![]() |
அழகியரும் கலைக்கோட்டு முனிவரும் போடிநாய்க்கனூர் கோயில் ஓவியம் |
அழகிய மகளிர் சென்றனர். 36
சென்ற மகளிர் பன்னசாலை அமைத்துக்கொண்டு தவம் செய்பவர் போல் தங்கியிருந்தனர். 37
கலைக்கோட்டு முனிவர் அம்மணமாக இருந்தார். மகளிரும் அம்மணமாக இருந்தனர். நம்மை விலங்கு என்று எண்ணிக்கொண்டிருப்பவர் நம் இல்லம் வந்திருக்கிறார் என்று சொல்லிக்கொண்டனர். 38
வந்தவர் அமர இருக்கை கொடுத்து வணங்கிய பின்னர் ஓடி ஒளிந்துகொண்டனர். 39
முனிவர் சில நாள் வந்து போனார். ஒருநாள் அந்த மகளிர் முனிவருக்கு வருக்கைப்பலா, மா, வாழை என்னும் முக்கனிகளைத் தந்தனர். முனிவர் அருந்தினார். 40
ஆங்கு, அவர் அம் மொழி உரைப்ப, அரசன் மகிழ்ந்து, அவர்க்கு, அணி, தூசு, ஆதி ஆய
பாங்கு உள மற்றவை அருளி, "பனிப் பிறையைப் பழித்த நுதல், பணைத்த வேய்த் தோள்,
ஏங்கும் இடை,தடித்த முலை,இருண்ட குழல்,மருண்ட விழி,இலவச் செவ்வாய்ப்
பூங்கொடியீர்! ஏகும்" என, தொழுது இறைஞ்சி, இரதமிசைப் போயினாரே. 36
'ஓசனை பல கடந்து, இனி ஒர் ஓசனை
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி,
பாசிழை மடந்தையர், பன்னசாலை செய்து,
ஆசு அறும் அருந் தவத்தவரின் வைகினார். 37
'அருந் தவன் தந்தையை அற்றம் நோக்கியே,
கருந் தடங் கண்ணியர், கலை வலாளன் இல்
பொருந்தினர்; பொருந்துபு, "விலங்கு எனாப் புரிந்து
இருந்தவர் இவர்" என, இனைய செய்தனர். 38
'அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து,
"இருக்க" என, இருந்த பின், இனிய கூறலும்,
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழா,
பொருக்கென எழுந்து போய், புரையுள் புக்கனர். 39
'திருந்து இழையவர், சில தினங்கள் தீர்ந்துழி,
மருந்தினும் இனியன வருக்கை, வாழை, மாத்
தருங் கனி பலவொடு, தாழை இன் கனி,
"அருந் தவ, அருந்து" என, அருந்தினான் அரோ. 40
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment