கங்கை
பிரமன் பகிரதன் முன் தோன்றினான். முனிவன் சினத்தால் மாண்ட உன் முன்னோர் நரகம் செல்லாமல் இருக்கவேண்டுமானால் வானுலகில் ஓடும் கங்கை ஆறு உன் முன்னோரின் எலும்புகளின் மீது பாயவேண்டும் என்று பிரமன் கூறினான். 5-16
கங்கை ஆறு மண்ணுலகம் வந்தால் அதன் வேகத்தை முக்கண் சிவனைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது. எனவே சிவனை நோக்கித் தவம் செய்க என்றும் கூறினார். 5-17
பகிரதன் சிவனை நோக்கி முன்போலவே 10,000 ஆண்டுகள் தவம் செய்தான். சிவன் அவன் முன் தோன்றி உன் கருத்தினை நிறைவேற்றுவேன் என்று வாக்களித்தார். பகிரதன் கங்கையை நோக்கி 5,000 ஆண்டுகள் தவம் செய்தான். 5-18
கங்கை பகிரதன் முன் தோன்றினாள். நான் மண்ணுலகுக்கு வந்தால் என் வேகத்தை யார் தாங்க முடியும். தாங்குவேன் என்று சிவன் சொன்னது வியப்பாக உள்ளது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். 5-19
கரந்தை, ஊமத்தம், எருக்கு, கூவிளை, கடுக்கை(கொன்றை) மலர்களைத் தலையில் அணிந்துகொண்டிருக்கும் சிவனை நோக்கி, மீண்டும் இரண்டரை ஆண்டு பகிரதன் தவம் செய்தான். 5-20
'"நின் பெருந் தவம் வியந்தனம்; நினது நீள் குரவர்,
முன்பு இறந்தனர், அருந் தவன் முனிவின்; ஆதலினால்,
மன் பெரும் புவிஅதனில், வான் நதி கடிது அணுகி,
என்பு தோயுமேல், இருங் கதி பெறுவர்" என்று இசைத்தான். 5-16
'"மாக மா நதி புவியிடை நடக்கின், மற்று அவள்தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால்;
தோகை பாகனை நோக்கி, நீ அருந்தவம் தொடங்கு" என்று
ஏகினான், உலகு அனைத்தும் எவ் உயிர்களும் ஈன்றான். 5-17
'மங்கை பாகனை நோக்கி, முன் மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும், தழல் நிறக் கடவுள்
அங்கு வந்து, "நின் கருத்தினை முடித்தும்" என்று அகன்றான்;
கங்கையைத் தொழ, காலம் ஐயாயிரம் கழித்தான். 5-18
'ஒரு மடக் கொடி ஆகி வந்து, "உனது மா தவம் என்?
பொரு புனல் கொடி வரின், அவள் வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம்; மற்று இன்னும் நீ அறிந்து,
பெருகு நல் தவம் புரிக!" என, வர நதி பெயர்ந்தாள். 5-19
'கரந்தை, மத்தமோடு, எருக்கு அலர், கூவிளை, கடுக்கை,
நிரந்த பொற் சடை நின் மலக் கொழுந்தினை நினையா,
அரந்தை உற்றவன், இரண்டரை ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர, வரை உறை புனிதன், 5-20
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
பிரமன் பகிரதன் முன் தோன்றினான். முனிவன் சினத்தால் மாண்ட உன் முன்னோர் நரகம் செல்லாமல் இருக்கவேண்டுமானால் வானுலகில் ஓடும் கங்கை ஆறு உன் முன்னோரின் எலும்புகளின் மீது பாயவேண்டும் என்று பிரமன் கூறினான். 5-16
கங்கை ஆறு மண்ணுலகம் வந்தால் அதன் வேகத்தை முக்கண் சிவனைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது. எனவே சிவனை நோக்கித் தவம் செய்க என்றும் கூறினார். 5-17
பகிரதன் சிவனை நோக்கி முன்போலவே 10,000 ஆண்டுகள் தவம் செய்தான். சிவன் அவன் முன் தோன்றி உன் கருத்தினை நிறைவேற்றுவேன் என்று வாக்களித்தார். பகிரதன் கங்கையை நோக்கி 5,000 ஆண்டுகள் தவம் செய்தான். 5-18
கங்கை பகிரதன் முன் தோன்றினாள். நான் மண்ணுலகுக்கு வந்தால் என் வேகத்தை யார் தாங்க முடியும். தாங்குவேன் என்று சிவன் சொன்னது வியப்பாக உள்ளது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். 5-19
கரந்தை, ஊமத்தம், எருக்கு, கூவிளை, கடுக்கை(கொன்றை) மலர்களைத் தலையில் அணிந்துகொண்டிருக்கும் சிவனை நோக்கி, மீண்டும் இரண்டரை ஆண்டு பகிரதன் தவம் செய்தான். 5-20
'"நின் பெருந் தவம் வியந்தனம்; நினது நீள் குரவர்,
முன்பு இறந்தனர், அருந் தவன் முனிவின்; ஆதலினால்,
மன் பெரும் புவிஅதனில், வான் நதி கடிது அணுகி,
என்பு தோயுமேல், இருங் கதி பெறுவர்" என்று இசைத்தான். 5-16
'"மாக மா நதி புவியிடை நடக்கின், மற்று அவள்தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால்;
தோகை பாகனை நோக்கி, நீ அருந்தவம் தொடங்கு" என்று
ஏகினான், உலகு அனைத்தும் எவ் உயிர்களும் ஈன்றான். 5-17
'மங்கை பாகனை நோக்கி, முன் மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும், தழல் நிறக் கடவுள்
அங்கு வந்து, "நின் கருத்தினை முடித்தும்" என்று அகன்றான்;
கங்கையைத் தொழ, காலம் ஐயாயிரம் கழித்தான். 5-18
'ஒரு மடக் கொடி ஆகி வந்து, "உனது மா தவம் என்?
பொரு புனல் கொடி வரின், அவள் வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம்; மற்று இன்னும் நீ அறிந்து,
பெருகு நல் தவம் புரிக!" என, வர நதி பெயர்ந்தாள். 5-19
'கரந்தை, மத்தமோடு, எருக்கு அலர், கூவிளை, கடுக்கை,
நிரந்த பொற் சடை நின் மலக் கொழுந்தினை நினையா,
அரந்தை உற்றவன், இரண்டரை ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர, வரை உறை புனிதன், 5-20
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment