Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - திரு அவதாரப் படலம் Kamba Ramayanam 52

யார்யார், யார்யாராக வந்தனர்

குரங்குகளாக வாருங்கள், தசரதன் மகனாக வருவோம் என்று திருமால் கூறியதும் தேவர்கள் எழுந்து துள்ளினர். நன்றி சொல்லிப் பாடினர். துளசி மாலையான் இன்று எங்களுக்கு அருள்புரிந்தான் என்று சொல்லிப் போற்றினர். 21
என் பொருமல் (உள்ளத்துன்பம்) போய்விட்டது, என்று இந்திரன் மகிழ்ந்தான். சிவனும், பிரமனும் துன்பம் நீங்கியது என்று மகிழ்ந்தான். கருடன் திருமாலை வணங்கினான். 22
கரடி வேந்தனாக (சாம்பவான்) வருக என்று கருடனுக்கு அருளாணை வழங்கினான், திருமால். 23
இந்திரன் என் பங்காக வாலியாக வருவேன் என்றான். சூரியன் வாலி மகன் அங்கதன் என வருவேன் என்றான். அரி (திருமாலின் எட்டாவது பிறப்பு, நரசிம்மம்) நீலனாக வருவேன் என்றான். 24
வாயு என் பங்கு மாருதி என்றான். புராரி (சிவன்) என் பங்கு காற்றின் மகனாக இருப்பேன் என்றான். 25

என்று அவன் உரைத்தபோது, எழுந்து துள்ளினார்;
நன்றிகொள் மங்கல நாதம் பாடினார்;-
'மன்றல் அம் செழுந் துளவு அணியும் மாயனார்,
இன்று எமை அளித்தனர்' என்னும் ஏம்பலால்.          21

'போயது எம் பொருமல்' என்னா, இந்திரன் உவகை பூத்தான்;
தூய மா மலர் உளோனும், சுடர்மதி சூடினோனும்,
சேய் உயர் விசும்பு உளோரும், 'தீர்ந்தது எம் சிறுமை' என்றார்;
மா இரு ஞாலம் உண்டோ ன், கலுழன்மேல் சரணம் வைத்தான்.            22

என்னை ஆளுடைய ஐயன், கலுழன் மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கி, பிதாமகன் பேசுகின்றான்:
"முன்னரே எண்கின்வேந்தன் யான்"-என, முடுகினேன்; மற்று,
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின்' என்றான்.       23

தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான், 'எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்' என்ன;
இரவி, 'மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன்' என்று ஓத;
அரியும், 'மற்று எனது கூறு நீலன்' என்று அறைந்திட்டானால்.  24

வாயு, 'மற்று எனது கூறு மாருதி' எனலும், மற்றோர்,
'காயும் மற்கடங்கள் ஆகி, காசினி அதனின்மீது
போயிடத் துணிந்தோம்' என்றார்; புராரி, 'மற்று யானும் காற்றின்
சேய்' எனப் புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ   25

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...