அரசவையில் முனிவர்
தேரிலிருந்து இறங்கி முனிவர் காலடிகளைத் தயரதன் தொழுதான். தயரதன் என்னும் கொடி படர்வதற்கு உதவும் கொழுகொம்பாக முனிவர் மாறினார். 71
முனிவர் ஆசி வழங்கினார். தசரதன் முனிவரைத் தன் தேரில் ஏற்றி அழைத்துவந்தான். 72
ஒரு கடிகை (24 நிமிடம் கொண்ட ஒரு முழுத்தம்) பொழுதில் தயரதன் முனிவருடன் அயோத்தி வந்தடைந்தான். 73
வசிட்டரும், விசிட்டரும் (முனிவரும்) அரசவைக்கு வந்தனர். 74
முனிவர்களை இருக்கையில் அமர்த்தி, தயரதன் மொழியலானான். 75
இழிந்து போய் இரதம், ஆண்டு, இணை கொள் தாள் மலர்
விழுந்தனன், வேந்தர்தம் வேந்தன், மெய்ம்மையால்,
மொழிந்தனன் ஆசிகள்-முதிய நான்மறைக்
கொழுந்து மேல் படர் தரக் கொழுகொம்பு ஆயினான். 71
அயல் வரும் முனிவரும் ஆசி கூறிட,
புயல் பொழி தடக் கையால் தொழுது, பொங்கு நீர்க்
கயல் பொரு விழியொடும் கலை வலாளனை,
இயல்பொடு கொணர்ந்தனன், இரதம் ஏற்றியே. 72
அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்
முடியுடை வேந்தன், அம் முனிவனோடும், ஓர்
கடிகையின் அடைந்தனன், -கமல வாள் முக
வடிவுடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே. 73
கசட்டுறு வினைத் தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய
வசிட்டனும், அரு மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும், வேத்தவை பொலிய மேவினார். 74
மா மணி மண்டபம் மன்னி, மாசு அறு
தூ மணித் தவிசிடை, சுருதியே நிகர்
கோ முனிக்கு அரசனை இருத்தி, கொள் கடன்
ஏமுறத் திருத்தி, வேறு, இனைய செப்பினான்: 75
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
தேரிலிருந்து இறங்கி முனிவர் காலடிகளைத் தயரதன் தொழுதான். தயரதன் என்னும் கொடி படர்வதற்கு உதவும் கொழுகொம்பாக முனிவர் மாறினார். 71
முனிவர் ஆசி வழங்கினார். தசரதன் முனிவரைத் தன் தேரில் ஏற்றி அழைத்துவந்தான். 72
ஒரு கடிகை (24 நிமிடம் கொண்ட ஒரு முழுத்தம்) பொழுதில் தயரதன் முனிவருடன் அயோத்தி வந்தடைந்தான். 73
வசிட்டரும், விசிட்டரும் (முனிவரும்) அரசவைக்கு வந்தனர். 74
முனிவர்களை இருக்கையில் அமர்த்தி, தயரதன் மொழியலானான். 75
இழிந்து போய் இரதம், ஆண்டு, இணை கொள் தாள் மலர்
விழுந்தனன், வேந்தர்தம் வேந்தன், மெய்ம்மையால்,
மொழிந்தனன் ஆசிகள்-முதிய நான்மறைக்
கொழுந்து மேல் படர் தரக் கொழுகொம்பு ஆயினான். 71
அயல் வரும் முனிவரும் ஆசி கூறிட,
புயல் பொழி தடக் கையால் தொழுது, பொங்கு நீர்க்
கயல் பொரு விழியொடும் கலை வலாளனை,
இயல்பொடு கொணர்ந்தனன், இரதம் ஏற்றியே. 72
அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்
முடியுடை வேந்தன், அம் முனிவனோடும், ஓர்
கடிகையின் அடைந்தனன், -கமல வாள் முக
வடிவுடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே. 73
கசட்டுறு வினைத் தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய
வசிட்டனும், அரு மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும், வேத்தவை பொலிய மேவினார். 74
மா மணி மண்டபம் மன்னி, மாசு அறு
தூ மணித் தவிசிடை, சுருதியே நிகர்
கோ முனிக்கு அரசனை இருத்தி, கொள் கடன்
ஏமுறத் திருத்தி, வேறு, இனைய செப்பினான்: 75
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment