தேவர்களின் முறையீடு
சிவனும், பிரமனும் தேவர்களுடன் சென்று திருமாலை மகிழ்வுடன் தொழுதனர். 11
திருமாலின் காலடித் துளசியை அவர்கள் தம் தலைமேல் சூடிக்கொண்டு “அரக்கர்கள் அழிந்தனர்” என எண்ணிக்கொண்டு ஆடிப் பாடினர். 12
அப்போது திருமால் பொன்னாலான தன் அரியணையில் வீற்றிருந்தான். 13
அரக்கர் செய்யும் கொடுமைகளை அனைவரும் திருமாலிடம் கூறினர். 14
இராவணன் மற்றும் அனுசர் முதலான அரக்கர் கொடுமையால் தவம் செய்ய முடியவில்லை என முறையிட்டுக்கொண்டனர். 15
எழுந்தனர், கறைமிடற்று இறையும்; தாமரைச்
செழுந் தவிசு உவந்த அத் தேவும் சென்று, எதிர்
விழுந்தனர் அடிமிசை விண்ணுளோரொடும்;
தொழும்தொறும், தொழும் தொறும், களி துளங்குவார். 11
ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
'வீடினர் அரக்கர்' என்று உவக்கும் விம்மலால்,
சூடினர், முறை முறை துளவத் தாள்-மலர். 12
பொன்வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற,
என்னை ஆள் உடையவன் தோள்நின்று எம்பிரான்,
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து, அரி
துன்னு பொற் பீடமேல் பொலிந்து தோன்றினான். 13
விதியொடு முனிவரும், விண்ணுளோர்களும்,-
மதி வளர் சடைமுடி மழுவலாளனும்
அதிசயமுடன் உவந்து, அயல் இருந்துழி-
கொதி கொள் வேல் அரக்கர் தம் கொடுமை கூறுவார்: 14
'ஐ-இரு தலையினோன் அனுசர் ஆதியாம்
மெய் வலி அரக்கரால், விண்ணும் மண்ணுமே
செய் தவம் இழந்தன; -திருவின் நாயக!-
உய் திறம் இல்லை' என்று உயிர்ப்பு வீங்கினார். 15
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
சிவனும், பிரமனும் தேவர்களுடன் சென்று திருமாலை மகிழ்வுடன் தொழுதனர். 11
திருமாலின் காலடித் துளசியை அவர்கள் தம் தலைமேல் சூடிக்கொண்டு “அரக்கர்கள் அழிந்தனர்” என எண்ணிக்கொண்டு ஆடிப் பாடினர். 12
அப்போது திருமால் பொன்னாலான தன் அரியணையில் வீற்றிருந்தான். 13
அரக்கர் செய்யும் கொடுமைகளை அனைவரும் திருமாலிடம் கூறினர். 14
இராவணன் மற்றும் அனுசர் முதலான அரக்கர் கொடுமையால் தவம் செய்ய முடியவில்லை என முறையிட்டுக்கொண்டனர். 15
எழுந்தனர், கறைமிடற்று இறையும்; தாமரைச்
செழுந் தவிசு உவந்த அத் தேவும் சென்று, எதிர்
விழுந்தனர் அடிமிசை விண்ணுளோரொடும்;
தொழும்தொறும், தொழும் தொறும், களி துளங்குவார். 11
ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
'வீடினர் அரக்கர்' என்று உவக்கும் விம்மலால்,
சூடினர், முறை முறை துளவத் தாள்-மலர். 12
பொன்வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற,
என்னை ஆள் உடையவன் தோள்நின்று எம்பிரான்,
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து, அரி
துன்னு பொற் பீடமேல் பொலிந்து தோன்றினான். 13
விதியொடு முனிவரும், விண்ணுளோர்களும்,-
மதி வளர் சடைமுடி மழுவலாளனும்
அதிசயமுடன் உவந்து, அயல் இருந்துழி-
கொதி கொள் வேல் அரக்கர் தம் கொடுமை கூறுவார்: 14
'ஐ-இரு தலையினோன் அனுசர் ஆதியாம்
மெய் வலி அரக்கரால், விண்ணும் மண்ணுமே
செய் தவம் இழந்தன; -திருவின் நாயக!-
உய் திறம் இல்லை' என்று உயிர்ப்பு வீங்கினார். 15
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment