Friday, February 23, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - திரு அவதாரப் படலம் Kamba Ramayanam 57

கலைக்கோட்டு முனிவன் அரசன் உரோமபாதனுக்கு ஆசி வழங்கல்

மகளிர் முன்னும் பின்னும் தொடர நடுவில் கலைக்கோட்டு முனிவர் சென்றார். 46
எதிர்கொண்டு வரவேற்ற உரோமபாதன் முனிவர் அடியில் விழுந்து வணங்கினான். வாழ்ந்தோம் என்னும் நினைவோடு மகளிரை நோக்கி “என் துன்பத்தைப் போக்கினீர்கள்” என்று பாராட்டினான். 47
அரசனும் முனிவரும் இணைந்தது கண்ட தேவர்கள் “இது வஞ்சகச்செயல்” என்று எண்ணினர். அரசன் அவர்களை அமைதிப்படுத்தினான். 48
முனிவனும் அமைதி பெற்றான். 49
முனிவன் அரசனுக்கு ஆசி கூறிவிட்டுத் தேரில் ஏறி உரோமபதன் நகருக்குச் சென்றான். 50

'என்று எழுந்து, அரு மறை முனிவர் யாரொடும்
சென்று, இரண்டு ஓசனை சேனை சூழ்தர,
மன்றல் அம் குழலியர் நடுவண், மா தவக்
குன்றினை எதிர்ந்தனன் - குவவுத் தோளினான்.      46

'வீழ்ந்தனன் அடிமிசை, விழிகள் நீர் தர;
"வாழ்ந்தனெம் இனி" என, மகிழும் சிந்தையான்,
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி, "நீர்
போழ்ந்தனிர் எனது இடர், புணர்ப்பினால்" என்றான்.            47

'அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை,
வர முனி, "வஞ்சம்" என்று உணர்ந்த மாலைவாய்,
வெருவினர் விண்ணவர்; வேந்தன் வேண்டலால்,
கரை எறியாது அலை கடலும் போன்றனன்.                48

'வள் உறு வயிர வாள் மன்னன், பல் முறை,
எள்ள அரு முனிவனை இறைஞ்சி, யாரினும்
தள்ள அருந் துயரமும், சமைவும், சாற்றலும்,
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம் அரோ.            49

'அருள் சுரந்து, அரசனுக்கு ஆசியும் கொடுத்து,
உருள் தரும் தேரின்மீது ஒல்லை ஏறி, நல்
பொருள் தரும் முனிவரும் தொடரப் போயினன் -
மருள் ஒழி உணர்வுடை வரத மா தவன்.         50

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...