சிவன் சடையில் கங்கை அடங்கியது
பகிரதன் மீண்டும் சிவனை வேண்ட, சிவன் “அஞ்சவேண்டாம், துளியும் பிதிராவகையில் காப்பேன்” என்று கூறினார். பகிரதன் மீண்டும் 2,500 ஆண்டுகள் கங்கையை நோக்கித் தவம் செய்தான். 5-21
நீர், திருநீறு, காற்று, சருகு, கதிர்-ஒளி ஆகியவற்றை மட்டும் துய்த்துக்கொண்டு வேறு எதனையும் உண்ணாமல் 30,000 பருவம் பகிரதன் தவம் புரிந்தான். 5-22
பிரமன் படைத்த உலகமெல்லாம் நடுங்கும்படி கங்கை இறங்கிவந்தாள். அதில் ஒரு சொட்டும் சிந்தாவண்ணம் மலைமகள் கணவன் சிவன் தன் சடையில் வாங்கி மறைத்துக்கொண்டான். 5-23
பகிரதன் சிவனை வேண்டினான். புல்லில் இருக்கும் பனித்துளி விழுவது போலத் தன் தலையிலிருந்து சிறிதே ஒழுகுமாறு சிவபெருமான் கங்கையை மண்ணுலகில் விட்டான். 5-24
அப்படி இறங்கிய கங்கை சன்னு முனிவனின் (அகத்தியன்) வேள்வியை அழித்தது. அதனைக் கண்ட முனிவன் அதனைத் தன் குடங்கையில் அள்ளிக் குடித்தான். 5-25
'எதிர்ந்து, "நின் நினைவு என்?" என, இறைஞ்சி, "எம் பெரும!
அதிர்ந்து, கங்கை ஈது அறைந்தனள்" என்றலும், "அஞ்சேல்!
பிதிர்ந்திடா வகை காத்தும்" என்று ஏகிய பின்றை,
முதிர்ந்த மா தவம் இரண்டரை ஆயிரம் முடித்தான். 5-21
'பெருகும் நீரொடு, பூதியும், வாயுவும், பிறங்கு
சருகும், வெங் கதிர் ஒளியையும், துய்த்து, மற்று எதையும்
பருகல் இன்றியே, முப்பதினாயிரம் பருவம்,
உருகு காதலின் மன்னவன் அருந் தவம் உழந்தான். 5-22
'உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும்
இந்திராதியர் உலகமும், நடுக்குற இரைத்து,
வந்து தோன்றினள் வர நதி; மலைமகள் கொழுநன்
சிந்திடாது, ஒரு சடையினில் கரந்தனன் சேர. 5-23
'புல் நுனித் தரு பனி என, வர நதி, புனிதன்
சென்னியில் சுரந்து ஒளித்தலும், வணங்கினன், திகைத்து,
மன்னன் நிற்றலும், "வருந்தல்; நம் சடையள், வான் நதி இன்று"
என்ன விட்டனன், ஒரு சிறிது; அவனி போந்து இழிந்தாள். 5-24
'இழிந்த கங்கைமுன், மன்னவன் விரைவொடும் ஏக,
கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால்,
அழுந்தும் மா தவச் சன்னுவின் வேள்வியை அழிப்ப,
கொழுந்து விட்டு எரி வெகுளியன், குடங்கையில் கொள்ளா, 5-25
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
பகிரதன் மீண்டும் சிவனை வேண்ட, சிவன் “அஞ்சவேண்டாம், துளியும் பிதிராவகையில் காப்பேன்” என்று கூறினார். பகிரதன் மீண்டும் 2,500 ஆண்டுகள் கங்கையை நோக்கித் தவம் செய்தான். 5-21
நீர், திருநீறு, காற்று, சருகு, கதிர்-ஒளி ஆகியவற்றை மட்டும் துய்த்துக்கொண்டு வேறு எதனையும் உண்ணாமல் 30,000 பருவம் பகிரதன் தவம் புரிந்தான். 5-22
பிரமன் படைத்த உலகமெல்லாம் நடுங்கும்படி கங்கை இறங்கிவந்தாள். அதில் ஒரு சொட்டும் சிந்தாவண்ணம் மலைமகள் கணவன் சிவன் தன் சடையில் வாங்கி மறைத்துக்கொண்டான். 5-23
பகிரதன் சிவனை வேண்டினான். புல்லில் இருக்கும் பனித்துளி விழுவது போலத் தன் தலையிலிருந்து சிறிதே ஒழுகுமாறு சிவபெருமான் கங்கையை மண்ணுலகில் விட்டான். 5-24
அப்படி இறங்கிய கங்கை சன்னு முனிவனின் (அகத்தியன்) வேள்வியை அழித்தது. அதனைக் கண்ட முனிவன் அதனைத் தன் குடங்கையில் அள்ளிக் குடித்தான். 5-25
'எதிர்ந்து, "நின் நினைவு என்?" என, இறைஞ்சி, "எம் பெரும!
அதிர்ந்து, கங்கை ஈது அறைந்தனள்" என்றலும், "அஞ்சேல்!
பிதிர்ந்திடா வகை காத்தும்" என்று ஏகிய பின்றை,
முதிர்ந்த மா தவம் இரண்டரை ஆயிரம் முடித்தான். 5-21
'பெருகும் நீரொடு, பூதியும், வாயுவும், பிறங்கு
சருகும், வெங் கதிர் ஒளியையும், துய்த்து, மற்று எதையும்
பருகல் இன்றியே, முப்பதினாயிரம் பருவம்,
உருகு காதலின் மன்னவன் அருந் தவம் உழந்தான். 5-22
'உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும்
இந்திராதியர் உலகமும், நடுக்குற இரைத்து,
வந்து தோன்றினள் வர நதி; மலைமகள் கொழுநன்
சிந்திடாது, ஒரு சடையினில் கரந்தனன் சேர. 5-23
'புல் நுனித் தரு பனி என, வர நதி, புனிதன்
சென்னியில் சுரந்து ஒளித்தலும், வணங்கினன், திகைத்து,
மன்னன் நிற்றலும், "வருந்தல்; நம் சடையள், வான் நதி இன்று"
என்ன விட்டனன், ஒரு சிறிது; அவனி போந்து இழிந்தாள். 5-24
'இழிந்த கங்கைமுன், மன்னவன் விரைவொடும் ஏக,
கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால்,
அழுந்தும் மா தவச் சன்னுவின் வேள்வியை அழிப்ப,
கொழுந்து விட்டு எரி வெகுளியன், குடங்கையில் கொள்ளா, 5-25
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 9. அகலிகைப் படலம் - மிகைப்பாடல்கள்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment