ஆய்ச்சியர், நுளைச்சியர்
26
தட்டுப்பாடே இல்லாத சமையல் அறையில் வடித்த கஞ்சி வெள்ளமானது கமுகந் தோட்டத்தின் வழியே ஓடி அங்கு வளரும் நெல் நாற்றை வளர்த்தது.
27
தலையில் கொண்டை உடைய குருவிகள் காலால் கிண்டும்போது தோன்றும் மணிகளை மின்மினிப் பூச்சிகள் என்று எடுத்துச் சென்று தம் கூடுகளில் வைத்துக்கொள்ளும்.
28
தயிர் கடையும் மத்தொலி கேட்கும். கடையும் கையிலுள்ள வளையல் வாய் விட்டு அலறும். நுண்ணிய இடை வளையும். - இதனால் ஆய்ச்சியர் வருந்துவர்.
29
தினையைக் கிள்ளிக்கொண்டு பறக்கும் கிளியின் ஒலி, மொட்டுகளில் மொய்க்கும் வண்டின் ஒலி, சோலையில் புள்ளின ஒலி, கொடை வழங்குபவர் இல்லங்களில் மங்கல வள்ளை ஒலி - ஆகியவை கேட்கும்.
30
பாகுப் பொருள்களை நுளைச்சியர் (நெய்தல் நில மகளிர்) குற்றுகின்றனர். அவர்கள் கற்காமல் பாயும் கண்களைக் கொண்டவர்கள். புடைத்து எறிந்த பாகுப் பொருள்களால் சிற்றில் கட்டி விளையாடுவர். அதில் கடல் முத்துக்கள் சிதறும்.
முட்டு இல் அட்டில், முழங்குற வாக்கிய
நெட்டுலைக் கழுநீர் நெடு நீத்தம் தான்,
பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய்,
நட்ட செந் நெலின் நாறு வளர்க்குமே. 26
சூட்டுடைத் துணைத் தூ நிற வாரணம்
தாள்-துணைக் குடைய, தகை சால் மணி
மேட்டு இமைப்பன; 'மின்மினி ஆம்' எனக்
கூட்டின் உய்க்கும், குரீஇயின் குழாம் அரோ. 27
தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்,
ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்,
தேயும் நுண் இடை சென்று வணங்கவும்,
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார். 28
தினைச் சிலம்புவ, தீம் சொல் இளங் கிளி;
நனைச் சிலம்புவ, நாகு இள வண்டு; பூம்
புனைச் சிலம்புவ, புள் இனம்; வள்ளியோர்
மனைச் சிலம்புவ, மங்கல வள்ளையே. 29
குற்ற பாகு கொழிப்பன -கோள் நெறி
கற்றிலாத கருங் கண் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்து, தம் முன்றிலில்,
சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே. 30
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 2. நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
26
தட்டுப்பாடே இல்லாத சமையல் அறையில் வடித்த கஞ்சி வெள்ளமானது கமுகந் தோட்டத்தின் வழியே ஓடி அங்கு வளரும் நெல் நாற்றை வளர்த்தது.
27
தலையில் கொண்டை உடைய குருவிகள் காலால் கிண்டும்போது தோன்றும் மணிகளை மின்மினிப் பூச்சிகள் என்று எடுத்துச் சென்று தம் கூடுகளில் வைத்துக்கொள்ளும்.
28
தயிர் கடையும் மத்தொலி கேட்கும். கடையும் கையிலுள்ள வளையல் வாய் விட்டு அலறும். நுண்ணிய இடை வளையும். - இதனால் ஆய்ச்சியர் வருந்துவர்.
29
தினையைக் கிள்ளிக்கொண்டு பறக்கும் கிளியின் ஒலி, மொட்டுகளில் மொய்க்கும் வண்டின் ஒலி, சோலையில் புள்ளின ஒலி, கொடை வழங்குபவர் இல்லங்களில் மங்கல வள்ளை ஒலி - ஆகியவை கேட்கும்.
30
பாகுப் பொருள்களை நுளைச்சியர் (நெய்தல் நில மகளிர்) குற்றுகின்றனர். அவர்கள் கற்காமல் பாயும் கண்களைக் கொண்டவர்கள். புடைத்து எறிந்த பாகுப் பொருள்களால் சிற்றில் கட்டி விளையாடுவர். அதில் கடல் முத்துக்கள் சிதறும்.
முட்டு இல் அட்டில், முழங்குற வாக்கிய
நெட்டுலைக் கழுநீர் நெடு நீத்தம் தான்,
பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய்,
நட்ட செந் நெலின் நாறு வளர்க்குமே. 26
சூட்டுடைத் துணைத் தூ நிற வாரணம்
தாள்-துணைக் குடைய, தகை சால் மணி
மேட்டு இமைப்பன; 'மின்மினி ஆம்' எனக்
கூட்டின் உய்க்கும், குரீஇயின் குழாம் அரோ. 27
தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்,
ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்,
தேயும் நுண் இடை சென்று வணங்கவும்,
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார். 28
தினைச் சிலம்புவ, தீம் சொல் இளங் கிளி;
நனைச் சிலம்புவ, நாகு இள வண்டு; பூம்
புனைச் சிலம்புவ, புள் இனம்; வள்ளியோர்
மனைச் சிலம்புவ, மங்கல வள்ளையே. 29
குற்ற பாகு கொழிப்பன -கோள் நெறி
கற்றிலாத கருங் கண் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்து, தம் முன்றிலில்,
சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே. 30
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 2. நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment