தசரதன் மகனாக வருவோம் என்றான், திருமால்
செங்கண் திருமாலே! நாங்கள் கொடுத்த வரத்தால் அரக்கர்கள் மூவுலகங்களையும் அடித்து அழிக்கின்றனர். இதனைத் தீர்த்துவையுங்கள். இல்லையேல் உலகை விழுங்கிவிடுவர் – என்று தேவர்கள் சிவனுடன் சென்று திருமாலிடம் முறையிட்டனர். 16
வருந்தாதீர்கள், அரக்கர்களைக் கொன்று உலகின் துன்பத்தைக் குறைப்பேன் – என்றான், திருமால். 17
வானத்தில் உள்ளவர்கள் அனைவரும் குரங்குகளாகப் பிறந்து காடு, மலை, நீர்நிலை எங்கும் உங்களது படையோடு வாருங்கள் என்று ஆனனம் (அருளாணை) வழங்கினான், திருமால். 18
நான் நாற்படைகளும் கொண்ட தசரதன் மகனாக வருவேன், என்றான், திருமால் 19
என் சங்கு, சக்கரம், பாம்பு ஆகிய மூன்றும் என் தம்பிகளாக வருவர், என்றான். 20
'எங்கள் நீள் வரங்களால், அரக்கர் என்று உளார்,
பொங்கு மூஉலகையும் புடைத்து அழித்தனர்;
செங் கண் நாயக! இது தீர்த்தி; இல்லையேல்,
நுங்குவர் உலகை, ஓர் நொடியில்' என்றனர். 16
என்றனர், இடர் உழந்து, இறைஞ்சி ஏத்தலும்,
மன்றல் அம் துளவினான், 'வருந்தல்; வஞ்சகர்-
தம் தலை அறுத்து, இடர் தணிப்பென் தாரணிக்கு;
ஒன்று நீர் கேண்ம்' என, உரைத்தல் மேயினான்: 17
'வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்,
கானினும், வரையினும், கடி தடத்தினும்,
சேனையோடு அவதரித்திடுமின் சென்று' என,
ஆனனம் மலர்ந்தனன் -அருளின் ஆழியான்: 18
'மசரதம் அனையவர் வரமும், வாழ்வும், ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்,
கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்,
தசரதன், மதலையாய் வருதும் தாரணி. 19
'வளையொடு திகிரியும், வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்,
இளையர்கள் என அடி பரவ ஏகி, நாம்,
வளைமதில் அயோத்தியில் வருதும்' என்றனன். 20
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
செங்கண் திருமாலே! நாங்கள் கொடுத்த வரத்தால் அரக்கர்கள் மூவுலகங்களையும் அடித்து அழிக்கின்றனர். இதனைத் தீர்த்துவையுங்கள். இல்லையேல் உலகை விழுங்கிவிடுவர் – என்று தேவர்கள் சிவனுடன் சென்று திருமாலிடம் முறையிட்டனர். 16
வருந்தாதீர்கள், அரக்கர்களைக் கொன்று உலகின் துன்பத்தைக் குறைப்பேன் – என்றான், திருமால். 17
வானத்தில் உள்ளவர்கள் அனைவரும் குரங்குகளாகப் பிறந்து காடு, மலை, நீர்நிலை எங்கும் உங்களது படையோடு வாருங்கள் என்று ஆனனம் (அருளாணை) வழங்கினான், திருமால். 18
நான் நாற்படைகளும் கொண்ட தசரதன் மகனாக வருவேன், என்றான், திருமால் 19
என் சங்கு, சக்கரம், பாம்பு ஆகிய மூன்றும் என் தம்பிகளாக வருவர், என்றான். 20
'எங்கள் நீள் வரங்களால், அரக்கர் என்று உளார்,
பொங்கு மூஉலகையும் புடைத்து அழித்தனர்;
செங் கண் நாயக! இது தீர்த்தி; இல்லையேல்,
நுங்குவர் உலகை, ஓர் நொடியில்' என்றனர். 16
என்றனர், இடர் உழந்து, இறைஞ்சி ஏத்தலும்,
மன்றல் அம் துளவினான், 'வருந்தல்; வஞ்சகர்-
தம் தலை அறுத்து, இடர் தணிப்பென் தாரணிக்கு;
ஒன்று நீர் கேண்ம்' என, உரைத்தல் மேயினான்: 17
'வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்,
கானினும், வரையினும், கடி தடத்தினும்,
சேனையோடு அவதரித்திடுமின் சென்று' என,
ஆனனம் மலர்ந்தனன் -அருளின் ஆழியான்: 18
'மசரதம் அனையவர் வரமும், வாழ்வும், ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்,
கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்,
தசரதன், மதலையாய் வருதும் தாரணி. 19
'வளையொடு திகிரியும், வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்,
இளையர்கள் என அடி பரவ ஏகி, நாம்,
வளைமதில் அயோத்தியில் வருதும்' என்றனன். 20
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment