பகிரதன்
சகரர் தோண்டிய பள்ளத்தில் நீர் தேங்கிச் சாகரம் என்னும் பெயரைப் பெற்றது. வேந்தன் நாடாண்டான். இவன் மரபில் வந்தவன் பகிரதன். 5-11
முன்னோர் இறந்த செய்தியைச் சிலர் பகிரதனுக்கு நினைவூட்டினர். 5-12
இறந்தவர் நரகம் செல்லாமல் இருக்க உதவ வேண்டும் என்று முனிவனைப் பகிரதன் வேண்டினான். 5-13
பிரமனை நோக்கித் தவம் செய்யுமாறு முனிவர் அறிவுறுத்தினார். 5-14
நாடாளும் பணியைச் சுமந்திரன் என்பவனிடம் ஒப்படைத்துவிட்டுப் பகிரதன் பதினாயிரம் (10,000) ஆண்டுகள் தவம் செய்தான். 5-15
'சகரம் தொட்டலால், "சாகரம்" எனப் பெயர் தழைப்ப,
மகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும்
நிகர் இல் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில்,
பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான். 5-11
'உலகம் யாவையும் பொது அறத் திகிரியை உருட்டி,
இவரும் மன்னவன் இருந்துழி, இறந்தவர் சரிதம்,
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட, அரசன்
திலகம் மண் உற வணங்கி நின்று, ஒரு மொழி செப்பும்: 5-12
'"கொடிய மா முனி வெகுளியின் மடிந்த எம் குரவர்
முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடு முறைமை
கடியுமாறு, எனக்கு அருந் தவம் அமைகுறு கருமம்,
அடிகள்! சாற்றுக" என்றலும், அந்தணன் அறைவான்: 5-13
'"வையம் ஆளுடை மன்னவர் மன்னவ! மடிந்தோர்
உய்ய, நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே,
செய்ய நாள் மலர்க் கிழவனை நோக்கி, நீ செய்தி;
நையல்!" என்று இனிது உரைத்தனன், நவை அறு முனிவன், 5-14
'ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி,
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி,
காலம் ஓர் பதினாயிரம் அருந் தவம் கழிப்ப,
மூல நான்மறைக் கிழவனும் வந்து, இவை மொழிவான்: 5-15
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
சகரர் தோண்டிய பள்ளத்தில் நீர் தேங்கிச் சாகரம் என்னும் பெயரைப் பெற்றது. வேந்தன் நாடாண்டான். இவன் மரபில் வந்தவன் பகிரதன். 5-11
முன்னோர் இறந்த செய்தியைச் சிலர் பகிரதனுக்கு நினைவூட்டினர். 5-12
இறந்தவர் நரகம் செல்லாமல் இருக்க உதவ வேண்டும் என்று முனிவனைப் பகிரதன் வேண்டினான். 5-13
பிரமனை நோக்கித் தவம் செய்யுமாறு முனிவர் அறிவுறுத்தினார். 5-14
நாடாளும் பணியைச் சுமந்திரன் என்பவனிடம் ஒப்படைத்துவிட்டுப் பகிரதன் பதினாயிரம் (10,000) ஆண்டுகள் தவம் செய்தான். 5-15
'சகரம் தொட்டலால், "சாகரம்" எனப் பெயர் தழைப்ப,
மகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும்
நிகர் இல் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில்,
பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான். 5-11
'உலகம் யாவையும் பொது அறத் திகிரியை உருட்டி,
இவரும் மன்னவன் இருந்துழி, இறந்தவர் சரிதம்,
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட, அரசன்
திலகம் மண் உற வணங்கி நின்று, ஒரு மொழி செப்பும்: 5-12
'"கொடிய மா முனி வெகுளியின் மடிந்த எம் குரவர்
முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடு முறைமை
கடியுமாறு, எனக்கு அருந் தவம் அமைகுறு கருமம்,
அடிகள்! சாற்றுக" என்றலும், அந்தணன் அறைவான்: 5-13
'"வையம் ஆளுடை மன்னவர் மன்னவ! மடிந்தோர்
உய்ய, நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே,
செய்ய நாள் மலர்க் கிழவனை நோக்கி, நீ செய்தி;
நையல்!" என்று இனிது உரைத்தனன், நவை அறு முனிவன், 5-14
'ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி,
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி,
காலம் ஓர் பதினாயிரம் அருந் தவம் கழிப்ப,
மூல நான்மறைக் கிழவனும் வந்து, இவை மொழிவான்: 5-15
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment