஒழியா,
அழைத்து மைந்தன் தன் மைந்தனை, "அவர் கழிந்தனரேல்,
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ?" என, அவன் எழுந்து,
தழைத்த மா தவக் கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான். 5-8
'விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு
கண்டு, நுண்ணெனும் மனத்தினன், கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ,
"கொண்டு போக, நின் இவுளி!" என்று, உற்றதும் குறித்தான். 5-9
'பழுதிலாதவன் உரைத்த சொல் கேட்டலும், பரிவால்
தொழுது, வாம் பரி கொணர்ந்து, அவி சுரர்களுக்கு ஈயா,
முழுதும் வேள்வியை முற்றுவித்து, அரசனும் முடிந்தான் -
எழுது கீர்த்தியாய்!-மைந்தனுக்கு அரசியல் ஈந்து. 5-10
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
வடகிழக்குத் திசையில் சகரர் நூறு யோசனை நீள-அகலம், ஆழம் மண்ணைத் தோண்டினர். கபிலனுக்குப் பின்னால் இருந்த குதிரையைக் கண்டனர். குதிரையை வைதனர். 5-6
இதனைக் கண்ட முனிவன் சினந்தான். சபித்தான். அனைவரும் சாம்பல் ஆயினர். ஒற்றாளிகள் வேள்வி வேந்தனிடம் சென்று செய்தியைக் கூறினர். 5-7
“என் வேள்வி வீணாவதோ” என்று சொல்லிக்கொண்டு வேந்தன் கபிலன் வாழும் பாதாளம் சென்றான். 5-8
கபில முனிவரைத் தொழுதான். முனிவர் “குதிரையைக் கொண்டுசெல்” என்றார். 5-9
குதிரையைக் கொண்டுவந்த வேந்தன் அதனை வேள்வியில் இட்டுத் தேவர்களுக்கு அவிப்பாகம் ஆக்கானான். 5-10
'நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்
கூறு செய்தனர், என்பரால், வட குணதிசையில்;
ஏறு மா தவக் கபிலன்பின் இவுளி கண்டு, எரியின்
சீறி, வைதனர்; செருக்கினர், நெருக்கினர்; செறுத்தார். 5-6
'மூளும் வெஞ் சினத்து அருந்தவன் முனிந்து, எரி விழிப்ப,
பூளைசூடிதன் நகையினில் எயில் பொடிந்தனபோல்,
ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பர் ஆய் அவிந்தார்;
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர், வேயர். 5-7
'உழைத்த வெந் துயர்க்கு ஈறு காண்கிலன்; உணர்வு ஒழியா,
அழைத்து மைந்தன் தன் மைந்தனை, "அவர் கழிந்தனரேல்,
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ?" என, அவன் எழுந்து,
தழைத்த மா தவக் கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான். 5-8
'விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு
கண்டு, நுண்ணெனும் மனத்தினன், கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ,
"கொண்டு போக, நின் இவுளி!" என்று, உற்றதும் குறித்தான். 5-9
'பழுதிலாதவன் உரைத்த சொல் கேட்டலும், பரிவால்
தொழுது, வாம் பரி கொணர்ந்து, அவி சுரர்களுக்கு ஈயா,
முழுதும் வேள்வியை முற்றுவித்து, அரசனும் முடிந்தான் -
எழுது கீர்த்தியாய்!-மைந்தனுக்கு அரசியல் ஈந்து. 5-10
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment