மருதநில மக்கள்
16
நெஞ்சில் உறுதி, கண்ணில் சிவப்பு, காட்டி, பகைமை இல்லாமல் படைக்கலம் போல ஒருவரை ஒருவர் தாக்கிப் பயிற்சி செய்துகொள்ளும் வீரர்களின் வாழ்க்கை கோழிப் போர் போல் காணப்பட்டது.
17
பெண் எருமை ஈன்ற ஆண் எருமைக் கன்றுகள் மேகத்தோடு மேகம் மோதிக்கொள்வது போலச் சினத்துடன் முட்டிக்கொண்டன. இருள் இரண்டு கூறாகப் பிரிந்து ஒன்றை ஒன்று தாக்கிக் கொளுவது போல அது இருந்தது. அதனை வீரர்கள் கண்டு தம் தலைமுடியில் வண்டுகள் மொய்ப்ப மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
18
உழவர்கள் உழும் எருதுகளை அதட்டிக்கொண்டு ஓட்டினர். அவர்கள் உழும்போது முள்ளுத் தாமரையின் வெள்ளை நிற முளைகள் அறுந்து போயின. முத்தும் பொன்னும் மணிகளும் சிந்தின. வயலில் கிடக்கும் சங்குகள் ஒலித்தன. மீன்கள் துள்ளித் துடித்தன. ஆமை தன் முதுகைச் சொரிந்துகொண்டது. வரால் மீன்கள் ஓடி ஒளிந்துகொண்டன.
18 மிகை
முக்கனி, துவரம்பருப்பு, நெய், தயிர்க்கட்டி, வெல்லக்கட்டி, தனித்தனியே வைக்கப்பட்டிருக்கும் சோற்றினை, தாமும், தம் சுற்றத்தாரும், வந்த விருந்தினரும், சேர்ந்து உண்ணும் அமலை அந்தணர், அமுது படைப்போர் வீடுகளில் கேட்டது.
19
முறைமை அறிந்து ஆசையை நீக்கி, சினம் கொள்ள வேண்டிய இடத்தில் சினம் கொண்டு, தமக்குச் சேரவேண்டிய வரியை வாங்கி உயிரினங்களுக்கு வழங்கி, புகழுடன் திகழும் வேந்தன் காப்பாற்றுவதால் சுமை இல்லாமல் மக்கள் வாழ்ந்த தெய்வப் பூமி கோசல நாடு. அங்குள்ள நெய்தல் நிலத்தில் வங்கக் கப்பல்கள் தம் சுமையை இறக்கிவிட்டு முதுகை ஆற்றிக்கொள்ளும்.
20
நெல்லை அறுத்துக் கொண்டுவந்து களத்தில் போர் அடிப்பர். நெல்லை வறியவர்களுக்கு வழங்குவர். விருந்தினர் உண்ண வேண்டும் என்று வண்டிகளில் ஏற்றி மண்ணே நெளியுமாறு வீட்டுக்குக் கொண்டுவருவர்.
கறுப்புறு மனமும், கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி,
உறுப்புறு படையின் தாக்கி, உறு பகை இன்றிச் சீறி,
வெறுப்பு இல, களிப்பின் வெம் போர் மதுகைய, வீர ஆக்கை
மறுப்பட, ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்; 16
எருமை நாகு ஈன்ற செங் கண் ஏற்றையோடு ஏற்றை, 'சீற்றத்து
உரும் இவை' என்னத் தாக்கி, ஊழுற நெருக்கி, ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன; அதனை நோக்கி,
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப, மஞ்சுற ஆர்க்கின்றாரும்; 17
முள் அரை முளரி வெள்ளை முளை இற, முத்தும் பொன்னும்
தள்ளுற, மணிகள் சிந்த, சலஞ்சலம் புலம்ப, சாலில்
துள்ளி மீன் துடிப்ப, ஆமை தலை புடை கரிப்ப, தூம்பின் -
உள் வரால் ஒளிப்ப, -மள்ளர் உழு பகடு உரப்புவாரும்; 18
முந்து முக் கனியின் நானா முதிரையின் முழுத்த நெய்யின்
செந் தயிர்க் கண்டம் கண்டம் இடையிடை செறிந்த சோற்றின்
தம்தம் இல் இருந்து தாமும் விருந்தொடும் தமரினோடும்
அந்தணர் அமுதர் உண்டி அயிறலும் அமலைத்து எங்கும். 18 (மிகை)
முறை அறிந்து, அவாவை நீக்கி, முனிவுழி முனிந்து, வெஃகும்
இறை அறிந்து, உயிர்க்கு நல்கும், இசை கெழு வேந்தன் காக்கப்
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில், பொன்னின்
நிறை பரம் சொரிந்து, வங்கம், நெடு முதுகு ஆற்றும், நெய்தல். 19
எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள்
குறிகொளும் போத்தின் கொல்வார்; கொன்ற நெல் குவைகள் செய்வார்;
வறியவர்க்கு உதவி, மிக்க, விருந்து உண மனையின் உய்ப்பார்,
நெறிகளும் புதைய, பண்டி நிறைத்து, மண் நெளிய ஊர்வார். 20
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 2. நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
16
நெஞ்சில் உறுதி, கண்ணில் சிவப்பு, காட்டி, பகைமை இல்லாமல் படைக்கலம் போல ஒருவரை ஒருவர் தாக்கிப் பயிற்சி செய்துகொள்ளும் வீரர்களின் வாழ்க்கை கோழிப் போர் போல் காணப்பட்டது.
17
பெண் எருமை ஈன்ற ஆண் எருமைக் கன்றுகள் மேகத்தோடு மேகம் மோதிக்கொள்வது போலச் சினத்துடன் முட்டிக்கொண்டன. இருள் இரண்டு கூறாகப் பிரிந்து ஒன்றை ஒன்று தாக்கிக் கொளுவது போல அது இருந்தது. அதனை வீரர்கள் கண்டு தம் தலைமுடியில் வண்டுகள் மொய்ப்ப மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
18
உழவர்கள் உழும் எருதுகளை அதட்டிக்கொண்டு ஓட்டினர். அவர்கள் உழும்போது முள்ளுத் தாமரையின் வெள்ளை நிற முளைகள் அறுந்து போயின. முத்தும் பொன்னும் மணிகளும் சிந்தின. வயலில் கிடக்கும் சங்குகள் ஒலித்தன. மீன்கள் துள்ளித் துடித்தன. ஆமை தன் முதுகைச் சொரிந்துகொண்டது. வரால் மீன்கள் ஓடி ஒளிந்துகொண்டன.
18 மிகை
முக்கனி, துவரம்பருப்பு, நெய், தயிர்க்கட்டி, வெல்லக்கட்டி, தனித்தனியே வைக்கப்பட்டிருக்கும் சோற்றினை, தாமும், தம் சுற்றத்தாரும், வந்த விருந்தினரும், சேர்ந்து உண்ணும் அமலை அந்தணர், அமுது படைப்போர் வீடுகளில் கேட்டது.
19
முறைமை அறிந்து ஆசையை நீக்கி, சினம் கொள்ள வேண்டிய இடத்தில் சினம் கொண்டு, தமக்குச் சேரவேண்டிய வரியை வாங்கி உயிரினங்களுக்கு வழங்கி, புகழுடன் திகழும் வேந்தன் காப்பாற்றுவதால் சுமை இல்லாமல் மக்கள் வாழ்ந்த தெய்வப் பூமி கோசல நாடு. அங்குள்ள நெய்தல் நிலத்தில் வங்கக் கப்பல்கள் தம் சுமையை இறக்கிவிட்டு முதுகை ஆற்றிக்கொள்ளும்.
20
நெல்லை அறுத்துக் கொண்டுவந்து களத்தில் போர் அடிப்பர். நெல்லை வறியவர்களுக்கு வழங்குவர். விருந்தினர் உண்ண வேண்டும் என்று வண்டிகளில் ஏற்றி மண்ணே நெளியுமாறு வீட்டுக்குக் கொண்டுவருவர்.
கறுப்புறு மனமும், கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி,
உறுப்புறு படையின் தாக்கி, உறு பகை இன்றிச் சீறி,
வெறுப்பு இல, களிப்பின் வெம் போர் மதுகைய, வீர ஆக்கை
மறுப்பட, ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்; 16
எருமை நாகு ஈன்ற செங் கண் ஏற்றையோடு ஏற்றை, 'சீற்றத்து
உரும் இவை' என்னத் தாக்கி, ஊழுற நெருக்கி, ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன; அதனை நோக்கி,
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப, மஞ்சுற ஆர்க்கின்றாரும்; 17
முள் அரை முளரி வெள்ளை முளை இற, முத்தும் பொன்னும்
தள்ளுற, மணிகள் சிந்த, சலஞ்சலம் புலம்ப, சாலில்
துள்ளி மீன் துடிப்ப, ஆமை தலை புடை கரிப்ப, தூம்பின் -
உள் வரால் ஒளிப்ப, -மள்ளர் உழு பகடு உரப்புவாரும்; 18
முந்து முக் கனியின் நானா முதிரையின் முழுத்த நெய்யின்
செந் தயிர்க் கண்டம் கண்டம் இடையிடை செறிந்த சோற்றின்
தம்தம் இல் இருந்து தாமும் விருந்தொடும் தமரினோடும்
அந்தணர் அமுதர் உண்டி அயிறலும் அமலைத்து எங்கும். 18 (மிகை)
முறை அறிந்து, அவாவை நீக்கி, முனிவுழி முனிந்து, வெஃகும்
இறை அறிந்து, உயிர்க்கு நல்கும், இசை கெழு வேந்தன் காக்கப்
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில், பொன்னின்
நிறை பரம் சொரிந்து, வங்கம், நெடு முதுகு ஆற்றும், நெய்தல். 19
எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள்
குறிகொளும் போத்தின் கொல்வார்; கொன்ற நெல் குவைகள் செய்வார்;
வறியவர்க்கு உதவி, மிக்க, விருந்து உண மனையின் உய்ப்பார்,
நெறிகளும் புதைய, பண்டி நிறைத்து, மண் நெளிய ஊர்வார். 20
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 2. நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment