கலைக்கோட்டு முனிவன்
பாம்பு சுமக்கும் மண்ணுலகில் உள்ள மாந்தரை விலங்கு என்று எண்ணுபவன் கலைக்கோட்டு முனிவன். அவன் வந்து வேள்வி செய்தால் உனக்குப் புத்திரர்கள் உண்டு – என்று வசிட்டன் கூறினான். 31
கலைக்கோட்டு முனிவர் எங்கு உள்ளார் என்று தயரதன் வினவினான். 32
கவலையைப் போக்கி அருள் பாலிக்கும் உத்தானபாதன் மகன் உரோமபாதன் என்பவன் உலகை ஆண்டுகொண்டிருக்கிறான். 33
அவன் நாட்டில் மழையே பெய்யாமல் நின்றுவிட்டது. கலைக்கோட்டு-முனி வந்தால் மழை பொழியும் என்று சிலர் அவனுக்குக் கூறினர். 34
உலகிலிலுள்ள மக்களை விலங்கு என எண்ணும் முனிவரைக் கொண்டுவருவது எப்படி என்று அவன் எண்ணிக்கொண்டிருக்கையில், அழகிய மகளிர் எழுந்து நாங்கள் கொண்டுவருகிறோம் என்றனர். 35
'பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும்
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன், மா தவத்தன், எண்ணின்
பூந் தவிசு உகந்து உளோனும், புராரியும், புகழ்தற்கு ஒத்த
சாந்தனால் வேள்வி முற்றின், தணையர்கள் உளர் ஆம்' என்றான் 31
ஆங்கு, உரை இனைய கூறும் அருந் தவர்க்கு அரசன், செய்ய
பூங் கழல் தொழுது, வாழ்த்தி, பூதல மன்னர் மன்னன்,
'தீங்கு அறு குணத்தால் மிக்க செழுந் தவன் யாண்டை உள்ளான்?
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி, இறைவ!' என்றான். 32
'புத்து ஆன கொடு வினையோடு அருந் துயரம் போய் ஒளிப்ப,-புவனம் தாங்கும்
சத்து ஆன குணம் உடையோன், தயையினொடும் தண் அளியின் சாலை போல்வான்,
எத்தானும் வெலற்கு அரியான்,மனுகுலத்தே வந்து உதித்தோன்,இலங்கும் மோலி
உத்தானபாதன்,-அருள் உரோமபாதன் என்றுஉளன்,இவ் உலகை ஆள்வோன்; 33
'அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடுங் காலம் அளவது ஆக,
மின்னி எழு முகில் இன்றி வெந் துயரம் பெருகுதலும், வேத நல் நூல்
மன்னு முனிவரை அழைத்து, மா தானம் கொடுத்தும், வான் வழங்காது ஆக,
பின்னும், முனிவரர்க் கேட்ப, "கலைக்கோட்டு-முனி வரின், வான் பிலிற்றும்" என்றார். 34
'"ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை யாவது?" எனக் குணிக்கும் வேலை
சோதி நுதல், கரு நெடுங் கண், துவர் இதழ் வாய், தரள நகை, துணை மென் கொங்கை,
மாதர் எழுந்து, "யாம் ஏகி, அருந் தவனைக் கொணர்தும்" என, வணக்கம் செய்தார். 35
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
பாம்பு சுமக்கும் மண்ணுலகில் உள்ள மாந்தரை விலங்கு என்று எண்ணுபவன் கலைக்கோட்டு முனிவன். அவன் வந்து வேள்வி செய்தால் உனக்குப் புத்திரர்கள் உண்டு – என்று வசிட்டன் கூறினான். 31
கலைக்கோட்டு முனிவர் எங்கு உள்ளார் என்று தயரதன் வினவினான். 32
கவலையைப் போக்கி அருள் பாலிக்கும் உத்தானபாதன் மகன் உரோமபாதன் என்பவன் உலகை ஆண்டுகொண்டிருக்கிறான். 33
அவன் நாட்டில் மழையே பெய்யாமல் நின்றுவிட்டது. கலைக்கோட்டு-முனி வந்தால் மழை பொழியும் என்று சிலர் அவனுக்குக் கூறினர். 34
உலகிலிலுள்ள மக்களை விலங்கு என எண்ணும் முனிவரைக் கொண்டுவருவது எப்படி என்று அவன் எண்ணிக்கொண்டிருக்கையில், அழகிய மகளிர் எழுந்து நாங்கள் கொண்டுவருகிறோம் என்றனர். 35
'பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும்
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன், மா தவத்தன், எண்ணின்
பூந் தவிசு உகந்து உளோனும், புராரியும், புகழ்தற்கு ஒத்த
சாந்தனால் வேள்வி முற்றின், தணையர்கள் உளர் ஆம்' என்றான் 31
ஆங்கு, உரை இனைய கூறும் அருந் தவர்க்கு அரசன், செய்ய
பூங் கழல் தொழுது, வாழ்த்தி, பூதல மன்னர் மன்னன்,
'தீங்கு அறு குணத்தால் மிக்க செழுந் தவன் யாண்டை உள்ளான்?
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி, இறைவ!' என்றான். 32
'புத்து ஆன கொடு வினையோடு அருந் துயரம் போய் ஒளிப்ப,-புவனம் தாங்கும்
சத்து ஆன குணம் உடையோன், தயையினொடும் தண் அளியின் சாலை போல்வான்,
எத்தானும் வெலற்கு அரியான்,மனுகுலத்தே வந்து உதித்தோன்,இலங்கும் மோலி
உத்தானபாதன்,-அருள் உரோமபாதன் என்றுஉளன்,இவ் உலகை ஆள்வோன்; 33
'அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடுங் காலம் அளவது ஆக,
மின்னி எழு முகில் இன்றி வெந் துயரம் பெருகுதலும், வேத நல் நூல்
மன்னு முனிவரை அழைத்து, மா தானம் கொடுத்தும், வான் வழங்காது ஆக,
பின்னும், முனிவரர்க் கேட்ப, "கலைக்கோட்டு-முனி வரின், வான் பிலிற்றும்" என்றார். 34
'"ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை யாவது?" எனக் குணிக்கும் வேலை
சோதி நுதல், கரு நெடுங் கண், துவர் இதழ் வாய், தரள நகை, துணை மென் கொங்கை,
மாதர் எழுந்து, "யாம் ஏகி, அருந் தவனைக் கொணர்தும்" என, வணக்கம் செய்தார். 35
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment