Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நாட்டுப் படலம் Kamba Ramayanam 23

திணை மயக்கம்

31
செம்மறி ஆடு போட்ட ஆண் கன்றுக்-குட்டிகள் முட்டிக்கொள்ளும் ஒலி கேட்டு இடி என நினைத்து வானம் மலையில் மின்னும்.
32
கன்றுகளுடன் வரும் பெண் யானைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு ஆண் யானைகள் அனுப்பும். மலையில் உழவர் ஒலி கேட்கும். இந்த ஒலிகளைக் கேட்டு அன்னம்  பறந்தோடும்.
33
வள்ளிக் கிழங்கு தோண்டுபவர் மணிகளைப் பெறுவர். மாம்பழங்களைத் துள்ளிக் குதித்துப் பறிப்பர். புன்னை மரங்கள் புள்ளி புள்ளியாகப் பூக்கும். தாமரையில் அன்னம் உறங்கும்.
34
முல்லை நிலத்துக் கோவலர் ஊதும் கொன்றைக் குழல் ஓசையைக் கேட்டுக்கொண்டு அவர்களின் முற்றத்தில் கன்றுகள் உறங்கும். உழத்தியர் குரவை ஆடுவர். நுளைச்சியர் (நெய்தல் மகளிர்) பாடும் செவ்வழிப் பண்ணோசை கேட்கும்.
35
சேம்பு, செங்கழுநீர் ஓரங்களில் சங்குப் பூச்சிகள் மேயும். மலையில் காற்றில் மூங்கில் ஆடுவதால், பாம்பு தொங்குவது போல, தேன் ஒழுகும். 

துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
உரும் இடித்தெனத் தாக்குறும் ஒல் ஒலி
வெருவி, மால் வரைச் சூல் மழை மின்னுமே.           31

கன்றுடைப் பிடி நீக்கிக் களிற்றினம்
வன் தொடர்ப் படுக்கும், வன வாரி சூழ்
குன்றுடைக் குல மள்ளர் குழூஉக் குரல்,
இன் துணைக் களி அன்னம் இரிக்குமே.           32

வள்ளி கொள்பவர் கொள்வன, மா மணி;
துள்ளி கொள்வன, தூங்கிய மாங்கனி;
புள்ளி கொள்வன, பொன் விரி புன்னைகள்;
பள்ளி கொள்வன, பங்கயத்து அன்னமே.        33

கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்
கன்று உறக்கும்-குரவை, கடைசியர்,
புன் தலைப் புனம் காப்புடைப் பொங்கரில்
சென்று இசைக்கும் - நுளைச்சியர் செவ்வழி.               34

சேம்பு கால் பொரச் செங்கழுநீர்க் குளத்
தூம்பு கால, சுரி வளை மேய்வன-
காம்பு கால் பொர, கண் அகல் மால் வரை,
பாம்பு நான்றெனப் பாய் பசுந் தேறலே.               35

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் -  2. நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...