Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - நாட்டுப் படலம் Kamba Ramayanam 24

குற்றமில்லா நாடு

36
மகளிர்க்கு அவர்களின் கண்களைப் போல, செல்வமும் கல்வியும் பூத்தன. அதனால் வருந்த வந்தவர்களுக்கெல்லாம் வழங்குவதும், நாள்தோறும் விருந்தோம்புதலும் அன்றி வேறு விருப்பம் இல்லாதவர்களாக அவர்கள் இருந்தனர். 
37
கறிகளைப் பிறை முகக் கத்தியால் வெட்டினர். அந்தக் கறித்துண்டுச் செல்வமும், பருப்பும், முத்துப் போன்ற அரிசியும் எல்லா இடங்களிலும் குவிந்திருந்தன.
38
கப்பல் நிதியத்தையும், நிலம் வளத்தையும், நிலத்தடி மணிகளையும், மக்கள் குலம் குடிமக்களுக்கு ஓழுக்கத்தையும் சுரந்தன.
39
நாட்டில் குற்றமே இல்லாத்தால் தண்டனை என்பதே இல்லை. எண்ணங்கள் செவ்விதாக இருப்பதால் யாரிடமும் சினமே இல்லே. ஆற்றல் மிக்க நல்லறம் அல்லது அல்லறம் இல்லாமையால் உயர்வோ இழிவோ யாருக்கும் இல்லை.
40
நெறி கடந்து பரந்தோடுபவை ஆற்று வெள்ளம் மட்டுந்தான். குறி அழிந்து போனவை அரவணைக்கும் தோள்கள் மட்டுமே. தேயும் ஒன்று இருக்கிறது என்றால் அது மங்கையரின் இடுப்பு மட்டுமே. வெறி (வெறித்தனம், மணம்) என்று ஒன்று உள்ளது என்றால் மகளிரின் மலர் சூடிய கூந்தலே.

பெருந் தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,
விருந்தும், அன்றி, விளைவன யாவையே? 36

பிறை முகத் தலை, பெட்பின், இரும்பு போழ்,
குறை நறைக் கறிக் குப்பை, பருப்பொடு,
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை,
உறைவ-கொட்பின ஊட்டிடம் தோறெலாம்.               37

கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,
நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம்.     38

கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இலாமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தையின் செம்மையால்;
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால்,
ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே.         39

நெறி கடந்து பரந்தன, நீத்தமே;
குறி அழிந்தன, குங்குமத் தோள்களே;
சிறிய, மங்கையர் தேயும் மருங்குலே;
வெறியவும், அவர் மென் மலர்க் கூந்தலே.   40

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் -  2. நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...