![]() |
கலைக்கோட்டு முனிவர் ஊர் திரும்பல் - போடிநாய்க்கனூர் கோயில் ஓவியம் |
பின்னர் முருடு முதலான பல இசைக்கருவி முழக்கத்திடன் தயரதன் அரசவைக்குச் சென்றான். 91
கோயில் தெய்வங்கள், வானோர், அந்தணர் ஆகியோருக்குத் தயரதன் பொன்னை மழைபோல் வழங்கினான். 92
தம் சிற்றரசர்களுக்குச் செல்வம், தேர், குதிரை, ஆடை முதலானவற்றை வழங்கினான். பின்னர் சரயு ஆற்றில் இசை முழக்கத்துடன் நீராடினான். 93
பின் அரசவைக்கு வந்து வசிட்ட முனிவன் திருவடிகளை வணங்கினான். 94
சிருங்க மாமுனி (கலைக்கோட்டு முனிவர்) வசிட்டனிடம் ஆசி பெற்றுக்கொண்டு ஊர் திரும்பினார். 95
முருடொடு பல் இயம் முழங்கி ஆர்த்தன;
இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின;
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி,
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான். 91
செய்ம் முறைக் கடன் அவை திறம்பல் இன்றியே
மெய்ம் முறைக் கடவுளோர்க்கு ஈந்து, விண்ணுளோர்க்கு
அம் முறை அளித்து, நீடு அந்தணாளர்க்கும்
கைம் முறை வழங்கினன், கனக மாரியே. 92
வேந்தர்கட்கு, அரசொடு, வெறுக்கை, தேர், பரி,
வாய்ந்த நல் துகிலொடு, வரிசைக்கு ஏற்பன
ஈந்தனன்; பல் இயம் துவைப்ப ஏகி, நீர்
தோய்ந்தனன் - சரயு நல் துறைக்கண் எய்தியே. 93
முரசு இனம் கறங்கிட, முத்த வெண்குடை
விரசி மேல் நிழற்றிட, வேந்தர் சூழ்தர,
அரசவை அடைந்துழி, அயனும் நாண் உற
உரை செறி முனிவன் தாள் வணங்கி, ஓங்கினான். 94
அரிய நல் தவமுடை வசிட்டன் ஆணையால்,
இரலை நல் சிருங்க மா இறைவன் தாள் தொழா,
உரிய பற்பல உரை பயிற்றி, 'உய்ந்தனென்;
பெரிய நல் தவம் இனிப் பெறுவது யாது?' என்றான். 95
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 5. திரு அவதாரப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment