![]() |
போடிநாய்க்கனூர் கோயில் ஓவியம் \ தயரதன் மூன்று மனைவியருக்கும் வெண்பிண்டம் பகிர்ந்தளித்தல் |
முனிவன் சொன்னபடி தயரதன் வெண்ணிற பிண்டத்தின் ஒரு பகுதியைக் கோசலை கையில் கொடுத்தான். சங்கு ஒலித்தது. 86
கைகேயி கையிலும் ஒரு பகுதியைக் கொடுத்தான். 87
சுமத்திரை கையிலும் ஒரு பகுதியைக் கொடுத்தான். 88
கையில் ஒழுகிக்கொண்டிருந்த பகுதியையும் சுமத்திரைக்கு வழங்கினான் 89
குதிரை வேள்வி, மகப்பேறு வேள்வி இதண்டும் முடிந்த பின்னர் தயரதன் எழுந்தான். 90
மா முனி பணித்திட, மன்னர் மன்னவன்,
தூம மென் சுரி குழல் தொண்டைத் தூய வாய்க்
காமரு கோசலை கரத்தில், ஓர் பகிர்,
தாம் உற அளித்தனன், சங்கம் ஆர்த்து எழ. 86
கைகயன் தனையைதன் கரத்தும், அம் முறைச்
செய்கையின் அளித்தனன், தேவர் ஆர்த்து எழ-
பொய்கையும், நதிகளும், பொழிலும், ஓதிமம்
வைகுறு கோசல மன்னர் மன்னனே. 87
நமித்திரர் நடுக்குறு நலம் கொள் மொய்ம்புடை
நிமித் திரு மரபுளான், முன்னர், நீர்மையின்
சுமித்திரைக்கு அளித்தனன் - சுரர்க்கு வேந்து, 'இனிச்
சமித்தது என் பகை' என, தமரொடு ஆர்ப்பவே. 88
பின்னும், அப் பெருந்தகை, பிதிர்ந்து வீழ்ந்தது-
தன்னையும், சுமித்திரைதனக்கு நல்கினான் -
ஒன்னலர்க்கு இடமும், வேறு உலகின் ஓங்கிய
மன்னுயிர்தமக்கு நீள் வலமும், துள்ளவே. 89
வாம் பரி வேள்வியும், மகாரை நல்குவது
ஆம் புரை ஆகுதி பிறவும், அந்தணன்
ஓம்பிட முடிந்தபின், உலகு காவலன்
ஏம்பலோடு எழுந்தனன் - யாரும் ஏத்தவே. 90
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment